இந்த மாத கொலுசு மின்னிதழில் எனது ஹைக்கூக்கள்!

 கொலுசு இலக்கிய மின்னிதழை பற்றி அறிந்திருப்பீர்கள்! இந்த மாத மின்னிதழில் எனது இரண்டு ஹைக்கூக்கள் அம்மின்னிதழில் இடம்பெற்றுள்ளது. வலைப்பூ எழுத்தாளர் பூபாலன் அதன் ஆசிரியர் குழுவில் உள்ளார். வலைப்பூ எழுதும் கவிஞர்கள் நிறைய பேர் இதில் எழுதி வருகின்றனர். நானும் என் பங்களிப்பை இந்த மாதம் செய்துள்ளேன். நண்பர் ஹிஷாலியும் இதில் எழுதி வருகின்றார்.

  மின்னிதழில் வந்ததை அப்படியே பிரிண்ட் எடுத்து பதிய இயலவில்லை! எனவே அதில் வந்த கவிதையை கீழே தந்துள்ளேன்.

   உடைபட்டது
   உழைப்பு!
  கடலில் பிள்ளையார்!


   அகலமான சாலைகள்!
    ஓடி ஒளிந்தது!
    நிழல்!


எனது படைப்புக்களை வெளியிட்ட கொலுசு மின்னிதழ் குழுமத்தினருக்கும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் முதல் தகவல் தந்த நண்பர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
 
     


Comments

  1. வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும்...

    ReplyDelete
  2. நல்ல ஹைகூ..வாழ்த்துக்கள்....!

    ReplyDelete

Post a Comment