கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 9

ஜோக்ஸ்!       



1.      அவரு ரயில்வேயில டிடி ஆரா இருக்கலாம்! அதுக்காக இப்படி பண்ணக் கூடாது!
    அப்படி என்ன செஞ்சாரு!
   கல்யாணத்துக்கு வந்தவங்க கிட்ட அடையாள அட்டை கேட்டு செக் பண்ணித்தான் உள்ளே அனுப்புறாரு!

2.      தலைவர் அந்த கிளப்புல நுழைஞ்சதும் செம கலாட்டாவாயிருச்சு!
எப்படி?
 வேட்டி கட்டித்தானே நுழையக்கூடாதுன்னு அவிழ்த்து மேலே போட்டுக்கிட்டு அண்டர்வேரோட உள்ளே நுழைஞ்சிட்டார்!

3.      அவர் ரொம்ப இடிஞ்சு போயிருக்கார்!
அப்ப அடுக்குமாடி குடியிருப்புல வீடு வாங்கி இருக்காருன்னு சொல்லுங்கோ!

4.      சீரியல் டைரக்டர்கிட்ட பிஸினஸ் வச்சிக்கிட்டது தப்பா போச்சு?
ஏன் சீக்கிரம் முடிக்காம இழுத்து அடிச்சிக்கிட்டு இருக்கார்!

5.      தலைவருக்கு சேவை என்றால் ரொம்ப பிடிக்குமாமே?
    அட நீ வேற! அது மக்கள் சேவை இல்லை! திங்கற சேவை!

6.      அவரு கட்சிக்கு மாடா உழைச்சும் பிரயோசனம் இல்லையா?
ஆமாம் கறக்கற வரைக்கும் கறந்துட்டு விரட்டி விட்டுட்டாங்க!


7.      அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
ஸ்கேன் பண்றதுக்கு ஜிராக்ஸ் கடைக்கு எழுதிக் கொடுக்கிறாரே!

8.      தினமும் கால்நடையா ஒரு மைல் நடந்து பாருங்க!
அவ்ளோ தூரம் முட்டி போட்டுக்கிட்டு நடக்க முடியாது டாக்டர்!

9.      நோன்பு கஞ்சி திறப்பு விழாவுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போயிருச்சு!
ஏன்?
கஞ்சியை எல்லாம் பிரிட்ஜ்ல வைக்காம பீரோவுல ஏன் பூட்டி வைக்கிறீங்கன்னு கேக்கறாரு!

10.  அவர் இருபத்து நாலுமணி நேரமும் பேஸ்புக்கிலேயே மூழ்கி இருந்தாரு..
அப்புறம்?
அவங்க வீட்டுல யாரும் அவரை லைக் பண்ணாம போக் பண்ணிட்டாங்க!


11.  இன்னிக்கு சமையல்ல உப்பு கொஞ்சம் தூக்கலாயிருச்சு!
    அப்புறம்?
   அப்புறம் என்ன கரிச்சிக் கொட்டிக்கிட்டே இருந்தா!

12.  அவர் வாழ்க்கையே ஆட்டம் கண்டிருச்சு…
அடுக்குமாடி பில்டிங் ஏதாவது கட்டிக்கிட்டு இருக்காரா?

13.  மன்னர் போரில் வில்லேந்தி பார்த்தார் ஆனால்..
என்ன ஆனால்..
எதிரியிடம் கையேந்தும் நிலைக்கு ஆளாகிவிட்டார்!

14.  டெய்லி ஒரு பெண்ணை பிக்கப் பண்ணி போயிட்டிருந்தியே என்னாச்சு?
அவ என்னை ட்ராப் பண்ணிட்டு போயிட்டா!


15. வீரவசனம் பேசிய எதிரி மன்னன் நம் மன்னரின் ஒரே வார்த்தையை கேட்டு அசந்துவிட்டானா?அப்படி என்ன சொன்னார்!

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்! வேணாம் அழுதுடுவேன்னுதான்!

16. தலைவர் புதுசா கார் வாங்கணும்னு ஆசைப்பட்டார்?
    அப்புறம்?
 தன் கட்சியை எதுத்து பேசி ஆளுங்கட்சியிலே சேர்ந்துட்டாரு!

17. பொண்ணு குணிஞ்ச தலை நிமிராதுன்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா எப்படி?
   எப்பவும் போன்லே எப்.பி யே மேஞ்சிக்கிட்டு இருக்கிறா!

18.பொண்ணு பார்க்க வந்த இடத்திலே என்ன கலாட்டா?
  பொண்ணு எங்கேன்னு கேட்டா தண்ணி அடிக்க போயிருக்குதுன்னு சொல்லி இருக்காங்க!

19. மாப்பிள்ளைக்கு மேல் வருமானம் ஜாஸ்தின்னு சொல்றீங்களே எங்க வேலை பார்க்கிறார்!
   திருப்பதியிலே மொட்டை அடிக்கிறார்!

20. வரிக்கு வரி புலவர்கள் புகழ்ந்தும் மன்னர் வாய் திறக்கவில்லையாமே?
  ஆமாம் மன்னருக்கு பொய்யுரை பிடிக்காதாம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. அத்தனையும் சிறப்பான சிரிப்புதான் பாஸூ

    ReplyDelete
  2. ரசித்து சிரித்தேன்....

    ReplyDelete
  3. கலர்புல் படத்தோட ஜோக்கு போட்டு கலக்கிட்டீங்க !

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை.....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. ரசித்தேன்
    சிரித்தேன்
    நன்றி
    நண்பரே

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவைத் தொகுப்பு நண்பரே. இரசித்தேன்.

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை. எனக்கு அந்த வேட்டி துணுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,

    ReplyDelete
  8. அனைத்தும் ரசித்தேன் சிரித்தேன் நண்பரே...

    ReplyDelete
  9. கொஞ்சம் என்ன அதிகமாகவே சிரித்தேன் பதிவைப் படித்ததும். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. ஹஹா.. சிரிப்பூ.. டி.டி.ஆர் ஜோக் என் ப்பேவரட்..

    ReplyDelete
  11. ஹாஹாஹா சூப்பர்! ரொம்பவே சிரிச்சோம்...அப்படியே மணத்தக்காளிக் கீரை உங்க வீட்டுல இருந்துச்சுனா கொடுத்து விடுங்க...இண்ணும் இல்ல சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு! அதான்!

    ReplyDelete
  12. நல்ல நகைச்சுவை பகிர்வு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!