இந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்! செப்டம்பர்- 9-15

இந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்!  செப்டம்பர்- 9-15

   பூங்கதிர் சார் அறிமுகத்தில்   இரண்டு வருடங்களாக பாக்யாவில் எழுதி வருகின்றேன். அவ்வப்போது ஜோக்ஸ்கள் வெளிவரும். மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்கள் இடம் பெறும். பூங்கதிர் அதை பேஸ்புக்கில் வெளியிடுவார். பார்த்து மகிழ்வேன்.
            பாக்யா வார இதழ் பொன்னேரியில் கிடைப்பது இல்லை! செங்குன்றத்தில் கிடைத்தாலும் நான் போகும் சமயம் விற்றுத் தீர்ந்து இருக்கும். அதனால் எனது படைப்பு வெளியான பல இதழ்களை மிஸ் செய்து இருக்கிறேன்.
  
   ஒரு படைப்பாளனுக்கு தனது எழுத்தை பெயரை பத்திரிக்கையில் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது. ஆனால் பாக்யாவில் வரும் எனது படைப்புக்களை நான் காண்பதில் தடங்கல்கள் இருந்தன. புத்தகம் கிடைக்காமல் ஏமாந்து போவேன்.

   சென்ற வாரம் விகடனில் ஜோக் வந்தபோது புதுவண்டி ரவீந்திரன் சார்  தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தில் இணைத்து விட்டார். அந்த குழுமத்தில் இதழ்களில் வந்த படைப்புக்களை ஸ்கேன் செய்து வெளியிடுகின்றார்கள்.   இன்று  இந்த வார பாக்யாவில் வந்த எனது ஆறு நகைச்சுவைகளை ஸ்கேன் செய்து வெளியிட்டு என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டார்கள்.

     ஸ்கேன் செய்து வெளியிட்ட கோபாலன் சாருக்கும் அட்மின் வைகை ஆறுமுகம் சாருக்கும் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது  படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும்  பாக்யா ஆசிரியருக்கும் என்னை ஊக்குவித்து வரும் பூங்கதிர் சாருக்கும் மிக்க நன்றிகள்.   பாக்யாவில் வெளிவந்த எனது ஜோக்ஸ்கள் கீழே!






தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஒரே இதழில் ஆறு ஜோக்குகளா ?சாதனைக்கு வாழ்த்துகள் ஜி :)
    ஜூனியர் விகடனில் முன்பு நான் எழுதிய ஜோக் நினைவுக்கு வந்தது ...
    ''திரும்பி வந்த ஜோக்கை எல்லாம் தொகுத்து ,புத்தகமா வெளியிடப் போறீங்களாமே ,தலைப்பு என்ன ?''
    ''ரிடர்ன் ஆப் ஜோக்ஸ் !''


    ReplyDelete
  2. வாழ்த்துகள்...
    கலக்குங்கள்...

    ReplyDelete
  3. ஒரு நல்ல ஆரம்பம். தங்களின் எழுத்துக்கான ஒரு வகையிலான அங்கீகாரம் என்றே கொள்வோம். 1983இல் முதன்முதலாக வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன். அம்முயற்சியானது என்னை இப்போது தலையங்கப்பக்கத்திலும் (Edit page), தலையங்க எதிர்ப்பக்கத்திலும் (Op-Ed)கட்டுரை எழுதும் அளவு முன்னேற்றியுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் தொடருங்கள் வெற்றி பெறுங்கள் படைப்பாளிகளுக்கு பாராட்டைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்பது தங்களின் வார்த்தைகளில் புரிகிறது

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது சுரேஷ்! வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!