Posts

வரன் ஒரு பக்க கதை

Image
  வரன்..ஒருபக்க கதை. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. என்னங்க வயசுக் கூடிக்கிட்டே போவுது இன்னும் இப்படியே உக்காந்துகிட்டிருந்தா எப்படி சட்டு புட்டுன்னு ஒரு வரனை பேசி முடிச்சாத்தானே.. நான் என்ன சும்மா இருக்கிறேன்னு நினைச்சியா இதுவரைக்கும் தரகர்களுக்கு மட்டுமே முப்பதாயிரம் கொடுத்திருக்கேன். மேட்ரிமோனியல் தனிக் கணக்கு. ஒரு வரனாவது குதிர்ந்தாதானே.. பேசாம நம்ம ஜோஸ்யர்கிட்டே போய் ஏதாவது பரிகாரம் கேட்போமா? ஏண்டி தெரியாமத்தான் கேக்கிறியா இதுவரைக்கும் மாசத்துக்கு ஒர் பரிகாரம்னு நாட்டுல் இருக்க எல்லாக் கோயிலும் சுத்தி வந்தாச்சு அப்ப என்னதாஙக பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. படிக்கிற காலத்திலே ஒழுஙகா படிச்சு நல்ல வேலைக்குப் போயிருந்தா இந்த கஷ்டம் இருந்திருக்காது... அதெல்லாம் சும்மாங்க..ஃபாரின்ல வேலைப்பார்க்கிற பசஙகளுக்கு கூட வரன் அமைய மாட்டேங்குது.. ஒத்தபைசா வரதட்சணை வேணாம்கிறோம். போதுமான சம்பாத்தியம் சொந்த வீடெல்லாம் இருந்தும் நம்ம பையனுக்கு வரன் அமைய மாட்டேங்குதே இது கலிகாலம் தான் அங்கலாய்த்துக் கொண்டனர் அந்த தம்பதிகள்.

அந்தாதி ஹைக்கூ!

  அந்தாதி ஹைக்கூ! தூண்டி விட்டதும் சுடர் விட்டது அகல்விளக்கு! விளக்கு ஏற்றியதும் அடியில் ஒளிந்துகொண்டது இருட்டு! இருட்டுக் கடையில் வாங்கினாலும் எடையில் குறையவில்லை! இனிப்பு! இனிப்புக் கடை! கூட்டம் மொய்த்தும் மகிழவில்லை! ஈக்கள். ஈக்கள் சூழ்ந்தன இறந்து கிடந்தான் அனாதை! அனாதை இல்லம் கை கோர்த்தன புதிய உறவுகள் உறவுகள் கைவிட்டதும் பற்றிச் சென்றது காற்று சருகு! சருகுக் குவியல் கலைத்துப் பார்த்தது காற்று! காற்றுக்கு வேலி போட்டதும் உடைத்துக்கொண்டு புறப்பட்டது புயல்! புயலாய் பறக்கும் வாகனங்கள் மெதுவாக சாலையைக் கடக்கிறது சிற்றெரும்பு. சிற்றெரும்பு மிதந்த தேநீர் ஆறிப்போனது துக்கவீடு! துக்கவீட்டில் நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்த்துகிறது ஊதுபத்தியின் சாம்பல்

நிதர்சனாவின் நிழல் நிமிஷங்கள்-

  குமுதம் வார இதழ் சில வருடங்கள் முன்பு 2020 என்று நினைக்கிறேன். எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் எழுதிய ஒரு சிறுகதையின் பாதியை தந்து மீதியை முடிக்கச்சொல்லி ஒரு போட்டி நடத்தியது. அந்த போட்டிக்கு நானும் ஒரு கதை எழுதினேன். அந்த சமயம் நிறைய வேலைப்பளுவால் போட்டி முடிய மூன்று நாட்கள் இருந்த போது அவசர அவசரமாக எழுதி ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பினேன். கதை தேர்வாகும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தேர்வு பெறவில்லை. அந்த கதையை கீழே தந்திருக்கிறேன். வாசிக்கும் நண்பர்கள் இக்கதையில் உள்ள குறைகளை சுட்டினால் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். இனி ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய கதைச்சுருக்கம் மற்றும் என் கதை கீழே.. என்னோடு கதை எழுதுங்கள். ஒட்டு மொத்த குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சினிமா ஆசையில் சென்னை வருகிறாள் நிதர்சனா. பிரபல நடிகையாகி விடும் அவளை பல வருடங்கள் கழித்து பார்க்க வரும் அண்ணன் அவளை தன் வீட்டுக்கு அப்பா அம்மாவை பார்க்க அழைத்து செல்ல அவளும் ஆவலோடு செல்கிறாள். அங்கே அப்பா அம்மா இருவரும் வாடிய மாலையோடு போட்டோக்களாக இருப்பதை பார்க்கும் நிதர்சனா, அதற்கு அடுத்ததாக தன் படம் புது மாலைய...

அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்

Image
 அன்ன தோஷம் போக்கும் ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம் உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன் ? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. சாம வேதத்திலே ஒரு இடத்தில் “ அஹமன்னம் , அஹமன்னம் , அஹமன்னதோ ” என்று கூறப்பட்டுள்ளது , அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம , விஷ்ணு , சிவ சொரூபம். அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.   ஐப்பசி   பௌர்ணமியன்று அறுவடையான புது   நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து   சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு   போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர   வல்லதாகும்.   சிவன் பிம்பரூபி , அவரது மெய்யன்ப...