சாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்பு
சாமி முன்பு குமாரசாமி சத்தியம் கர்னாடகாவில் பரபரப்பு எதியூரப்பா , குமாரசாமியின் சவால்களால் இன்று தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவில் நாடு முழுவதும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது . ஆனால் கடந்த 800 ஆண்டுகளாக இங்கு சாமி முன்பு சத்தியம் செய்யும் நிகழ்ச்சி சத்தமின்றி நடந்து வருவது நிறையப் பேருக்குத் தெரியாது . தென் கனரா மாவட்டத்தில் உள்ள எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது தர்மஸ்தலா . கோவில் வளாகத்தின் ஒரு பக்கம் நேத்ராவதி ஆறு அழகுற ஓடிக் கொண்டிருக்கிறது . இங்குள்ள மஞ்சுநாத சாமி கோவில் மிகவும் பழமையானது . கிட்டத்தட்ட 800 ஆண்டுகளாக இந்தக் கோவில் இப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்து வருகிறது . இங்கு காலம் காலமாக ஒரு பழக்கம் நடைமுறையில் உள்ளது . அதாவது தாங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க விரும்புவோர் இங்கு வந்து சாமி முன்பு நின்று , நான் சொல்வது உண்மை , சத்தியம் என்று சொல்லி நிரூபிப்பதுதான் அந்த வழக்கம் . சாமி முன்பு பொய் சத்தியம் செய்தாலோ அல்லது பொய் சொன்னாலோ அவர்களுக்கு கடும் விளைவுகள் ஏற்படு...