Posts

குழந்தை மனசு! ஒருபக்க கதை!

Image
  குழந்தை மனசு! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. நகரின் பிரபலமான அந்த ஐஸ்க்ரீம் பார்லரின் மகள் யாழினியுடன்அமர்ந்திருந்தேன். யாழினி கேட்ட கேசர் குல்ஃபியை ஆர்டர் செய்தேன். சர்வர் குல்பி ஸ்டிக்கை எடுத்துவர வாசலில் நிழலாடியது. அழுக்கேறிய ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் அங்கு ஒட்டப்பட்டிருந்த விதவிதமான ஐஸ்க்ரீம் படங்களை பார்த்துக் கொண்டிருக்க பார்லர் உரிமையாளன் கத்தினான். “ஏய்! என்ன பார்க்கிறே? கிளம்பு! கிளம்பு!” நிற்காதே இங்கே!” என்றான் “பிச்சைக்கார பசங்க! வந்துடறாங்க!” பிச்சையெல்லாம் கிடையாது போ போ! விரட்டினான். அவள் பரிதாபமாக கண்களில் நீர்தளும்ப வெளியேற முயல, ஹேய்! ஹரிணி! டிஸ்கைஸ் காண்டெஸ்ட்ல கலந்துட்டு அப்படியே வந்துட்டியா? வாட் எ சர்ப்ரைஸ்! என்று ஓடிச்சென்று அவள் கையைப்பிடித்து இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்ட என் மகள், என்ன சாப்பிடறே? என்றாள். அவள் கேட்ட ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுக்கச் சொன்ன என் மகள், பை ஹரிணி! சாப்பிட்டுட்டு பத்திரமா போய் வா! என்று கையசைத்துவிட்டு வெளியே வந்தாள். “யாரும்மா அது? உன் ப்ரெண்டா! நான் பார்த்ததே இல்லை! எனக்கும் தெரியாதுப்பா! ப...

நெத்தியடி! ஒரு பக்கக் கதை.

  நெத்தியடி! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. டாஸ்மாக்கிலிருந்து ஃபுல்லாக குடித்துவிட்டு தள்ளாடியபடி வீட்டுக்குள் நுழைந்த கதிரேசன் கண்களில் அவனது மகன் நரேஷ் தென்பட்டான். கை நிறைய சாக்லேட்களுடன் ஒன்றை உரித்து வாயில் போட்டு சுவைத்தபடி இருந்த நரேஷைப் பார்த்ததும் கதிரேசனுக்கு கோபம் கோபமாக வந்தது. “டேய் நரேஷ்! இங்க வாடா! உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?” சாக்லேட்ஸ் அதிகம் சாப்பிடக் கூடாதுன்னு? கை நிறைய சாக்லேட் வச்சிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கே?” கொஞ்சம் பம்மியபடி வந்த நரேஷ், ”அப்பா! சாக்லேட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்பா!” என்றான். ”ஆனா சாக்லேட்ஸ் நிறைய சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை! பல் சொத்தையாகும், கறைபிடிக்கும்!” ”அப்ப சாக்லேட்ஸ் சாப்பிடக் கூடாதாப்பா?” ”உடம்புக்கு கெடுதின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீ சொன்ன பேச்சைக் கேட்க மாட்டியா?” ”அப்ப நம்ம உடம்புக்கு கெடுதி பண்ற எதையும் நாம சாப்பிடக் கூடாது சரியாப்பா?” “வெரிகுட் டா! கண்ணா! அப்பா சொன்னதை சரியாப் புரிஞ்சுகிட்டு இருக்கிறே? இனிமே சாக்லேட் சாப்பிடறதை விட்டுடு!” ”சரிப்பா! நான...

ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் நூல் விமர்சனம்

Image
  ஜூனியர் தேஜ் பேஜ் சிறுகதைகள் சிறுகதை எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜூனியர் தேஜ் என்ற வரதராஜன் அவர்கள் தான் பல பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 5 பாகங்களாக புஸ்தகா டிஜிட்டல் மீடியா பதிப்பகம் வெளியிட்டுள்ளார். 130 முதல் 150 பக்கங்களுக்குள் உள்ள இந்த தொகுப்பு நூல்களின் வடிவமைப்பும் எழுத்துருவும் அருமையாக முதியோர்களும் வாசிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்தில் உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிற்கும் நமக்கு அறிமுகமான பிரபல எழுத்தாளர்கள் சிறப்பான வாழ்த்துரை வழங்கி நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றனர். நான் வித்தியாசமாக இந்த தொகுப்பின் 5 ம்பாகத்தை ( குணசீலத்துக் கதைகள்) முதலில் வாசித்தேன். மனம் உடைபடுகையில் அதுவே ஆழ்ந்த ரணமாகி இளகிய மனம் கொண்டவர்களை மனநோயாளி ஆக்கிவிடுகின்றது. மனநோய்க்கு சூழ்நிலையும் பயமும் தன்னம்பிக்கை குறைதலும் ஆகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஓர் மனநோய் உள்ளது. அதை சிலர் வெளிப்படுத்துகையில் பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டிவிடுகிறோம். இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளும் உளவியல் ரீதியாக நன்கு அலசி ஆராயப்பட்டு நல்ல தீர்வினையும் வழங்குகிறது. ஆசிரியர் ஓர்...

ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத ஸந்த்யா வந்தனம்.

    ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத ஸந்த்யா வந்தனம் .   ப்ராத ஸந்த்யா வந்தனம்   ஓம் ருக்வேதாய ஸ்வாஹா : ஓம் யஜூர் வேதாய ஸ்வாஹா : ஓம் ஸாம வேதாய ஸ்வாஹா : ஓம் அதர்வன வேதாய நம : ஓம் இதிகாஸ புராணாப்யோ நம : ஓம் , ஓம் , ஓம் ,   என்று   கண் காது மூக்கு தோள்பட்டைகள் , இதயம் , நெற்றி , சிரசு ஆகிய இடங்களில் கட்டைவிரல் மற்றும் மோதிரவிரல் சேர்த்து தொடவும் .   ப்ராணாயாமம்   ஓம் பூஹு , ஓம் புவஹ , ஓம் சுவஹ , ஓம் மஹஹ :, ஓம் ஜநஹ :, ஓம் தபஹ : ஓகும் ஸத்யம் , ஓம் தட்சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ :   ப்ரச்சோதயாது ,   ( வலது காதை வலது கையால் தொட்டுக்கொண்டு ) ஓம் ஆபோ :   ஜ்யோதிரஸொ அமிர்தம் ப்ரம்ம பூர்புவஸ்ரோம் . ( வலது கையால் இடது கையை மூடி வலது தொடை மீது வைத்துக்கொண்டு சங்கல்பம் ) மமோபாத்த ஸமஸ்த   துரித க்ஷயத்வாரா பரமேஸ்வர ஆக்ஞ்யா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் பிராதஸ் ஸந்தியா வந்தன உபாசிஷ்யே ருத்திரணியில் ஜலம் எடுத்து புரோக் ‌ ஷனம் செய்யவும் . ...