கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 52

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 52


1.   ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிக்கிட்டது தப்பா போச்சா ஏன்?
“ எது நடந்தாலும் ‘விட்’டு தள்ளுன்னு சொல்லிட்டு போயிடறாரே!

2.   அந்த கட்சியில சேர்ந்த நடிகை ஏன் கோபமா இருக்காங்க?
உங்களை சேர்த்ததுக்கு அப்புறம் கட்சியோட எடை கூடிப்போயிருக்குன்னு தலைவர் சொன்னாராம்!

3.   கல்யாண வீட்டுல ஒருத்தரை மட்டும் தடபுடலா கவனிக்கறாங்களே என்ன விஷயம்?
சும்மாவா அஞ்சு கிலோ பருப்பை மொய் எழுதி இருக்கிறாராம்!

4.   மன்னருக்கு தொலைநோக்கு பார்வை அதிகம்!
  எப்படி சொல்கிறாய்?
எதிரி எந்த பக்கம் வந்து தாக்குவான் என்று சிந்தித்து தப்பிக்க நிறைய சுரங்க வழிகள் அமைத்திருக்கிறாரே!


5.   தலைவர் ஏன் லிப்டை எப்பவும் உபயோகிக்க மாட்டேங்கிறார்?
  படிப்படியா முன்னேறுவதுதான் அவருக்கு பிடிக்குமாம்!

6.   மன்னா! இளவரசர் இலக்கின்றி சுற்றி திரிகின்றார்…!
  அதனாலென்ன…!
எதிரி மன்னர்களின் இலக்கினை எட்டிவிடுவார்கள் போலிருக்கிறதே மன்னா!

7.   டாக்டர் நீங்க ஆபரேசன் பண்ணதும் நான் பிழைச்சிருப்பேனா?
  அது எனக்குத் தெரியாது ஆனா உங்க பேங்க் பேலன்ஸ் பிழைச்சிருக்காது!

8.   உண்ணாவிரத பந்தலுக்கு தலைவர் வந்ததுமே எல்லாம் தீர்ந்து போச்சு…!
  பிரச்சனையா..?
 நீ வேற பிரியாணி பொட்டலம் தான்!

9.   என் பொண்டாட்டி என்கூட சண்டை போட்டா முகத்தை தூக்கிவைச்சுட்டு ரெண்டு நாளைக்கு பேசமாட்டா!
பரவாயில்லை! என் பெண்டாட்டிக்கூட சண்டைபோட்டா என் முகம் வீங்கி ரெண்டு நாளைக்கு பேச முடியாது!


10.  புலவரே உங்கள் பாட்டில் கூர்மை இல்லை…!
  மன்னா….! உங்கள் வாளில் கூடத்தான் கூர் இல்லை!

11.  அவர் ஒரு சிறந்த குடிமகன்…! நாட்டுப்பற்று அதிகம்..!
  இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா…!
  நீ வேற… டாஸ்மாக் குடியர் பாரின் சரக்கு அடிக்க மாட்டாருன்னு சொல்ல வந்தேன்!

12.  நாட்டில் போர் ஏதும் இல்லையே… மன்னர் எதற்கு இத்தனை பதுங்கு குழிகள் வெட்ட சொல்கிறார்?
  ராணியாரிடம் இருந்து தப்பித்து ஒளிந்து கொள்ளத்தான்!

13. தலைவர் கட்சியை ஒரு கோயிலா நினைக்கிறார்னு எப்படி சொல்றே?
  அடிக்கடி உண்டியலை எடுத்துக்கிட்டு கிளம்பிடறாரே!

14.  என்னது  மயிலாப்பூர்ல நடக்கிற இண்டர்வியுக்கு அடையாறிலே இருந்து நடந்தே போனியா ஏன்?
  வாக் இன் இண்டர்வியுன்னு போட்டு இருந்துச்சே!

15.  எல்லா தலைவர்களும் பேஸ்புக், டிவிட்டர், வாட்சப், கூகுள் என்று அக்கவுண்ட் வைத்துக்கொள்கிறார்கள் நான் கொஞ்சம் சுவிஸ் அக்கவுண்ட் வைத்துள்ளேன்… இதைப்போய் தப்பாய் பேசும் எதிர்கட்சி காரர்களை…..!


16.  அந்த டாக்டர் ஒரு கிரிக்கெட் பைத்தியம்..?

   எப்படி சொல்றே?
 ஆபரேஷன்ல பேஷண்ட் அவுட்டா இல்லையாங்கிறதை மூன்றாவது அம்பயர்தான் செக் பண்ணி சொல்வார்!

17.  ஜெயிலுக்கு போயிட்டு வந்தப்புறம் தலைவரோட பழக்கம் ரொம்ப மாறிப்போயிருச்சா ஏன்?
  காலையில டிபனுக்கு களிதான் வேணும்னு அடம்பிடிக்கிறாராம்!

18.  தலைவர் மக்களோட மக்களா கலந்துட்டார்….!
  அதுக்காக மூணு வயசு குழந்தையோட நடைவண்டியை ஓட்டி பழகுறதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா…?

19.  மன்னர் போருக்கு சித்தமாய் இருக்கிறார் அல்லவா?
   ஊகும்! சித்தம் கலங்கி பித்தம் பிடித்து உளறிக் கொண்டு அல்லவா இருக்கிறார்…!

20.  பத்து என்றதுக்குள்ள…..
  படத்தை பார்த்திட்டியா எப்படி இருக்கு…!
நீ வேற பத்து மணிக்குள்ள கிச்சனை கிளின் பண்ணி படுக்கலைன்னா வொய்ப் கோச்சுப்பா…!

21. மன்னரின் நடை தளர்ந்திருக்கிறதே என்ன காரணம்?
   அரண்மணை நாட்டியப் பெண்ணின் இடையை மகாராணியிடமே வர்ணித்து வாங்கிக் கட்டிக் கொண்டாராம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
    

    

Comments

  1. 1. காபி அடிக்கற எழுத்தாளராயிருந்தா 'சுட்டுத் தள்ளு'ன்னு போயிருப்பாரோ...!

    4, 12 மன்னர் முந்தைய பிறவியில் எலியாயிருந்திருப்பாரோ!

    5. இல்லன்னா தடித்தடியா ஆயிடுவோம்னு பயமா இருக்கும்!


    ReplyDelete
  2. "தலைவர் மக்களோட மக்களா கலந்துட்டார்….!
    அதுக்காக மூணு வயசு குழந்தையோட நடைவண்டியை ஓட்டி பழகுறதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா…?"

    அருமை, சமீபத்திய நிகழ்வுகளை நியாபகப்படுத்துகின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ"தளிர்" தளத்துல அவரு தளிர் நடை போடாம இருப்பாரா கும்மாச்சி!!!!

      Delete
  3. அனைத்தும் அருமை. வழக்கம்போல் நன்கு ரசித்தோம்.

    ReplyDelete
  4. #மகாராணியிடமே வர்ணித்து வாங்கிக் கட்டிக் கொண்டாராம்!#
    ராணியின் கோபம் நியாயமானது ,அவரும் ஒரு காலத்தில் நாட்டியம் ஆட அரண்மனைக்கு வந்தவர் தான் :)

    ReplyDelete
  5. தள்ளமுடியாத விட்டுகள்தான் அத்தனையும்!

    பகவானும் களத்தில் குதித்துவிட்டாரே! :)

    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  6. உண்டியலை எடுத்துக்கிட்டு... ஹா... ஹா...

    ReplyDelete
  7. அருமையான சிரிப்புகள்!

    ReplyDelete
  8. எப்படி நண்பரே அள்ளி வீசிட்டு போறீங்க....

    ReplyDelete
  9. சிறந்த பகிர்வு
    நன்றி அய்யா..

    ReplyDelete
  10. அனைத்தும் துணுக்குச் சரவெடிகள் சுரேஷ்! ரசித்தோம்..

    ReplyDelete
  11. இது பெரிய அருவி மாதிரி துனுக்குகளை அள்ளித்தெளிக்கிறீங்க..மிகவும் அருமை..

    ReplyDelete
  12. அனைத்தும் அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  13. ஹிஹிஹிஹி! நல்ல ரசனை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!