எக்ஸ்கியூஸ்மீ! கொஞ்சம் மூக்கை பொத்திக்கோங்க!

 எக்ஸ்கியூஸ்மீ! கொஞ்சம் மூக்கை பொத்திக்கோங்க!


நாட்டில் இருக்கும் குப்பைகளை எல்லாம் அகற்ற சொல்கிறார் மோடி! நல்லதுதான் இந்தியா சுத்தமானால் அதைவிட வேறெதுவும் வேண்டியதில்லை! சுத்தம் சோறுபோடும்தான். இதற்காக நடிகர்களையும் பிரபலங்களையும் அழைக்கிறார். அவர்களும் பாவம் துடைப்ப கட்டையும் முறத்தையும் எடுத்துக் கொண்டு குப்பை கூட்டி போஸ் கொடுத்து பத்திரிக்கைகளில் முதல்பக்கத்தில் இடம்பிடிக்கின்றனர்.
        எல்லாம் சரிதான்! குப்பையில்லா இந்தியா சாத்தியம் ஆகுமா? என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. நாம் உண்ணுவிட்டு எறியும் காகிதம் குப்பைகளை எளிதாக அகற்றி விடலாம்தான். ஆனால் மனிதக் கழிவுகளான மலங்கள் இன்னும் சாலையோரத்திலேயே எங்கெங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கின்றனவே! அதை என்ன செய்வது?
    சென்னை மட்டுமல்ல! தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்து நிலையங்கள் மூத்திரவாடையுடன் தானே இருக்கிறது. இந்த பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் அருகே மட்டும் என்ன சுகந்தமா வீசுகிறது? சென்னையில் பெரும்பாலான காம்பவுண்ட் சுவர்கள் இலவச கழிப்பிடங்களாகவே இருக்கின்றன. எத்தனையோ இலவசக் கழிப்பிடங்கள் வந்தும் இன்னும் போதவில்லை! இன்னும் அறிவுக்கு எட்டவில்லை!
         ஒரு பத்து வருடங்கள் முன்பு சென்னை தி. நகருக்கு ஒருவேளையாக வந்தேன். உடன் நண்பரும். வேலை முடிந்து ஒரு ஓட்டலிலும் உண்டுவிட்டு பஸ் நிலையத்திற்கு நடந்தோம். வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அந்த ஓட்டலின் உபயமா என்று தெரியவில்லை! நண்பரிடம் சொன்னேன். ஓட்டலிலேயே சொல்லியிருந்தா அங்க இருக்கற லெட்ரினை யூஸ் பண்ணி இருக்கலாம் இப்ப சொல்றியே என்றார். பஸ் நிலையத்தில் கழிப்பிடம் இருக்கும் என்று அங்கே சென்றால் மூடி இருந்தது. அங்கே விசாரித்த போது பக்கத்து தெருவில் என்றார்கள் அங்கேயும் தண்ணீர் இல்லை! அப்படியே ஒரு இரண்டு தெருக்கள் சுற்றினோம்! என்னால் ஒன்றுமே முடியவில்லை! கடைசியில் ஒரு கட்டண கழிப்பிடம்? அங்கே தண்ணீர் கை பம்பில் அடிக்க வேண்டும்! நிலைமையை யோசித்து பாருங்கள்! நண்பர் தண்ணீர் அடிக்க நான் உள்ளே புகுந்து விட்டேன்! எப்படியோ ஒருவாறு நிலைமையை சமாளித்து விட்டோம்! அன்று மட்டும் நான் தனியாக சென்று மாட்டியிருந்தால்?
    தி.நிகர் பல லட்சக்கணக்கான மக்கள் கூடும் ஒரு வணிக நகர்! அங்கேயே கழிப்பிடத்தின் கதி இப்படி? இதே போல் கோயம்பேடு பேருந்து நிலைய கழிப்பிடங்களின் நிலை மிக மோசம்! பேருந்து நிலையம் ஆரம்பித்த போது இருந்த பராமரிப்பு இப்போது இல்லை! கழிப்பிடம் உள்ளேயே நுழைய முடிவது இல்லை! அவ்வளவு நாற்றம்! போதாத குறைக்கு நம்மவர்களுக்கு வெண்குழல் வத்தி கொளுத்தினால்தான் வெளியே வரும் போல! அந்த புகை மூட்டம் வேறு! சுத்தம் என்றால் கிலோ என்ன விலை? என்பது போல அந்த கழிப்பிடங்கள்!
   இந்த நிலையத்திற்கு போதுமான கழிப்பிடங்கள் இல்லை! இருக்கும் கழிப்பிடங்களோ பராமரிப்பு இல்லை! இதே நிலைதான் திருச்சி, கரூர், கும்பகோணம் போன்ற பேருந்து நிலையங்களிலும் இருக்கும் கழிப்பிடங்களில் காசு வாங்கினாலும் சுத்தம் கிடையாது. போதுமான அளவும் இல்லை!
     நகரங்களே இந்த நிலை என்றால் கிராமங்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்கள் இன்னும் மாறவில்லை! முன்பெல்லாம் ஏரிக்கரையோரம் ஒதுங்கியவர்கள் இன்று சாலையோரம் ஒதுங்குகிறார்கள்! வீட்டில் கழிப்பிடம் வைத்திருக்கும் ஆண்கள் கூட அது பெண்களுக்கு மட்டும் என்று வயல் வரப்புகளை நாடுகிறார்கள்.
    கழிப்பிடம் இல்லாத வீட்டில் வசிக்க மாட்டேன் என்று புதுமணப்பெண் கோபித்துக் கொண்டதை செய்தியாக படிக்கிறார்கள்தான்! பார்க்கிறார்கள்தான்! ஆனால் அதை தன் சொந்த வீட்டில் எத்தனை பெண்களால் செய்ய முடியும்?
   ஒரு தேர்ந்த அரசாங்கமே கழிப்பிடங்கள் கட்ட அயல்நாட்டின் உதவியை கேட்கும்போது இந்த அப்பாவி பெண்கள் என்னதான் செய்ய முடியும்?
      இன்னமும் மகளீர் சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுத்தும் அதை பயன்படுத்த தயக்கத்துடன் இருக்கிறார்கள் பல பெண்கள். அதை சுகாதாரமாக பராமரிக்க பஞ்சாயத்துக்களில் பணமில்லை! பல இடங்களில் இந்த வளாகம் மூடியே கிடக்கிறது. முட்புதர்களைத்தான் இவர்கள் இன்னும் நாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    அதிகாலை வேலையில் நெடுஞ்சாலையோரம் பயணிப்பவர்கள் கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. கையில் பாட்டிலுடன் வரிசையாக அணிவகுப்பவர்கள் ஏராளம்!

    இன்னும் அரசுப்பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதிகள் கிடையாது. பல பள்ளிகளில் கழிப்பிடங்களே கிடையாது. இப்படி இருக்கையில் எப்படி சுத்தமான இந்தியா உருவாகும்? குப்பைகளை வாரி கொட்டிவிட்டால் போதுமா? இன்னும் எத்தனை எத்தனை அழுக்குகள் இருக்கின்றன? எந்த ஒரு திட்டத்தையும் விளம்பரம் மூலம் ஊடகங்களில் பெரிது படுத்திக் காட்டி தன்னை ஒரு விளம்பர பிரியராகவே காட்டிக் கொள்கிறார் மோடி?
    குப்பை வார போஸ் கொடுக்கும் நடிகர்களும், தொழிலதிபர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட சில வீடுகளுக்கு கழிப்பறைக் கட்டி கொடுக்கலாமே?
    நூறுநாள் திட்டம்,விலையில்லாப் பொருட்கள் வழங்கும் அரசு கழிப்பிடங்களை கட்டிக்கொடுக்கலாம் அல்லவா? தமிழகத்தில் இப்படி ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் அது குறித்த போதுமான தகவல்கள் பலருக்கும் தெரியாது. அதை விளம்பரம் செய்து பலரை தகவல் சென்றடைய வைக்கலாமே!
   கழிப்பிடம் கட்டி உள்ள வீடுகளுக்கு ஏதாவது சலுகை என்று அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். வணிக நிறுவனங்கள், தொழிலகங்களில் போதுமான கழிப்பிடங்கள் இருப்பதில்லை! அதில் போதுமான கழிப்பிடங்கள் கட்டச்சொல்லி அறிவுறுத்தலாம். அப்படி கட்டாதவர்களின் நிறுவனங்களை மூடச்செய்யலாம். கிரிக்கெட் போன்றவற்றில் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. அதை இது போன்ற நல்ல திட்டங்களுக்கு திருப்பி விடலாம். அப்படி தராத பட்சத்தில் நகரத்தில் போட்டிகளை நடத்தவிடாமல் செய்யலாம்.
    இப்படி நாடு முழுவதும் நம் பணத்தை கொண்டே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்ளலாம். அதை செயல்படுத்துவதில் உறுதியும் ஆர்வமும் ஊக்கமும் மட்டுமே அவசியம்.
    இதையெல்லாம் செய்தால் மோடி சர்க்கார் ஓர் நல்ல சர்க்காரே! அதை விடுத்து அயல் நாட்டில் போய் என் நாடு கப்பு அடிக்கிறது கழிப்பிடம் கட்டிக் கொடு என்று கெஞ்சுவது அசிங்கமாய் இல்லை!
     இரண்டு நாள் முன்பு ஒரு கட்டுமான பணி நடக்கும் வீட்டில் இருந்த கோவிலுக்கு பூஜை செய்ய போனேன். நான் போகவும் அந்த வீட்டின் ஓனர் கிளம்பி விட்டார். பணியாளர்கள்தான் இருந்தனர். அவர்களும் பெண் பணியாளர்கள். கழிப்பிடம் செல்ல வேண்டும் போல! எதிரே இருந்தது  கழிப்பிடம். ஆனால் பூட்டியிருந்தது. மேஸ்திரியிடம் சாவிக்கொத்து வாங்கி சாவிகளை போட்டு திறந்து பார்த்தார் திறக்க வில்லை! ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைக்க பார்த்தார். முடியவில்லை! பரிதாபமாக இருந்தது. நான் பூஜை முடித்துவிட்டேன். அந்த பணியாளர்கள் அவசர அவசரமாக ஒரு பக்கெட்டை எடுத்துக் கொண்டு ஓடினர் அருகில் இருந்த ஒரு முட்புதரைத் தேடி! இது இரவு வேளையல்ல! பகல்! அவர்கள் பெண்கள். எவ்வளவு கஷ்டம்?
     ஒரு வீட்டில் பணிக்கு செல்லுமிடத்தில் கழிப்பிடம் அவசியம் அல்லவா? அந்த வசதி கூட அங்கு இல்லை! இப்படித்தான் பல கட்டுமானங்கள் நடக்கிறது. அப்புறம் பெரிதாக பீற்றிக் கொள்கிறார்கள் அரசாங்கங்கள்! முதலாளிகள்!
     
   குப்பைகளை கலைவது இருக்கட்டும்! முதலில் நாடு முழுவதும் அனைவருக்கும் கழிப்பிடங்களை கட்டிக் கொடுங்கள்! அப்புறம் மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்தை மாற்றுங்கள்! மூத்திர சந்துகள் இல்லாத ஊர்களை உருவாக்குங்கள்! அப்புறம் இந்தியா ஒளிரும்! அதுவரை நாறிக் கொண்டுதான் இருக்கும்.

டிஸ்கி} எனது கணிணி விண்டோஸ் அப்டேட் செய்ய சொல்கிறது. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் கீ உங்களிடம் இருந்தால் பின்னூட்டத்தில் தாருங்கள் உதவியாக இருக்கும். நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. சமூக அக்கரையுள்ள பதிவு சுரேஷ் அவர்களே... நாடு சுத்தமாவது மனித மனங்களிலிருந்து தொடங்க வேண்டும் அரசியல்வாதிகளை நம்பி மோ(ச)டி போனது போதாதா ?

    ReplyDelete
  2. you are saying this much.

    but you are not ready to pay for what you are using (windows) .

    why do not you install linux ?

    ReplyDelete
    Replies
    1. காசு கொடுத்துதானே விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்தேன்! இணைத்துக் கொடுத்தவர் சி.டி கொடுக்க மறந்துவிட்டார். நானும் தெரியாமல் விட்டு விட்டேன்! அதனால்தான் உதவி கேட்டேன்! மேலும் விண்டோஸ் தளம் கேட்கும் டெபிட் கார்ட் வசதி என்னிடம் இல்லை!

      Delete
  3. அக்கரையான கண்ணோட்டம்...

    ReplyDelete
  4. விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
  5. An eye opener, Thalir. I hope the leaders think likewise!

    ReplyDelete
  6. மனிதன் அளவுக்கு மீறி ஒரு இடத்தில் குவிவதாலும், பிளாஸ்டிக் போன்ற இயற்க்கைக்கு முரணான வஸ்துகளை பயன்படுத்துவதாலும் வரும் பிரச்சினை இது. மற்றபடி மனிதக் கழிவுகள் இயற்கையில் மறுசுழற்சி ஆகிவிடும். தனிப்பட்ட வகையில் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரர்
    நலத்திட்டங்கள் விளம்பரமாக இருந்து விடாமல் செயல்வடிவம் பெற வேண்டுமென்பதையும் அதற்கான வழிகாட்டுதலையும் குறிப்பிடும் அழகான கட்டுரை. நான் பலமுறை எண்ணியதுண்டு முதலில் இவர்கள் பேருந்து நிலையங்களைத் தூய்மை செய்து விட்டு தூய்மை இந்தியா பற்றி பேசட்டும் என்று. இருந்தாலும் மோடியால் மட்டும் இதை செய்து விட முடியாது. அவர்கள் பூனைக்கு மணிகட்டி விட்டுருக்கிறார் அவ்வளவே. தூய்மை குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் வ்ர வேண்டும். அதற்கான சூழலை அரசு தான் செய்து கொடுக்க வேண்டும். கழிப்பறைகள் இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்ட அரசு பத்தாயிரம் ரூபாய் தருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இத்திட்டத்தை மக்களிடையே ஊழல் இல்லாமல் எடுத்துச் சென்றாலே வெற்றி தான். சிந்தனைக்கு நன்றிகள் சகோ. தொடருங்கள்..

    ReplyDelete
  8. அரசின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று மக்களை குடிமைப் படுத்துவது.
    சிங்கப்பூரில் ரோட்டில் துப்பினால் ஐநூறு டாலர் என்றால் ஒழுங்காக இருக்கும் நம்ப ஆள் இங்கே வந்ததும் துப்புகிறான் ..

    நமது பரப்பளவு பெரிது அது இது என்று சொல்லிக்கொண்டிருக்காமல் நாம் செயல்பட வேண்டும் திட்டங்கள் வேண்டும்
    சரி சரி உங்களை

    தண்ணி பம்ப் அடிக்க விட்டார்களே
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. மனித மனங்கள் குப்பையாகி விட்டது... அது சுத்தமானால்...

    ReplyDelete
  10. சமூக அக்கறையுள்ள நல்லதொரு பதிவு.

    "//குப்பைகளை கலைவது இருக்கட்டும்! முதலில் நாடு முழுவதும் அனைவருக்கும் கழிப்பிடங்களை கட்டிக் கொடுங்கள்! அப்புறம் மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்தை மாற்றுங்கள்! மூத்திர சந்துகள் இல்லாத ஊர்களை உருவாக்குங்கள்! .//"

    நியாயமான கோரிக்கை.

    ReplyDelete
  11. வணக்கம்
    அருமையான விழிப்புணர்வுப்பதிவு... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. உரத்த சிந்தனையுடன்
    உண்மையை வெளிச்சம் போட்டு
    காண்பித்த நண்பர் தளீர் சுரேஷ் அவர்களுக்கு
    மனமார்ந்த பாராட்ட்டுக்கள்!
    புதுவை வேலு

    ReplyDelete
  13. எல்லா இடங்களிலும் இதே நிலை தான்.

    ReplyDelete
  14. திட்டங்கள் என்பன தற்போது விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் இந்த உணர்வு அனைவருக்கும் உள்ளதுதான். இதற்கான விடிவு எப்பொழுது வரப்போகிறதோ எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  15. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?

    ReplyDelete
  16. சொந்தத்தில் நடந்த ஓர் துயரச்சம்பவம் காரணமாக பதிவுகள் எழுதவும் பதில் அளிக்கவும் இயல வில்லை! மன்னிக்கவும்! இன்றுதான் இணையம் வந்தேன்! இனி வழக்கம் போல தொடரும்!

    ReplyDelete
  17. நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  18. நல்ல செய்தியைச் சொல்லும் விழிப்புணர்வுப் பதிவு!

    ReplyDelete
  19. வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  20. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!