கவன ஈர்ப்பு
சிலிண்டர் தட்டுப்பாடு ஏன்? தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன? தற்போதைய தமிழக அரசே காரணம். தமிழக அரசின் இலவச காஸ் இணைப்புக்கு பிறகு தமிழகத்தில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.அதே சமயம் புதிதாக இணைப்பு கேட்டு பெறுவோரும் அதிகரிக்க அதற்கு போதுமான அளவு சிலிண்டர்களை மத்திய அரசு ஓதுக்கீடு செய்ய வேண்டும்.ஆனால் மத்திய அரசு வழக்கமான அளவே ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழக அரசோ இலவச சிலிண்டர்களை வழங்கி வருகிறது எப்படி? வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 18 முதல் 20 நாட்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்கலை நாட்கடத்தி 25நாட்கள் கழித்துதான் பதிவு செய்யவேண்டும் என்று கட்டளையிடும் ஏஜன்சிகள் பதிவு செய்து 15நாட்கள் கழித்தே சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. ஆக குறைந்தபட்சமொரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு வழங்க வேண்டிய 12 சிலிண்டர்களை 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு சிலிண்டராக மாற்றி வழங்கி ஆண்டிற்கு இரண்டு சிலிண்டர்களை மிச்சம் பிடித்து இலவச பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. இதனால் செயற்கையாக சிலிண்டர் த...