தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!


தினமணி கவிதை மணியில் கடந்த வாரங்களில் வெளிவந்த எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு!

மறு ஜென்மம்!

காய்ந்திட்ட்ட நதிகள் தோறும் மீண்டும்
நீரோடினால் அது நதிக்கு மறு ஜென்மம்
காய்ந்திட்ட புற்கள் எல்லாம் மழை பெய்து
துளிர்த்திட்டால் அது புல்லுக்கு மறு ஜென்மம்!
குற்றங்கள் புரிந்த மனிதன் தவற்றை உணர்ந்தே
திருந்தி வந்தால் அது அவனுக்கு மறு ஜென்மம்!
பிள்ளைகள் பிரசவிக்கும் தாய்மார்கள் எல்லோர்க்கும்
பிரசவம் முடிந்து வருதல் மறுஜென்மம்!
செதுக்கிய பாறைகள் எல்லாம் சிற்பமாய்
மாறுகையில் அது பாறைக்கு மறு ஜென்மம்!
பிசைந்த சேறு குயவனின் கைவண்ணத்தில்
குடமாய் மாறுகையில் அது மண்ணுக்கு மறுஜென்மம்!
பூக்களாய் பூத்தவை மாலையாக
தொடுக்கப்படுகையில் அது பூவுக்கு மறு ஜென்மம்!
தோல்வியில் துவண்டவன் துணிச்சலாய்
எழுந்து வெல்கையில் அவனுக்கு மறுஜென்மம்!
வாழ்க்கையில் புதிய பாதையை வகுத்து
நடக்கையில் அது மறுஜென்மம்!
துன்பங்களையே துணையாகக் கொண்டவன்
இன்பத்தை அடைவது மறுஜென்மம்!
எதிரியை நண்பனாய் ஏற்றவனுக்கு
எதிர்வரும் வாழ்க்கை மறுஜென்மம்!
தூங்கி விழிக்கும் மாந்தருக்கெல்லாம்
துளிர் விடும் மறுநாள் மறுஜென்மம்!





நிழலாடும் நினைவு:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 10th July 2017 04:32 PM  |   அ+அ அ-   |  
அதிகாலைப்பொழுதில் எந்திரிக்கையில்
நினைவுக்கு வருகிறது கிராமத்து கோயில் ரேடியோவில்
ஒலித்த சுப்ரபாதம்!
அடுக்குமாடி குடியிருப்பில் வாசல் நோக்குகையில்
ஸ்ரீரங்கத்து வீதிகளின் மாக்கோலம் நினைவுக்கு வருகிறது!
மொபைலில் ஒலிக்கும் எஃப் எம் கேட்கையில்
அந்தகாலத்து விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு
நிழலாடுகின்றது.
அபார்ட்மெண்ட் பார்க்கில் சிறுவர்கள் ஆடும் ஊஞ்சலை
காண்கையில் அழகாய் கண் முன்னே நிழலாடுகிறது
ஆற்றங்கரை ஆலமரத்து விழுது ஊஞ்சல்கள்!
கொளுத்தும் கோடை வெயிலில் வியர்த்து வீடு திரும்புகையில்
ஐயங்கார் வீட்டு தென்னை தோப்பில் இளநீர் குடித்தது
நிழலாடுகின்றது!
பேரப்பிள்ளைகள் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கையில்
எட்டாம் வகுப்பில் அப்பா கையெழுத்து போட்டு மாட்டிக்கொண்டது
நினைவில் நிற்கிறது!
ஐஸ்க்ரிம்பார்லரில் வெண்ணிலா ஃப்ளேவரில்  ஐஸை சுவைக்கையில்
மிதி வண்டியில் சேமியா ஐஸ் வாங்கி தின்றது நினைவில் வருகிறது!
குட்டிக் குழந்தைகள் அபார்ட்மெண்ட் வாசலில் மூன்று சக்கர சைக்கிள்
ஓட்டுவதை பார்க்கையில் அந்த நாளில் பனங்குடுக்கை வண்டி ஓட்டியது
நிழலாடுகிறது!
ஏசி காற்றில் ஃபோம் மெத்தையில் படுத்துறங்கும் சமயத்திலும்
வராண்டா முற்றத்தில் ஈஸிச் சேரில் விசிறியால் விசிறி
படுத்த காலங்கள் நிழலாடுகின்றது!
அகல சாலைகளில் அதிவேக வண்டிகளில் பயணிக்கையில்
மண் சாலையில் மாட்டுவண்டியில் பயணித்த காலங்கள்
நிழலாடுகின்றது!
டூரிங்க் டாக்கீஸ்! குதிரை வண்டி! தேன் மிட்டாய்!
கண்ணா மூச்சி! நொண்டிக்குதிரை! இப்படி எத்தனையோ நினைவுகள்!
நிகழ்காலத்தில் ஒவ்வொருவரிடமும் இறந்த கால நினைவுகள்
எச்சம் இருக்கிறது
நிழலாடும் அந்த நினைவுகளில் ஒரு சுகம் இருக்கிறது!

Comments

  1. // தவற்றை உணர்ந்தே திருந்தி வந்தால் மறு ஜென்மம் //

    அருமை...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ஆழ்ந்த சிந்தனையின்
    மறுஜென்மமாய் வந்த அற்புதக்கவிதையை
    மிகவும் இரசித்தேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. நல்ல சிந்தனைகள் கவி வடிவத்தில்! வாழ்த்துகள் சுரேஷ்!

    ReplyDelete
  4. தன்னம்பிக்கை கவிதை அருமை

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சுரேஷ்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!