Posts

சின்னப் பூக்கள்! சிறுவர் மின்னிதழ்

தேன்சிட்டு மின்னிதழ் தீபாவளி மலர். புதிய வடிவமைப்பில்!

எனது இனிய நண்பர் திரு க.கமலக்கண்ணன் அவர்களின் அயராத பணிகளுக்கு இடையேயும் எனக்காக இரவுநேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி மூன்றே நாளில் வணிக இதழ்களுக்கு நிகராக தேன்சிட்டினை வடிவமைத்து தந்துள்ளார். அவரது உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்! நட்புக்கு பெருமிதம் கொள்கிறேன்! நன்றி சொல்ல வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன்!   படித்து மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இயன்றால் நண்பர் திரு கமலக்கண்ணன் வாட்சப் எண் +91 98400 75598 ல் அவருக்கு பாராட்டுக்களை பகிருங்கள்! நன்றி!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! பற்றவைத்ததும் பூத்தது மகிழ்ச்சி! பட்டாசு! சத்தம் போட்டு எழுப்பியது பட்டாசுகள்! தீபாவளி அதிகாலை! கரியான காசுகள் ஒளியேற்றின வாழ்க்கையை! சிவகாசிபட்டாசு தொழிலாளர்கள்! பூத்து கொட்டியது தொடுக்க முடியவில்லை! தீபாவளி மத்தாப்புக்கள்! அடங்கிப் போன பறவைகள்! பறந்து கொண்டிருந்தன! தீபாவளி வாணங்கள்! வெடிக்க கட்டுப்பாடு! பிடிக்க வில்லை! காற்று மாசு! தொலைத்த பால்யம்! மீண்டது தீபாவளி வெடி! வாட்சப் வாழ்த்துக்களில் வதங்கிப் போனது நிகழ்கால தீபாவளி! வெடித்து சிதறிய பட்டாசுகள்! பிடித்து வைத்தது பட்டாசு தொழிலாளர் வாழ்க்கை! திணிக்க திணிக்க திளைத்துப்போனது வயிறு! தீபாவளி இனிப்புக்கள்! வெடிகளின் வெளிச்சம்! வெளிப்படுத்தியது மழலைகளின் மகிழ்ச்சி! இரண்டே மணி நேரம் சுருங்கிப் போனது பட்டாசு வியாபாரம்! அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்த வாரம் இந்து மாயாபஜாரில் வெளியான எனது சிறுவர் கதை!

Image
சென்ற வாரம் புதனன்று இந்து தமிழ் திசை மாயா பஜார் இணைப்பில் எனது சிறுவர் கதை ஒன்று பிரசுரமானது. உங்களின் பார்வைக்கு!

தேன்சிட்டு தீபாவளிமலர்! நவம்பர் 2018- புத்தகம் 2

தேன்சிட்டு தீபாவளி மலர்- நவம்பர் 2018- புத்தகம்-1

yஎன்ற எழுத்தின் மீது சொடுக்கி படிக்கவும்

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!

Image
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்! நம்மை எல்லாம் படைத்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க படுகிறது.  ஐப்பசி மாதம் துலா மாதம் என்று விஷேசமாக கூறப்படுகின்றது.     இந்த மாதத்தில்தான் துலா ஸ்நானம் என்ற காவேரியில் முழுகி முன்னோரை வழிபடும் சிறப்பும் இருக்கிறது. இந்த மாதத்திலே அஸ்வினி நட்சத்திரத்தோடு வரக்கூடிய பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இத்தகைய அன்னத்தினால் ஆன அபிஷேகம் சிவபெருமானுக்கு மட்டுமே செய்விக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கத் திருமேனி உடையவர். அவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அன்னமும் லிங்க உருவம் உடையது. அன்னத்தால் ஆன சிவனை அன்னாபிஷேக தினத்தன்று தரிசித்து சேவிப்பது கோடி சிவனை வணங்கியதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன.    எவ்வளவுகொடுத்தாலும் போதாது என்று சொல்பவன் கூட போதும் என்று சொல்லக்கூடியது அன்னம். ...