இன்று முதல் 8மணி நேரம் மின்வெட்டு! இருண்ட தமிழகம்!
 
        பற்றாக்குறை  அதிகரிப்பால் , மாநிலம்  முழுவதும் , அறிவிக்கப்பட்ட  மின்வெட்டு , 8 மணி  நேரமாக , இன்று  முதல்  உயர்த்தப்பட  உள்ளது . கோடைக்காலம்  துவங்கும்  நேரத்தில் , அதிகரிக்கப்பட  உள்ள  இந்த  மின்வெட்டு , மக்களுக்கு  மிகப்பெரிய  அதிர்ச்சியை  ஏற்படுத்தும் . மின்  பற்றாக்குறையால் , ஏற்கனவே  தமிழகம்  புழுங்கி  வருகிறது . புதிய  மின்  திட்டங்கள்  அமலாக , இன்னும்  நான்கு  அல்லது  ஐந்து  மாதங்கள்  ஆகும் . செயலில்  உள்ள  திட்டங்களிலும் , சொல்லிக்கொள்ளும்படியாக  உற்பத்தி  இல்லை . ஆனால் , பயன்பாட்டு  அளவு , நாளுக்கு  நாள்  அதிகரித்துக்  கொண்டே  வருகிறது . உற்பத்திக்கும் , பயன்பாட்டுக்கும்  இடையிலான  வித்தியாசத்தை  ஈடுகட்ட  முடியாமல் , தமிழக  மின்  வாரியம்  திணறி  வருகிறது . இதை  சமாளிக்கும்  வகையில் , சென்னை  உள்ளிட்ட  பெருநகரங்களில் , 1 மணி  நேரம் , புறநகர்  மற்றும்  பிற  நகர்ப்பகுதிகளில் , 3 மணி  நேரம் , கிராமப்புறங்களில் , 6 மணி  நேரம்  என , மூன்று  விதமாக , அறிவிக்கப்பட்ட  மின்வெட்டு  அமல்படுத்தப்பட்டது . அறிவிக்கப்பட்டது  தான்  இவ்வளவே  தவிர , பெரும்பாலான  இடங்களில் , இதை  விட...
 
 
 
 
