புதுக்கோட்டைக்கு வாருங்கள்! புது மாற்றம் காணுங்கள்!


புதுக்கோட்டைக்கு வாருங்கள்! புது மாற்றம் காணுங்கள்!


    நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று புதுக்கோட்டையில் புதிய பொலிவோடு அரங்கேற உள்ளது. 2012ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் சென்னையில் சீரும் சிறப்பாக நடைபெற்றது தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு. பிரம்மாண்டமான இரு சந்திப்புக்களை அடுத்து சென்ற வருடம் மதுரையில் மகத்தான சந்திப்புத் திருவிழா அரங்கேறியது. மூன்று விழாக்களும் திருவிழாவாக ஜொலித்தது. எண்ணற்ற பதிவர்கள் கலந்துரையாடி மகிழ்ந்து நூல்கள் வெளியிட்டு மகிழ்ந்த அந்த தருணங்கள் என்றென்றும் இனிமையானவை.

    சென்ற ஆண்டு மதுரை சந்திப்பில் இந்த ஆண்டு பதிவர் விழா புதுக்கோட்டையில் நடத்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது. பதிவரும் மூத்த ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் முத்துநிலவன் ஐயா தலைமையில் விழாக்குழுவினர் விரைந்து பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஆண்டு விழாவில் புதியதாக வலைபதிவர் கையேடு ஒன்று தயாரித்து வழங்க ஆவண செய்துள்ளார்கள். தமிழ்வலைபதிவர்களின் விவரங்களை அதில் அறிந்து கொள்ளலாம். இமாலயப் பணியான இதை சிறப்பாக தொகுத்து வருகின்றார்கள். உங்கள் பதிவும் அதில் இடம் பெற வேண்டுமெனில் செப்டம்பர் மாதம் 20 தேதிக்குள் உங்களைப் பற்றிய குறிப்புக்களை இந்த மின்னஞ்சலில் பதிவு செய்யுங்கள்.bloggersmeet2015@gmail.com

   விழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கே சென்று தங்களுடைய வருகையை உறுதி செய்யுங்கள். வருகையை பதிவு செய்க
 விழாவில் ஏராளமான பரிசுகள், போட்டிகள் காத்திருக்கிறது. விழாவினை பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கி பாருங்கள். வலைபதிவர் விழா விருதுகள் விவரம்

வலைபதிவர்களின் சந்திப்பு சிறக்க உங்கள் தளங்களில் சந்திப்பு பற்றி பகிருங்கள்! உங்கள் சக வலைப்பதிவர்களுக்கு தெரிவியுங்கள். விழாவுக்கு தங்களால் இயன்ற சரீர, உதவியுடன், நிதி உதவியையும் தாராளமாக வழங்குங்கள்! நிதி வழங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645


 விழாவை பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள ஓர் வாட்சப் குழுமம் துவங்கப்பட்டுள்ளது. அதன் எண்: 9443476716

இந்த வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்திட இந்த வலைப்பூவை தொடருங்கள் வலைப்பதிவர் சந்திப்பு 2015
 
 சென்னை பதிவர் சந்திப்பில் அப்துல் பாசித், மேலையூர் ராஜா, சுரேஷ்குமார்,ரமணி ஐயா, திண்டுக்கல் தனபாலன் சைதை அஜிஸ் அவர்களுடன் நான்.
இந்த பதிவர் சந்திப்புக்கு மட்டுமல்ல! அனைத்து பதிவர் சந்திப்புக்களுக்கும் மட்டுமல்ல பதிவர்களுக்கெல்லாம் வழி்காட்டியாக வாழ்ந்து வரும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் மிகச்சிறப்பாக தன் உழைப்பினை நல்கி வருகின்றார். மேலும் புதுக்கோட்டை பதிவர்களும் விழா சிறக்க அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். அவர்களின் உழைப்பு சிறக்க விழா சிறந்தோங்க தோள் கொடுப்போம்! நம்மால் ஆன உதவிகளை ஆலோசனைகளை, ஊக்கங்களை பகிர்ந்து கொள்வோம்! புதுக்கோட்டையில் ஒன்றுகூடுவோம்! வாழ்க பதிவர்கள்! வளர்க பதிவர் ஒற்றுமை!

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்புக்கு வாருங்கள்! உங்களுள் ஓர் புதிய மாற்றம் காணுங்கள்!

Comments

  1. மிக்க நன்றி சகோ....புதுகைக்கு வரவேற்கிறோம்..

    ReplyDelete
  2. விழா சிறக்கட்டும்.

    ReplyDelete
  3. அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    பதிவு செய்துவிட்டேன்
    நேரில் சந்திப்போம்

    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  4. சென்று வாருங்கள் சுரேஷ்

    ReplyDelete
  5. அருமையாக பதிவிட்டுள்ளீர்கள் நண்பரே!

    ReplyDelete
  6. புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    ReplyDelete
  7. புதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்
    நண்பரே

    ReplyDelete
    Replies
    1. whatsapp குழுவில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றி

      Delete
  8. அருமையாகப் பதிவிட்டு அனைவரையும்
    அழைத்த விதம் சிறப்பு!

    விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  9. தங்கள் பகிர்வும் அருமை, வாழ்த்துக்கள்,
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தங்களை சந்திக்க அவசியம் வருகிறேன் !

    ReplyDelete
  11. அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள் சுரேஷ்...

    நீங்களும் வர முயற்சிப்பதாகச் சொல்லி இருக்கின்றீர்கள்....சந்திப்போம்...

    ReplyDelete
  12. நன்றிசகோமிக்கமகிழ்ச்சி வாங்க,வாங்ககுடும்பத்தோடுவாங்கவரவேற்கிறோம்

    ReplyDelete
  13. நன்றிசகோமிக்கமகிழ்ச்சி வாங்க,வாங்ககுடும்பத்தோடுவாங்கவரவேற்கிறோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!