பூமிக்கு வந்த நட்சத்திரம்! பாப்பாமலர்!

பூமிக்கு வந்த நட்சத்திரம்!


ரொம்ப காலத்துக்கு முன்னாடி வானத்துல ஒரு நட்சத்திரக் கூட்டம் ஜகஜோதியா மின்னிக்கிட்டு இருந்துச்சு! அந்த நட்சத்திரக் கூட்டத்துல ஒரு நட்சத்திரம் ஆகாயத்தில இருந்து பூமியைப் பார்த்தது. உயரமான மலைகளும், ஆறுகளும், பச்சைப் பசேல் என்கிற காடுகளும் அதும் கண்ணைக் கவர்ந்தது. அதுக்கு பூமிக்கு போகனும்னு ஆசை வந்தது. உடனே அது மத்த நட்சத்திரங்கள் கிட்ட “கீழே பாருங்க! பூமி எவ்ளோ அழகா இருக்கு! அங்க போயிட்டு வருவோமா?ன்னு கேட்டுது.
   உடனே மத்த நட்சத்திரங்கள் எல்லாம் அந்த நட்சத்திரம் கிட்டே சொன்னது, “தூரத்துப் பச்சை கண்ணுக்கு இனிமையாத்தான் இருக்கும். நாம நம்மளோட இடத்துலதான் இருக்கணும். தெரியாத இடத்துக்குப் போய் ஆபத்தை சந்திக்க கூடாது! பூமியோட அழகை தூரத்துல இருந்து ரசிக்கிறதோட நிறுத்திக்க!” அப்படின்னு சொல்லுச்சுங்க.
   அப்போதைக்கு சரின்னு சொன்ன அந்த நட்சத்திரம், எப்படியும் பூமிக்கு வந்தே தீரனும்னு முடிவு பண்ணிருச்சு! மத்த நட்சத்திரங்கள் அசந்தபோது அப்படியே நழுவி பூமியை நோக்கி பறந்து வர ஆரம்பிச்சிருச்சு.
    பூமியை நெருங்க நெருங்க அதனோட பலம் குறைஞ்சுப் போச்சு! ஒரு சின்ன நெருப்பு பந்து போல அது பூமியிலே வந்து விழுந்துச்சு! அது விழுந்த இடம் ஒரு காடு! கீழே நிறைய சருகுங்க இருக்கவும் அந்த இடமே அப்படியே பத்திக்கிச்சு! இது என்னடா இது புது சோதனை!  அப்படின்னு நட்சத்திரம் அழ ஆரம்பிச்சுச்சு! நல்ல வேளை! தீடிர்னு மழை பெய்ய ஆரம்பிக்கவும் காட்டுத் தீ அணைஞ்சி போச்சு! அப்படியே நட்சத்திரம் அங்க இருந்த ஒரு குகைக்குள்ளாற போய் ஒளிஞ்சிகிச்சு!
   அந்த குகையில ஒரு சிங்கம் வசித்து வந்தது! நெருப்பு பந்து ஒண்ணு உள்ளே நுழைய குகையே பிரகாசமா மாறிப்போனதும் அந்த சிங்கத்துக்கு பயத்தை உண்டாக்கிருச்சு! அது பயந்து போய் குகையை விட்டு ஓடிப்போய் காட்டுல நம்ம காட்டுக்கு புதுசா ஒரு நெருப்பு மிருகம் வந்துருக்கு! அப்படின்னு சொல்லுச்சு! அப்ப நரியார், நெருப்பு மிருகமா? அப்படி ஒரு மிருகத்தை கேள்விப்பட்டது இல்லையே! வாங்க போய் பார்ப்போம்! என்று எல்லா மிருகங்களும் சேர்ந்து குகைகிட்ட போச்சுங்க!

   அந்த குகை  இப்ப இருண்டு கிடந்தது! மூலையிலே நட்சத்திரம்  ‘மினுக் மினுக்’னு ஒளிர்ந்துகிடந்தது. நரி என்ன ராஜா நெருப்பு மிருகம்னு சொன்னீங்க? இங்க எதுவும் காணோமே! அங்க ஏதோ சிறு பொறிதானே இருக்கு? அப்படின்னு கேட்டுச்சு!
    அந்த மிருகம் எங்கேயே போய் ஒளிஞ்சிருச்சு போல! எதுக்கும் நாம எல்லோரும் உஷாரா இருக்கணும்! அப்படின்னு எச்சரிக்கை பண்ணுச்சு சிங்க ராஜா. மிருகங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து வரவும் அந்த நட்சத்திரம்தான் உண்மையிலேயே பயந்து போயிருச்சு! புவி ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்ட அது தன் சக்தியை கொஞ்சம் கொஞ்சமா இழந்துகிட்டு இருந்தது.
  மத்த நட்சத்திரங்க பேச்சை கேட்காம இங்க வந்து அகப்பட்டுக்கிட்டோமோன்னு அழ ஆரம்பிச்சிருச்சு! அப்புறமா மனசை தேத்திக்கிட்டு வெளியே வந்துச்சு! அப்படியே மெல்ல நடந்து ஒரு ஊர்ல நுழைஞ்சது.  ஊர் முனையிலே ஒரு பாட்டி அடுப்பு பத்தவைக்க முனைஞ்சிகிட்டு இருந்தாங்க! அங்க போய் நின்னுச்சு
   அந்த பாட்டிக்கு ஆச்சர்யம்! நெருப்பு பத்த வைக்கிறதுக்கு முன்னாடியே நெருப்பு வந்துருச்சே! இது என்ன அதிசயம்னு நட்சத்திரத்தை அடுப்புல தள்ளி இன்னும் கொஞ்சம் சுள்ளிகளை போட்டு  பத்தவைக்க நட்சத்திரத்துக்கு எப்படி வெளியே வரதுன்னு தெரியலை! பாட்டி அசந்த சமயம் அங்கிருந்து துள்ளி குதிச்சு ஒரே ஓட்டமா ஓடிருச்சு! அது அப்படி ஓடிப்போய் அந்த ஊரில இருந்த ஒரு குடிசையில விழுந்தது. குடிசை அப்படியே புகைஞ்சு எரிய ஆரம்பிக்கவும் ஊர்க்காரங்க எல்லாம் குடிசை எரியுது குடிசை எரியுது! நிறைய தண்ணீரை பிடிச்சு இறைச்சாங்க! ஜில்லுனு தண்ணி விழவும் நட்சத்திரம் இன்னும் சக்தி இழந்து போச்சு! தப்பிச்சா போதும்னு அந்த குடிசையில இருந்து கீழே குதிச்சு ஒரு பொந்துக்குள்ள புகுந்துருச்சு! அதன் உடம்பு எல்லாம் கருத்துப் போச்சு! கொஞ்சமாத்தான் நெருப்பு இருந்துச்சு எப்ப நம்ம வீட்டுக்குப் போவோம்னு அது யோசிக்க ஆரம்பிச்சுது.

 பொழுது சாய்ந்து போச்சு! வானத்துல நட்சத்திரங்கள் முளைக்கவும் கீழே இருந்து மேலே இருக்கிற தோழர்களை பார்த்ததும் அதுக்கு வானத்துக்கு போகனும்னு ஆசை வந்துருச்சு! எம்பி எம்பி குதிச்சு மேலே பறக்க முயற்சி பண்ணிச்சு! ஆனா அதனால முடியலே! குதிச்சு குதிச்சு களைச்சி போயிருச்சு! அப்படியே கீழே படுத்து உறங்கிருச்சு!
   வானத்துல இருந்த நட்சத்திரங்கள் அப்பத்தான் நம்ம நட்சத்திரத்துல ஒண்ணை காணோம்னு தேட ஆரம்பிச்சுது! பூமிக்கு போயிருக்குமோன்னு ஒரு நட்சத்திரம் சொல்லவும் எல்லா நட்சத்திரமும்  சரி வாங்க பூமிக்குப் போய் தேடலாம்னு அப்படியே கீழே இறங்கி வந்து தேட ஆரம்பிச்சுதுங்க!
   அப்ப இந்த நட்சத்திரம் போலவே அந்த நட்சத்திரங்களும் பூமியை நெருங்க தன் சக்தியை இழந்து சின்னதா மாறிப்போச்சு! அப்படியே தேடி இந்த குட்டி நட்சத்திரத்தை கண்டுபிடிச்சுதுங்க! சரி இந்த நட்சத்திரத்தை கூட்டிக்கிட்டு போகலாம்னு பறக்க நினைச்சா அதுங்களாலே முடியலை!
     அப்ப இதுங்க வெளிச்சத்தை பார்த்து சில பூச்சிங்க அங்க வந்துதுங்க! அந்த பூச்சிங்க நீங்க யாரு? இவ்வளோ வெளிச்சமா இருக்கீங்களேன்னு நட்சத்திரங்களை பார்த்து கேட்டுச்சுங்க!
   நாங்கள்ளாம் நட்சத்திரங்கள்! பூமியை பார்க்க வந்தோம்! பூமியை நெருங்கினதும் எங்க சக்தி குறைஞ்சு இப்படி சின்னதா ஆயிட்டோம்! திரும்பவும் வானத்துக்கு போக முடியலை! எங்களை வானத்துல தூக்கிப் போய் உங்களாலே விட முடியுமான்னு நட்சத்திரங்கள் கேட்டுதுங்க.

   பூச்சிகள் யோசனை பண்ணிச்சு! நட்சத்திரங்களை வானத்துல விடற சாக்கிலே வானத்தை சுத்தி பார்க்கலாம்! நிலவை கிட்ட இருந்து பார்க்கலாம்னு அதுங்க ஆசை பட்டுதுங்க. சரி கூட்டிக்கிட்டு போறோம்னு சொல்லி அந்த நட்சத்திரங்களை சுமந்துகிட்டு பறக்க ஆரம்பிச்சுதுங்க! ஆனா எவ்ளோதான் பறந்தாலும் அதுங்களாலே வானத்தை எட்டவே முடியலை!
   கீழே விழுந்த நட்சத்திரங்களை சுமந்தபடி பறக்கற அந்த பூச்சிகளைத்தான் மின்மினி பூச்சிங்கன்னு சொல்றாங்க! இன்னிக்கும் வானத்தை பார்க்கற ஆசையிலே அந்த பூச்சிங்க நட்சத்திரங்களை சுமந்து பறந்துகிட்டிருக்கிறதை நீங்க பார்க்கலாம்!
  

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கேள்விப்படாத புதுக்கையா இருந்தாலும் நல்ல ரசனையோடு போனது, இல்லறத்தை விட்டு இலங்கைக்கு போனாலும் அங்கே நீ குரங்குதான் என பெரியோர்கள் சும்மாவா சொன்னாங்க... வாழ்த்துக்கள் திரு. தளிர் சுரேஸ். எனது ''ஹிந்தமிழ்'' படிக்கலாம் வாங்க...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! இது என் கற்பனைக் கதை!

      Delete
  2. அற்புதம் அற்புதம் சுரேஷ் . இந்தக் கதையை கேள்விப் பட்டதில்லை. உங்கள் சொந்தக் கற்பனையா? பகிரப் பட்டதா?
    பாராட்டுக்கள் சுரேஷ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்! இது என் சொந்த கற்பனைக் கதை! என் பெண்ணுக்கு சொன்ன பெட் டைம் ஸ்டோரி! கொஞ்சம் மாற்றி இங்கே பகிர்ந்து இருக்கிறேன்!

      Delete
  3. இதுவரை இக்கதையை கேள்விப்பட்டதில்லை சகோ!

    ReplyDelete
    Replies
    1. இந்த பகுதியிலே அப்பப்போ என்னோட கற்பனை கதைகளும் வரும் சகோ! இது என் கற்பனை கதை!

      Delete
  4. அட! புதுக்கதையாக இல்ல இருக்கு. நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஓஹோ பொண்ணுக்கு சொன்ன கதையா ரொம்ப நல்ல ரசித்தேன். அழகா வந்திருக்கு உங்கள் கற்பனை. கீபிட் அப். தொடருங்கள் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  6. கதை அருமை நன்றி நண்பரே

    ReplyDelete
  7. வணக்கம் திரு. சுரேஷ் ஐயா..

    அருமையான கற்பனைக் கதை.. அணிலுக்கு முதுகில் கோடு விழுந்த கதையை சிறு வயதில் முதன்முதலில் கேள்விபட்ட போது ஏற்பட்ட "அட!" ஆச்சர்யம், தற்போது தங்களின் கதையை படித்ததும் நிகழ்கிறது ஐயா..

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    கதை நன்றாக உள்ளது படிக்க படிக்க திகட்டவில்லை அறியவில்லை பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அற்புதமான கதை சுரேஷ்! முதலில் நாங்கள் இது நீங்கள் பதிர்ந்த கதையாக இருக்குமோ என்று நினைத்தோம்...ஆனால் திரு முரளிதரனுக்கு நீங்கள் கொடுத்ட பதிலில் தங்கள் கதை என்று தெரிந்ததும்...வியந்து விட்டோம்! ஏன் நீங்கள் குழந்தைகள் கதைகளை ஒரு புத்தகமாக வெளியிடக் கூடாது? இணையத்தில் கூட வெளியிடலாம் நண்பரே! தங்கள் மகள் கொடுத்து வைத்தவர்தான்....இப்படிப்பட்ட அருமையான கதைகள் சொல்லி மகிழ்விக்க ஒரு அப்பா இருக்கும் போது!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. சகோ..
    ரொம்ப பிடித்துப்போனது இந்த கதை..

    ReplyDelete
  11. அட இந்த கதை நல்லா இருக்கே.... :)

    ReplyDelete

  12. அருமையான கற்பனைக் கதை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!