கார்த்திகை தீப வழிபாடு!


கார்த்திகை தீப வழிபாடு!
ஒளி நிறைந்திருக்கும் இடத்தில் இருள் நெருங்காது! அறிவொளி பரவியிருக்கும் இடத்திலே அறியாமை படராது! இறைவன் ஒளிமயமானவன். இயற்கையை கடவுளாக வழிபாடு செய்தார்கள் முன்னோர்கள். சூரியவழிபாடும், வருணவழிபாடும் அப்படி தோன்றியவை!
   சூரியனும் ஒளிவடிவானவன் தானே! விளக்கேற்றி வைக்கும் போது இருள் விலகுகிறது. இறைவனின் ஆனந்தமயமான தரிசனம் கிடைக்கிறது. அப்படியே மனம் உருகி பிரார்த்தனை செய்யும் போது நமது அகத்திலே பிடித்து இருந்த இருள்கள் விலகி ஆன்மா ஒளிபெறுகிறது.

   சிவனின் நெற்றிப்பிழம்பில் இருந்து பிறந்தவர் சுப்ரமண்யக் கடவுள். அவரை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். இந்த ஆறு கார்த்திகை பெண்களை ஒன்றாக்கி கார்த்திகை நட்சத்திரமாக்கி வானில் ஒளிவீச செய்தார் முருகர். இந்த கார்த்திகை நட்சத்திர நாளில் தன்னை வழிபடுவோருக்கு வேண்டும் வரம் தருவதாக அருள்பாலித்தார். முருகனுடைய பிறந்தநாள் விசாகநட்சத்திரம், இந்த நட்சத்திரத்தில் விரதவழிபாடு செய்யாமல் கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்ய இதுவே காரணம்.தன்னை வளர்த்தோருக்கு முருகக் கடவுள் நன்றி செலுத்தியதை உணர்த்தும் அற்புத கதை இது.

  ஒரு சமயம் சிவபெருமானின் முடியையும், அடியையும் காண பிரம்மனுக்கும், விஷ்ணுக்குவும் போட்டி உருவானது. பிரம்மன் அன்ன வடிவம் எடுத்து தலையைக் காண மேலே பறந்து சென்றார். விஷ்ணு வராகம் வடிவம் எடுத்து பூமியை குடைந்து சென்றார். நெடும் தொலைவு கடந்தும் அடியையும் முடியையும் காண முடியவில்லை! திருமால் தோல்வியை உணர்ந்து திரும்பி வந்தார். பிரம்மனோ சிவனின் தலையில் இருந்து உதிர்ந்து வந்த ஒரு தாழை மலரை தனக்கு பொய் சாட்சி கூறுமாறு அழைத்து வந்து சிவனிடம் தான் முடியை கண்டுவிட்டதாக கூறினார். தாழம்பூவும் ஆம் இவர் கண்டார். என்று உரைத்தது.
   அனைத்தும் உணர்ந்த சிவன் பிரம்மனும் தாழம்பூவும் பொய் சொன்னதை அறிந்து கோபித்து தன்னுடைய பூஜையில் தாழம்பூவிற்கு இடமில்லை என்றும், பிரம்மனுக்கு இனி தனி கோயில்கள் கிடையாது. உன்னை தனி வழிபாடு யாரும் செய்ய மாட்டார்கள் என்று சபித்தார். அதுமுதல் பிரம்மனுக்கு கோயில்கள் இல்லாமல் போனது. தாழைமலர் சிவபூஜைக்கு சேர்ப்பது இல்லை! இந்த நிகழ்வு நடந்தபோது சிவன் ஜோதிவடிவமாக காட்சி தந்தார். அதை நினைவு கூறும் வண்ணம் திரு அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுகிறது.
   திருவிளக்கு மஹாலஷ்மியின் அம்சம். கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் சிறப்பாகும். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் ஹோமங்கள் செய்து பெரும் பலன் கிடைக்கும். தினமும் ஏற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பவுர்ணமி அன்றாவது ஏற்றுவது சிறப்பாகும்.

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும்ஒளியில் சரஸ்வதியும்வெப்பத்தில்பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்எனவேதீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கேபெறலாம்திருக்கார்த்திகை தினத்தன்றுகிளியஞ்சட்டி எனப்படும் களிமண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டுபஞ்சு திரியிட்டு விளக்கேற்றச்சொல்வார்கள் பெரியோர்கள்அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசுநெய்யை தீபத்தில் இடும்பொழுதுஅது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்துசிவசக்தி சொரூபமாகிறது.
திருவிளக்கில் தேவியர்
திருவிளக்கில் துர்காலட்சுமிசரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர்தீப ஒளி தீயசிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறதுஇதன் அடிப்பாகத்தில் பிரம்மா,தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணுநெய்எண்ணெய் நிறையுமிடத்தில்சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?

 சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணிவிளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்முன்வினைப் பாவம் விலகும்மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும்நரசிம்மமூர்த்திக்கும் மிகவும் உகந்தவைஇவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடைகல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்ஒரு வீட்டில் எந்த நேரத்தில்விளக்கேற்றினாலும்கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம்விளக்கேற்ற வேண்டும்இது அனைவருக்கும் பொதுவான நேரம்விளக்கைகுளிர்விக்கும் போதுகைகளை உயர்த்தி அணைக்கக்கூடாதுபூவால்குளிர்விக்கலாம்தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். 

விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறுதிங்கள்வியாழன்சனிக்கிழமைகளில் துலக்குவதுநல்லதுஇதற்கு காரணம் உண்டுதிருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன்நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின்துணைவிகுடியிருக்கிறாள்செவ்வாய்புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால்இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிநள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியானசங்கநிதியின் துணைவிகுடியேறுகிறாள்எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத்தவிர்த்துவியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.நெய்செல்வவிருத்திநினைத்தது கைகூடும்நல்லெண்ணெய்ஆரோக்கியம் அதிகரிக்கும்தேங்காய் எண்ணெய்வசீகரம் கூடும்இலுப்பை எண்ணெய்சகல காரிய வெற்றிவிளக்கெண்ணெய்புகழ் தரும்ஐந்து கூட்டு எண்ணெய்அம்மன் அருள்

குத்துவிளக்கில் ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல் நடக்கும்.
இருமுகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால்  சகல நன்மையும் உண்டாகும்.

வீட்டின் முன் கதவை திறந்து பின் கதவை சாத்திய பிறகே விளக்கேற்றவேண்டும்.

திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் சிவ அம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலையான அண்ணாமலை தீபத்தினை தரிசித்தால் நமது பாவங்கள் அகலும்.

கார்த்திகை தீப திருநாள் அன்று விரதம் இருந்து வழிபட்டு மாலை வேளையில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி அதனுடன் அகல் விளக்குகள் அவரவர் வசதிப்படி ஏற்றிவைத்து  அவல்பொறி உருண்டை, மற்றும் நெல்பொறி உருண்டை, மற்றும் மாவிளக்கு ஏற்றி வைத்து  அண்ணாமலையாருக்கும், முருகப்பெருமானுக்கும் படைத்து தேங்காய் உடைத்து கற்பூர தீபம் ஏற்றி வழிபடுங்கள். பின்னர் விளக்குகளை வீடு முழுவதும் ஒளிரவிடுங்கள்.
  கார்த்திகை தீபத்தை தொடர்ந்த அடுத்தநாள் விஷ்ணுகார்த்திகை எனப்படும் அன்றும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மூன்றாவது நாள் குப்பைக் கார்த்திகை என்று சொல்வார்கள். இந்த மூன்று தினங்களிலும் விளக்கேற்றி வழிபடுதல் சிறப்பாகும். 

கார்த்திகை தீப திருநாளில் ஆலயங்களிலும்  நமது இல்லங்களிலும் அகல் விளக்கினால் நிறைய தீபங்கள் ஏற்றி இருள் விலகி ஒளி வீசச் செய்வோம்.

 இந்த காலத்தில் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருகின்றது. மண் அகல்கள் நிறைய வாங்கி விளக்கேற்றினால்அவர்கள் தொழில் நசிவடையாமல் இருக்க சிறு உதவி செய்தது போலாகும்.

   எங்கும் நிறைந்து இருக்கும் இறைவனை திருக்கார்த்திகை நாளில் தீபவடிவில் வழிபட்டு நம் அக இருள் போக்கி ஒளி வீசுவோமாக!

(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சிறப்பான தகவல்கள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. மீள்பதிவாக இருந்தாலும் பொருத்தமான, அறிந்துகொள்ளவேண்டியது. நன்றி.

    ReplyDelete
  3. அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு சுரேஷ்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!