தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 6

தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 6


நாலு முழ வேட்டியில்
நர்த்தனமாடுது!
தமிழன் பண்பாடு!

வேட்டிக்கு மறுவாழ்வு
கொடுத்தது
கிரிக்கெட் கிளப்

மணலில் உருவானது மலை!
மலையில் மறைந்து போனது
மழை!

குடியை வளர்த்து
குடியை அழிக்கிறது
குடியாட்சி!

சாலைகள் வளர்ந்தன!
அழிந்தன
கிராமங்கள்!


அரசியல் வலையில்
சிக்கியது
மீனவன் உயிர்!

வளைந்து வளைந்து
உயர்கிறார்கள்
அரசியல்வாதிகள்!

நஞ்சோடிய சமூகம்!
கருகின பெண்
பிஞ்சுகள்!

மேசைத் தட்டல்!
மேலெழுந்து பரவியது!
அழுக்கு!

பொதுவான கடவுள்!
வகைப்படுத்தி தரிசனம்!
நுழைவுச்சீட்டு!

கல்வியைவிற்று
பட்டம் வாங்குகிறார்கள்!
கல்வித் தந்தைகள்!

கடன்பட்டு வாங்கினார்கள்
கனவாகிப்போனது
களவுபோன வீடு!

அழையாவீட்டில்
நுழையும் விருந்தாளியானது
மொழித் திணிப்பு!

சுமை ஏற்றி
பளு குறைக்கின்றது
டாஸ்மாக்!

ஏறும்விலைவாசி
இறங்கிப் போகிறது
மக்களின் உயிர்மூச்சு!

தண்ணீர் விற்பனையில்
தன்னிறைவு கண்டது
தமிழகம்!

சீஸாக்களில் அடைபட்டு
பைசாக்கள் ஆனது
தண்ணீர்!


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அத்துனையும் அருமை.

    ReplyDelete
  2. எல்லா வரிகளையும் ரசித்து படித்தேன்.

    அதிலும் நீங்கள் ஏற்கனவே சொன்ன வேட்டிப் பதிவுக்கும்,

    "//வேட்டிக்கு மறுவாழ்வு
    கொடுத்தது
    கிரிக்கெட் கிளப்
    //"

    இந்த வரிகளுக்கும் நல்லதொரு ஒற்றுமை.

    ReplyDelete
  3. அனைத்துமே, அருமையாக இருக்கிறது நண்பரே...

    ReplyDelete
  4. குறுகத் தருகிறீர் கோடி பொருளாம்!
    விறுவிறென வார்க்கும் வியப்பு!

    அனைத்தும் உள்ளார்ந்த பொருளோடு
    மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை அருமை அருமை

    ReplyDelete
  6. நாட்டு நடப்பை அருமையாய் கவிதை ஆக்கி விட்டீர்கள் !

    ReplyDelete
  7. அருமை மிக அருமை அசத்திவிட்டீர்கள் சுரேஷ்!

    ReplyDelete
  8. அத்துனையும் அருமை.

    ReplyDelete
  9. சீஸாக்களில் அடைபட்டு
    பைசாக்கள் ஆனது
    தண்ணீர்!
    அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!