தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!



சிறைபட்டதை அறியாமலே
சிறகடித்துக் கொண்டிருந்தது
வண்ணத்துப் பூச்சி!

காலியான வயிறு!
நிரம்பவே இல்லை!
குப்பைத் தொட்டி!

யாரும் வரையவில்லை!
சுவரில் ஓவியம்!
நிழல்!

குளிர் இரவில் கச்சேரி!
எண்ணிலா பார்வையாளர்கள்!
நட்சத்திரங்கள்!

பற்றுதலை விட்டதும்
வாடிப்போனது!
கொடி!


தள்ளிப்போனதும்
துள்ளிவந்தது மகிழ்ச்சியும் வருத்தமும்
குழந்தை!

கற்றுக்கொண்டு
கற்றுக்கொடுக்கின்றன
குழந்தைகள்!

சிறைவைத்தாலும்
விலங்கிடுவதில்லை!
குழந்தையின் சிரிப்பு!

வெள்ளி முளைத்ததும்
வெட்டி எடுத்தார்கள்!
நரைமுடி!

வானம் கட்டியது
வண்ணச்சேலை!
வானவில்!


பொலிவிழந்த பூக்கள்!
படியவில்லை
பேரம்!

கொத்தினாலும் கத்தவில்லை!
கோலத்தில்
காகம்!

தட்டு நிறைகையில்
அதிகரிக்கிறது பாரம்!
குருக்கள்!

பதுக்கி வைத்தாலும்
கைது செய்யமுடியவில்லை!
இருட்டு!

விசையில்லாமல்
கவர்ந்து இழுத்தது
குழந்தையின் சிரிப்பு!

கொச்சைமொழியும்
இச்சையானது
குழந்தை!

பசியோடு இருந்தாலும்
புசிக்க ஈகவில்லை மக்கள்!
குப்பைத்தொட்டி!

தொடர்ந்து வந்தாலும்
யாரும் உணர்வதில்லை!
நிழல்!


தாவிக்கொண்டே இருந்தது
தடைபோட முடியவில்லை!
மரத்தில் அணில்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!






  

Comments

  1. மிகவும் ரசித்து படித்தேன் மிக அட்டகாசம்... படிப்பதற்கு அருமையாக இருக்கும் ஒவ்வொரு கருத்தையும் அழகான படத்தின் மேல் பதிந்து வெளியிட்டு இருந்தால் பார்பதற்கும் அழகாக இருக்கும் என்பது என் கருத்து
    பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! படத்தோடு கருத்தையும் பதிய ஆசைதான்! அதற்கான தொழில்நுட்பம் தெரியவில்லை! அடுத்தமுறை பவர்பாயிண்டில் செய்ய முடியுமா என்று முயற்சித்து பார்க்கிறேன்! ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி!

      Delete
  2. அனைத்தும் அருமை

    பற்றுதலை விட்டதும்
    வாடிப்போனது!
    கொடி!
    இது அசத்தல் ரகம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைத்துமே அசத்தல் தான் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  4. சிறைபட்டதை அறியாமலே
    சிறகடித்துக் கொண்டிருந்தது
    வண்ணத்துப் பூச்சி!//

    அருமை அருமை! மிகவும் ரசித்தோம் ! ரொம்பவே அசத்தறீங்க சுரேஷ்!

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை.
    "//விசையில்லாமல்
    கவர்ந்து இழுத்தது
    குழந்தையின் சிரிப்பு!

    குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஏது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2