தினமணி கவிதை மணி! நல்லதோர் வீணை

தினமணி கவிதை மணியில் ஜனவரி 29ம் தேதி பிரசுரமான எனது கவிதை!



நல்லதோர் வீணை:  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 29th January 2018 03:23 PM  |   அ+அ அ-   |  
பிறக்கையில் எவ்வுயிரும் நல்லுயிரே!
பிறர் கையில் சிக்கி வளர்க்கையில்தான் பிழை
வடிக்கையில் எவ்வீணையும் நல்லதோர் வீணைதான்!

அதை மீட்டுகையில் எழுவதுதான் சுபஸ்வரமோ அபஸ்வரமோ!
உதிக்கையில் கதிரவன் அழகே தான்
உச்சிக்கு வருகையிலே அவன் தணலேதான்!

மேகம் பொழியும் நீருக்கு சுவையில்லை!
பிடிக்கும் பாத்திரமான பூமி கொடுக்கும் சுவையோ பல்வகை!
வீசும் காற்றுக்கும் வெளியில் எந்த மணமில்லை!

வாசம் கடத்தி வலுவில் பழியை சுமக்கிறது!
பூமியில் பிறக்கும் எவ்வுயிரும் நல்லுயிர்தான்
பொய்யும் புரட்டும் களவும் திருட்டும்
ஜனிக்கையில் உதிப்பதில்லை!

சூழலும் சமூகமும் சூழ்ச்சியும் காழ்ப்பும்
கடவுளைக்கூட சாத்தானாக்கும்!
இனிய இசைதனை வார்க்கும் எல்லா வீணையும்
என்றும் நல்லதோர் வீணையே!

மீட்டும் மனிதரில் மாற்றம் வருகையில்
நாட்டில் நல்லதோர் மாற்றமாய்
இசைத்திடும் இனியதை என்றும் நல்லதோர் வீணை!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!