Posts

இந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்!

Image
இந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்!    ஒரு சமயம் விக்கிரமாதித்தன் தன் மந்திரி பிரதானிகளுடன் அரச சபையில் அமர்ந்திருந்தான். அப்போது இந்திரஜாலம் கற்ற ஒருவன் அங்கு வந்தான். அவனை வரவேற்றான் விக்கிரமாதித்தன். அப்போது அந்த ஜாலக்காரன்,  “அரசே! சகல கலைகளிலும் தாங்கள் தேர்ச்சி உள்ளவர். உங்கள் முன்னே என்னுடைய வித்தைகளை காட்டி என் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன்! அனுமதி அளிக்க வேண்டும்!” என்றான்.    “இப்போது எனக்கு நேரமில்லை! அரசவையில் முக்கிய பணிகள் இருக்கிறது! நாளை உன் திறமையை கண்டுகளிக்கிறேன்!” என்றான் விக்கிரமாதித்தன்.    “தங்கள் சித்தப்படியே!” என்ற மந்திரவாதி விடைபெற்றான். மறுநாள் அரசன் விக்கிரமாதித்தன் சபையில் அமர்ந்திருந்த போது கையில் கத்தியுடன் பருத்த உருவத்துடன் நன்கு வளர்ந்த தாடியுடனும் வீரம் ததும்பும் முகத்துடனும் வீரன் ஒருவன் கம்பீரமாக வந்தான். அவனுடன் அழகிய பெண் ஒருத்தியும் வந்தாள். அந்த வீரன் அரசனை வணங்கி நின்றான்.    “வீரனே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று விக்கிரமன் விசாரித்தார்.   “ மன்னா!...

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

Image
மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!   ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களகிரி என்னும் வைணவத்தலம். இந்த தலத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக ஸ்ரீதேவியை இடது மடியில் அமர்த்திக்கொண்டு அருள்புரிகிறார் மகாவிஷ்ணு. இக்கோயிலுக்கு அருகில் மலை மீதுள்ள குகை ஒன்றில் ஸ்ரீ நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரே ஸ்ரீ பானக நரசிம்மர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.     பாரதத்தில் உள்ள மலைகள் மகேந்திரம், மலையம், ஸஹ்யம் சுக்திமான், ருக் ‌ ஷம் விந்தியம் பாரியாத்ரம் என்ற சப்த குல பர்வதங்கள் என்று விஷ்ணுபுராணத்தில் கூறப்படுகிறது. ஸ்ரீ தேவியாகிய மகாலட்சுமி அமிர்தத்தை விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்தகிரி, தர்மாத்ரி, தோத்தாத்ரி, முக்தியாத்ரி, சபலதா என்பவை அதன் மற்றபெயர்களாகும்.    மங்களகிரி மலையில் மேய்ந்துவந்த பசு ஒன்று தினமும் மாலையில் பால் இல்லாமல் திர...

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 4

Image
 ஜோக்ஸ்! 1.          என் மனைவி புடவை எடுக்கணும்னு மூணுநாளா ஊரெல்லாம் சுத்தி… ஒரு புடவையை செலக்ட் பண்ணிட்டாங்களா? ஒரு கடையை செலக்ட் பண்ணியிருக்கா! 2.          எங்க தலைவரை யாரும் கிட்ட நெருங்க முடியாது!       அவ்வளோ பாதுகாப்பா?    இல்ல அவ்ளோ கப்பு! 3.          தலைவரே! நம்ம கட்சியோட வாக்கு வங்கி சரிஞ்சி போயிருச்சு! நல்ல சிமெண்ட் போட்டு நிமிர்த்தி கட்டி முடிங்க! 4.          நம்ம தலைவர் வெற்றியையும் தோல்வியையும் சகஜமா எடுத்துப்பார்! அதுக்காக தோல்விவிழா கொண்டாடச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு! 5.          தலைவர் எதுக்கு தேங்காய் மூடியோட கோர்ட்டுக்கு போறார்? யாரோ துறுவித் துறுவி கேள்வி கேட்பாங்கன்னு சொன்னாங்களாம்! 6.          உடல் இளைக்கணும்னு  ஜிம்முக்கு போனியே என்...

பாரதத்தில் மோடியும் தமிழ்நாட்டில் லேடியும் ஓரங்கட்டப்பட்ட டாடியும்! கதம்பச்சோறு! பகுதி 36

Image
கதம்ப சோறு பகுதி 36 பிரதமர் மோடி:   எல்லோருடைய கணிப்பையும் மீறி 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது பா.ஜ.க. இதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்று சாதித்து காட்டிவிட்டார். பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளில் மட்டும் வென்று எதிர் கட்சி அந்தஸ்துக்கு கூட கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தொங்கு பாராளுமன்றங்கள் பலவற்றைப் பார்த்து சலித்துப்போன மக்கள் இந்த முறை நிலையான வலுவான ஆட்சி அமைய விரும்பினார்கள் போலும். காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மூன்றாவது அணி என்று சொல்லப்பட்ட அணியின் ஸ்திரமில்லாத போக்கு போன்றவையே பா.ஜ.க வின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம். மோடியின் தலைமையில் இந்த வெற்றியை கொண்டாடும் பா.ஜ.க உள்ளடி அரசியல்களில் இறங்காமல் நல்ல ஆட்சியை தருமானால் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் நோக்கத்தை நிறைவேற்ற உதவி புரியலாம். ஏகப்பட்ட சவால்கள் மோடிக்கு காத்திருக்கின்றன. அதை எப்படி எதிர்கொள்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்த்துக்கள் மோடி. சாதித்துக...

சிறுதுளி!

Image
சிறுதுளி! அந்த பெரிய உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர் மணிவாசகமும் அவரது மகன் கோகுலும். மணிவாசகம் இன்றைக்கு ஊரில் பெரிய செல்வந்தர். ஒரு சாதாரண பணியாளாய் வாழ்க்கையைத் துவக்கியவர் தன் அயராத உழைப்பினால் இன்று ஒரு பெரிய சோப்பு கம்பெனியை நடத்தி வருகிறார்.     உணவருந்தியதும் சர்வர் கொண்டுவந்த பில்லை செட்டில் செய்ய எடுத்தார் மணிவாசகம். “ஐயா! என்று தலையை சொறிந்தபடி நின்றான் சர்வர்.மணிவாசகம் அவனை ஏறிட்டும் பார்க்காமல் நேரே கவுண்டரில் சென்று பணத்தை கட்டிவிட்டு மீதிச்சில்லறையை வாங்கி பையில் போட்டுக்கொண்டார். கார் பார்க்கிங்கிலும் காரை கிளப்பியதும் வந்து நின்ற சேவகனை கவனிக்காதது போல கிளம்பிவிட்டார்.    “சரியான சாவுகிராக்கி” என்று பின்னால் அவன் முணுமுணுப்பது தெரிந்து கோகுலுக்கு அவமானமாகப் போய்விட்டது. அங்கிருந்து ஒருபழக்கடைக்குச் சென்றவர் பழங்களை பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார். இறுதியில் ஒரு பத்து ரூபாய் குறைத்து வாங்கியதும் அவருக்கு மகிழ்ச்சி. இவர் காரில் ஏறும் பொழுது, கடைக்காரன் பெருசா வந்திருதுங்க காரை எடுத்துகிட்டு! பத்து ரூபாய்க்கு பேரம் பேசிக்கிட்ட...

குழந்தை!

Image
குழந்தை! பூச்சாண்டிகளுக்கும் ஆசைதான் குழந்தைகளை பிடித்துப்போக காலம் காலமாக காத்து நின்றும் அனுப்ப அம்மாக்கள் தயாரில்லை! தடுக்கி விழவிட்டு அனைத்து மகிழ்கிறது பூமித்தாய்! ஈர உதடுகளால் முத்தம்பதிக்கையில் உலர்ந்த இதயங்களிலும் அன்பை விளைவித்து விடுகிறது குழந்தை! எல்லாச் சுமைகளையும் இலேசாகிப் போகின்றது கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பை காண்கையில்! ஒற்றை விரலால் தீண்டி ஓடி ஒளிகையில் சுற்றியெல்லாம் மறந்து சொர்கம் திரும்புகிறது! பிள்ளைகளின் விளையாட்டில் கடவுளும் கலந்துகொள்கிறார் குழந்தையாக! காட்சியில் பதிபவை எல்லாம் பொதிந்து போகையில் பெரிய மனுச அவதாரம் எடுக்கிறது குழந்தை! குழந்தையினை காண்கையில் விழிகளை அகலமாக்குகிறது பவுர்ணமி நிலா! அலங்கோலமாக இருந்தாலும் அழகாக இருப்பதாக உணர்கிறது குழந்தை கொஞ்சும் வீடு! குழந்தை தின்ற மிச்சத்தை உண்டு குதுகலப்படுகின்றன குடியிருக்கும் எறும்புகள்! பாட்டி தாத்தாக்களை பால்யத்துக்கு அழைக்கின்றன பாப்பாக்கள்! உப்பு மூட்டை சுமந்தாலும் இனிக்கவே செய்கிறது தாத்தாக்களுக்கு! குறும்புகள் அரும்புகையில்...