கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 47

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 47


1.   தலைவர் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லைன்னு எப்படிச் சொல்றே?
சமச்சீர் கல்வின்னா எல்லா பசங்களும் ஒரே மாதிரியா சீர் கொண்டுவருவாங்களான்னு கேக்கறாரே!

2.   மன்னர் ஏன் கட்டியம் கூறுபவனை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்?
ஆநிறை கவர்ந்த மன்னா! என்று சொல்லுவதற்குபதில் வாய் தவறி ஆணுறை கவர்ந்த மன்னா என்று சொல்லிவிட்டானாம்!

3.   அந்த கிரிக்கெட் ப்ளேயர் எப்பவும் எக்ஸ்ட்ரா கவர் திசையிலேயே பீல்ட் பண்றாரே என்ன விஷயம்?
எக்ஸ்ட்ரா கவர் கொடுத்து டீம்ல நுழைஞ்சவராம்!

4.   நல்லா கூடி வந்த சம்பந்தத்தை ஏன் திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டீங்க?
மாலையில டிபன் 500 பேருக்கு வெங்காயபஜ்ஜி போடனும்னு சொல்றாங்களே ஆகற காரியமா இது!

5.   தலைவரை ஊழல் வழக்குலே கைது செய்துட்டாங்களாமே!
  ஆமாம்! இதுவரைக்கும் அவர் சம்பாரிச்சது எல்லாம் புழலுக்கு இரைத்த நீராகிவிட்டது!

6.   தமிழ் வாத்தியார் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?
கடிதத்தில் இலக்கணப்பிழை இருக்குன்னு சொல்லி திருப்பிக் கொடுத்திட்டா!


7.   மன்னருக்கு ஆங்கில மோகம் அதிகரித்துவிட்டது!
  எப்படிச் சொல்கிறாய்?
போரில் புறமுதுகிட்டு வருவதை ” ஐ யம்,ரிடன் பேக்”   என்று சொல்கிறாரே!

8.   மந்திரியாரே நமது அவையில் ஆசு கவி யாராவது இருக்கிறார்களா?
எமக்குத் தெரிந்தவரை நம் அவையில் காசு கவிகள் தான் இருக்கிறார்கள் மன்னா!

9.   அந்த ஆள்கிட்ட நிறைய பணம் இருக்கு! பிக்பாக்கெட் அடிச்சிரலாம்னு எப்படி சொல்றே?
ஓட்டலுக்குள்ளே ஆனியன் தோசை சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரே!

10. ஏன் சார் ஆட்டோவை டிராபிக் போலீஸ் கிட்டே நிறுத்த சொல்றீங்க?
நீதானப்பா ஏறும்போது பாத்து போட்டுக் கொடுங்கன்னு சொன்னே?

11. தலைவர் எப்பவும் அவுட் ஆப் ஸ்டேஷன்லேயே இருக்காரே என்ன விஷயம்!
ஊருக்குள்ளே வந்தா ஸ்டேஷனுக்குள்ள பிடிச்சு போட தயாரா இருக்காங்கன்னு அர்த்தம்!


12. தலைவரே உங்களை எதிர்கட்சிக்காரங்க நாற அடிச்சிட்டாங்க…!
என்ன?
மூத்திர சந்துக்குள்ளெ உங்க ப்ளெக்ஸ் பேனரை கொண்டு வச்சிருக்காங்க!

13. என் பெண்டாட்டிக்கு கோவம் வந்தா நான்  ரோட்டுக்கு வந்துருவேன்.!
  ஏன்?
அவ தூக்கி வீசற பொருளை எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போகனுமே!

14. அந்த பால்காரனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்பு!
ஏன்?
நீ கொடுக்கிற பால் வெறும் தண்ணி… காசே கொடுக்க முடியாதுன்னு சொன்னா.. மினரல் வாட்டர் கலந்து தரேனே அந்தக் காசையாவது கொடுங்கன்னு சொல்றான்!


15. ஸ்பெஷல் வார்ட் வேணுமா சாதா வார்டு வேணுமான்னு கேக்கறீங்களே டாக்டர் என்ன வித்தியாசம்!
ஸ்பெஷல் வார்டுல பெண் நர்ஸ் இருப்பாங்க! சாதாவார்டுல ஆண் நர்ஸ் இருப்பார்!

16.  குற்றங்கள் குறையனுங்கிறதுக்காகத்தான் கோயில் உண்டியலை கொள்ளை அடிச்சியா புரியலையே!
தப்பு செய்யறவங்க எல்லாம் அங்கதானே கொண்டுபோய் கொட்டி வைக்கிறாங்க எடுத்தா கொஞ்சம் குறையுமேன்னுதான்!

17. பூரி செய்யறதிலே என் வைஃபை அசைச்சுக்க முடியாது!
அவ்வளோ நல்லா செய்வாங்களா?
வாய்க்குள்ள போட்ட பூரியை அசைக்க முடியாதுன்னு சொன்னேன்!

18. அந்த டாக்டர் தியேட்டரை விட்டு வந்ததும் ரிசெல்ட்ட கரெக்டா சொல்லிருவாரு!
ஆபரேஷன்ல அவ்ளோ பர்பெக்டா!
நீ வேற அவர் சினிமா தியேட்டரை விட்டு வந்து படத்தோட ரிசெல்டை சொல்லுவாருன்னு சொன்னேன்!


19.  மன்னரின் உயிர் அவர் கால்களில் இருக்கிறதா? என்ன சொல்லுகிறாய்!
  போரில் தோற்றுவிட்டார்! இனி ஓடிவருவதில்தான் உயிர் இருக்கிறது என்று சொல்லுகிறேன்!

20. தடகளப் பந்தயத்தில் மன்னருக்கு ஓட்டப்பந்தயம் தான் மிகவும் பிடிக்குமாமே!
பின்னே அவர் போர்க்களத்தில் ஓடிவருவதில் சூரப்புலியாச்சே!

21. தலைவரோட கூட்டத்துல மேடையிலே நிறைய கூட்டமாமே!
ஆமாம் மேடை நிறைஞ்ச கூட்டம்! தொண்டர்கள் நிறையலே!

22. பிறந்தநாள் வாழ்த்துக் கூட்டத்துக்கு தலைவர் ஏன் கையில குடையோட வர்றார்?
தொண்டர்கள் வாழ்த்து மழையிலே நனைஞ்சிட போறோம்னு ஒரு பாதுகாப்புக்குதான்!

23. தலைவர் இதுவரைக்கும் எல்லா கட்சிக்கும் தாவிட்டார் ஒரு கட்சியையும் விட்டு வைக்கலை!
அதுக்காக ஜம்பிங் ஜெயண்டேன்னு ப்ளெக்ஸ் பேனர் வைக்கிறது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லே!

24. நான் நடிக்க வந்ததே ஓர் ஆக்ஸிடெண்ட்!
  இந்த விபத்தாலே நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்களே இழப்பீடு தருவீங்களா?

25. அந்த டைரக்டர் சைலண்டா ஓர் புதுமுகங்களை வைச்சு ஓர் படம் எடுத்தாரே என்ன ஆச்சு?
  சத்தமே வரலை!

26. அந்த ஜோடி ரொம்ப சிக்கனமான ஜோடின்னு எதை வைச்சு சொல்றீங்க?
புருஷன் கனமாவும் மனைவி “சிக்’க்குனு இருக்கறாங்களே அதை வச்சுத்தான்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்

Comments

  1. ஹாஹாஹா சரிவெடிகள் பொரித்து எடுக்கின்றீர்கள் மிகவும் ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. சுடச்சுட வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஜி!

      Delete
    2. கொஞ்சமா சிரிக்கிறது என்ன அதிகமாவே சிரிக்கலாம்!! ரசித்தேன் அழகு!! நனறி!நண்பரே.,
      அன்புடன் கருர்பூபகீதன் நன்றி

      Delete
  2. வணக்கம்!
    இப்பொழுது மட்டுமல்ல!
    நாம் எப்பொழுதும் கேட்டு, படித்து, பார்த்து மகிழ்வது
    தளிர் சுரேஷ் வழங்கும் "சிரிப்பு மாலை".
    ரசித்தேன்!
    ரசிப்போம் வாருங்கள்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. வணக்கம்,
    பார்த்துக் கொஞ்சம் போட்டுக்கொடுங்க,,,,,,,,,,,,
    அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஹஹஹஹஹ் செம வெடி...சுரேஷ் ! அந்த 6 வது இதற்கு முன்னரேயே ...இலக்கணப் பிழை வாசித்தது போல உள்ளது...இல்லை அது கதை வடிவில் வந்ததோ....

    ReplyDelete
  5. சிரித்தேன்
    ரசித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  6. :)) ரசித்தேன்...

    ReplyDelete
  7. கொஞ்சமா சிரிங்க என்பதற்கு பதிலாக சத்தம் போட்டு சிரிக்க வேண்டாம் என்று தலைப்பு வைச்சிருக்கலாம்,, நகைச்சுவைகள் நகைக்க வைத்தன

    ReplyDelete
  8. அனைத்தும் ரசித்தேன் அருமை அருமை !

    ReplyDelete
  9. அனைத்தையும் ரசித்து, சிரித்தேன். சிரித்து, ரசித்தேன்.

    ReplyDelete
  10. அனைத்தும் ரசித்து சிரிக்கும் படியாகவே இருந்தது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. சிரிப்'பூக்கள்' அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. http://veesuthendral.blogspot.in/2015/08/blog-post_29.html

    வணக்கங்க.
    தாங்கள் கேட்டதுக்காக எழுதியது.
    நேரமிருப்பின் வருகை தரவும்.

    ReplyDelete
  13. \\11. தலைவர் எப்பவும் அவுட் ஆப் ஸ்டேஷன்லேயே இருக்காரே என்ன விஷயம்! ஊருக்குள்ளே வந்தா ஸ்டேஷனுக்குள்ள பிடிச்சு போட தயாரா இருக்காங்கன்னு அர்த்தம்!\\
    மோடியைத் தானே சொல்றீங்க!!
    ஹி ............ஹி ............ஹி ............

    ReplyDelete
  14. என் மனதை தொட்டு விட்டார்கள் சிக்கனத் தம்பதிகள் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!