தென்னை மரம் ஏற நவீன கருவி: கோவை இளைஞருக்கு அங்கீகாரம்
பெ.நா.பாளையம்:தென்னை மரம் ஏற, நவீன கருவி கண்டுபிடித்த, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் இளைஞருக்கு, தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும், வாய்ப்பு கிடைத்தது. தென்னை மரம் ஏற, புதியதாக மேம்படுத்தப்பட்ட கருவியை, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன், கடந்த 2008ம் ஆண்டு வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாக, மிக உயரமான தென்னை மரத்திலும், விரைவில் ஏற முடியும். காயம் ஏற்படாது: தென்னை மரம் ஏற, ஏற்கனவே பல வடிவங்களில் கருவிகள் உள்ளன. ஆனாலும், அதைப் பயன்படுத்துவதில், நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டன. உதாரணமாக, தென்னை மரம் ஏறும் கருவியில் பல் சக்கரம் பயன்படுத்தப்பட்டதால், மரங்களின் மேல்பகுதியில், சேதம் ஏற்பட்டது. நாளடைவில், மரங்களுக்கு பாதிப்பு உண்டானது. அடிப்பகுதியில் அகலமாக உள்ள தென்னை மரங்களில், அது போன்ற கருவிகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மரத்தின் சுற்றளவுக்கு ஏற்ற வகையில் மரம் ஏறும் கருவியை நீட்டிக்க செய்யும் வசதியும் இல்லை. ஆனால், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவியால், மரங்களுக்கு காயம் ஏற்ப...