தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 வெந்தது
 உணவாகவில்லை!
 செங்கல்!

 மறைந்த நிலவு
 பூ தூவின நட்சத்திரங்கள்!
அமாவாசை!
 
சீட்டி அடித்தும்
ரசித்தனர் பெண்கள்!
மரத்தில் குருவி!

பறிக்கப்படாத
பூக்கள்!
முதிர்கன்னி!

நிஜத்தைதொலைத்து
நிழலில் நிம்மதிகாண்கிறாள்
நடிகை!


வெள்ளித்திரையின்
தங்க சரிகைகள்
நடிகைகள்!

விரிசல்
உலர்ந்துபோனது
ஈரம்!

திரை விரித்ததுவானம்
இருண்டது பூமி!அமாவாசை!

மூன்றேமுடிச்சுக்கள்
பிணைக்கிறதுஉள்ளங்களை!திருமணம்!

அசைந்தாலும் 
நகரவில்லை!
நீரில் நிழல்!

மை பூசியதும்
பொட்டுஇட்டுக்கொண்டது வானம்!நிலா!

அழகான பூ
மிதிபட்டது!மிதியடி!

வானில் பிறந்தாலும்
மண்ணோடு கலக்கிறது
நீர்!

அதட்டி மிரட்டியதும்
அடங்கி போகிறது மழை!
இடி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

Comments

  1. வழக்கம் போல மிக அருமையாகவே இருக்கிறது.பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அனைத்தும் ரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமை! அருமை! ரசித்தேன்!

    ReplyDelete
  4. குருவி சீட்டி அடிப்பதை இங்கே தினம் கேட்கலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

கணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி?