எதிர் வீட்டு ஆண்ட்டியை புரிஞ்சுக்க முடியாதது ஏன்? ஜோக்ஸ்

ஜோக்ஸ்!


1.      மருந்துலேயே சரிபண்ணிடலாம்னு சொன்ன டாக்டர் இப்ப ஆபரேஷன் பண்ணியே ஆகனுங்கிறாரே! ஏன் சிஸ்டர்?
கார்பரேஷன்காரங்க சொத்துவரி, தொழில்வரி உடனே கட்டுங்க இல்லேன்னா தண்ணீர் கனெக்‌ஷன் கட்பண்ணிடுவோம்னு நோட்டீஸ் கொடுத்து இருக்காங்களே!
                   கிணத்துக்கடவு ரவி

2.      கோர்ட்டுக்கு கைதி உடையிலேயே வந்திருக்கீயே ஏன்?
என் வக்கீல் மேல மேல அவ்வளவு நம்பிக்கை எசமான்!
                          ரியாஸ்.

3.      எங்கள் அவமானத்துக்குரிய மன்னிக்கவும் எங்கள் அபிமானதுக்குரிய தலைவர் அவர்களே!
                    வீ. விஷ்ணுகுமார்.

4.      எதிர்கட்சித்தலைவரை பற்றி பேசினால் கேஸ் போடுகிறார்கள் என்பதால் நஸ்ரியாவை பற்றி நாலு வார்த்தைகள் பேசும்படி தலைவரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
                            முகமதுயூசுப்.

5.      தலைவரே சி.பி.ஐ வந்திருக்கு!
ஏன் ஃபேஸ் புக்ல ஸ்டேட்டஸ் போடாம வராங்க?
                        பர்வீன் யூனுஸ்


6.      எதுக்கு ஜெயில் அட்ரஸ் கேட்கறீங்க?
தலைவர் புது விசிட்டிங்க் கார்டு அடிக்க சொல்லி இருக்கார் சார்!
                      ரியாஸ்.

7.      சாவி இல்லேன்னா நீங்க என்ன பண்ணுவீங்க எசமான்?
      பூட்டை உடைப்பேன்!
   அதையேத்தான் நானும்  செஞ்சேன்!
                            சிக்ஸ் முகம்.
8.      மன்னா! எதிரிப்படைகள் சென்றுவிட்டன!
வீரர்களே! பதுங்குகுழியில் பதுங்கியது போதும்! பொங்கி எழுங்கள்!
                   வீ.விஷ்ணுகுமார்.

9.      அந்த அமைச்சர் ஏன் டென்ஷனா இருக்கார்?
அவரோட மனைவி கோவிச்சிகிட்டு அம்மாவீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போயிட்டாங்களாம்! எந்த அம்மா வீடு?ன்னு இவர் பயத்துல இருக்கார்!
                      முகமது யூசுப்

10.  தலைவர் பேசி முடித்த பிறகு மாடல் அழகிகளின் கேட் வாக் நடைபெற இருப்பதால் யாரும் கலைந்து சென்று ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!
                           ரியாஸ்.

11.  தலைவர் டெல்லி தலைமைகிட்ட என்ன கேட்டாராம்?
சீனாக்காரங்க பார்டர் முழுக்க திரியறதாலே அவர் மச்சானுக்கு அங்க ஒரு சைனீஸ் ரெஸ்டாரெண்ட் வெக்க அனுமதி கேட்டாராம்
                    வி.சகிதா முருகன்.

12.  நிர்வாக வசதிக்காக ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பதில் என்ன தவறு? எங்கள் தலைவர் தனது குடும்பத்தையே மூன்றாக பிரித்து வைத்திருக்க வில்லையா?
                         கி.ரவிக்குமார்.

13.  அந்த நடிகர் அடுத்த படத்துக்காக உடம்பை குறைக்கிறாராம்!
    அதுக்காக ஆறடியா இருந்தவரு எப்படிங்க மூணு அடியா குறைஞ்சு போனாரு?
                      வி.சாரதிடேச்சு
14.  சி.பி.ஐ யை ஏமாத்த நம்ம தலைவர் ரொம்பத்தான் நடிக்கிறார்?
ஏன் என்ன செய்யறார்?
அம்மா உணவகத்துக்கு போய் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடறாரு!
                  ராஜபாளையம் பேச்சி

15.  மக்கள் மாற்றத்தை விரும்பறாங்கய்யா!
அதுக்காக நீங்க டோனி மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணிக்கிறது பார்க்க சகிக்கலை தலைவரே!
                 பர்வீன் யூனுஸ்

16.  எங்கள் தலைவரின் கனவுகளை காஜல், ஹன்சிகா, அஞ்சலி போன்றோரே ஆக்ரமித்து உள்ளதால் அவருக்கு பிரதமர் பதவி பற்றிய கனவுகள் இல்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!
                        கி.ரவிக்குமார்.
17 தலைவர் பேச ஆரம்பிச்சா முடிக்கிற வரைக்கும் சத்தம் கேட்டுகிட்டே இருக்கும்!
  என்ன கைத்தட்டல் சத்தமா?
 இல்ல தொண்டர்கள் விடற குறட்டை சத்தம்!
                    எம்.ஸ்டாலின் சரவணன்.

17.  நீ செஞ்சிருக்கிற குற்றத்திற்கு என்ன தண்டணை தெரியுமா?
உங்க செலவுல என்னை சட்டம் படிக்க வைங்க எசமான். படிச்சு முடிச்சுட்டு வந்து சொல்றேன்!
                எஸ்.எஸ். பூங்கதிர்.
18.  புலவர் டபுள் பேமண்ட் கேட்கிறாரே ஏன்?
சாமரம் வீசும் பெண்களையும் புகழ்ந்து பாடச்சொன்னீர்களாமே! மன்னா?
                        பர்வீன் யூனூஸ்.

19.  பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன் சோகமா இருக்காரு?
கட்சி ஆபிசுல எவனோ ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோன்னு பாட்டு போட்டானாம்!
                    வி.சகிதா முருகன்.

20.உனக்கு ஜாமின் கொடுத்தா தினமும் ஸ்டேஷன்ல வந்து கையெழுத்து போடுவியா?
  போடுறேன் எஜமான் ஆனா… ஸ்டேஷன்ல அது காணாம போச்சு இது காணாம போச்சுன்னு சொல்லக்கூடாது!
                      பர்வீன் யூனுஸ்.

20.  எதிர் வீட்டு ஆண்ட்டியை புரிஞ்சுக்கவே முடியலைம்மா!
            ஏண்டா?
அவங்களுக்கு நான் பிளையிங் கிஸ் கொடுத்தப்ப சும்மா இருந்தாங்க ஆனா அப்பா அப்படி கொடுத்தப்ப பளார்னு அறைஞ்சுட்டாங்களே!
                      பர்வீன் யூனுஸ்.

நன்றி: ஆனந்த விகடன், தி இந்து.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!





Comments

  1. பதிவுக்கு நன்றி ...

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை. ரசித்து சிரித்தேன் சிரித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி சகோதரர். தொடர்க.

    ReplyDelete
  3. அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2