Posts

Showing posts from 2025

கனவு மெய்ப்பட வைத்த கவுர்!

Image
    கனவு மெய்ப்பட வைத்த கவுர்!   1973 முதலே பெண்களுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நம் இந்திய கிரிக்கெட் அணி கவனம் பெறத்தக்க வகையில் விளையாடி வருகின்றது. இரண்டு முறை உலக கோப்பையை நெருங்கி நெருக்கடிகளில் சிக்கி கை தவறவிட்டிருக்கிறது இந்திய அணி.   இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலக அளவில் பெரும் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். கிட்டத்தட்ட   இருபது ஆண்டுகள் விளையாடிய அவர் பல சாதனைகளை   செய்திருந்தாலும் உலக்கோப்பையை வெல்ல முடியவில்லை! உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அவர் கனவு. கடந்த 2022ல் அதே நோக்குடன் தான் அவர் உலக கோப்பையில் களமிறங்கினார். ஆனாலும் லீக் சுற்றோடு திரும்ப வேண்டிய சூழல்.   அப்போது இப்போதைய கேப்டன் கவுர், மற்றும் மந்தனா. இன்று நாம் தோற்றிருக்கலாம். ஆனால் அடுத்த உலக கோப்பை நமக்குத்தான். அதை வென்று உங்கள் கையில் கொடுப்போம் என்று சொல்லி ஆறுதல் தந்திருக்கின்றனர். அன்று   அவர்கள் சொன்னது இன்று நிஜமாகி இருக்கிறது.   இந்த உலக கோப்பைய...

சாளக்கிரம கற்களின் தாய்- கண்டகி நதி

Image
 கண்டகி நதி புராணம் "   சாளக்கிராம கற்களின் தாய்*  தாசி குலப் பெண்ணான #கண்டகி என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்னவென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால்...

தேன்சிட்டு மலர்ந்த கதை!

Image
    தேன்சிட்டு மலர்ந்த கதை !   வருடம் 1993. அப்போது ப்ளஸ் டூ முடித்து இருந்தேன் . சிறுவனிலிருந்து இளைஞனாக மாறும் காலம் . அதுவரை சிறுவர்களுக்கான இளந்தளிர் என்ற கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை நடத்திவந்தேன் . இளைஞனாக மாறும் காலம் வந்ததால் இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது .    தோழன் ஜெயேந்திர குமாருடன் ஆலோசித்தேன் . ஆரம்பிக்கலாம் . ஆனா தொடர்ந்து நடத்த முடியுமா ? ன்னு கேட்டான் . ஏனெனில் நான் மாதமிருமுறை இதழாக நடத்த வேண்டுமென்றேன் . அது முடியுமா ? என்றான் . முடியும் என்று சொன்னேன் . அப்போது நான் பி . காம் கரஸ்பாண்டெட் கோர்ஸ் சேர்ந்திருந்தேன் . அதனால் வீட்டில் வெட்டியாக நிறைய பொழுதை செலவழித்தேன் . அதனால் கொஞ்சம் உபயோகமாக பொழுதை கழிக்க உத்தேசித்து இதழ் தயாரிக்க முடிவெடுத்தேன் .   16 பக்கங்கள் . முன்று மூன்று பக்கங்களில் இரண்டு சிறுகதை . ஒரு இரண்டு பக்கத்திற்கு கவிதை . இரண்டு பக்கத்திற்கு ஜோக்ஸ் ,   கடைசிப்பக்கம் என்று ஒரு பக்கம் சிறு கட்டுரை . ஒரு மூன்று பக்கத்திற்குத் தொடர்கதை என்று முடிவு செய்தோம் . மீதமுள்ள பக்க...

தேன்சிட்டு தீபாவளி மலர் 2025

  தேன்சிட்டு தீபாவளிமலர் 2025    இந்த லிங்கை சொடுக்கி தேன்சிட்டு தீபாவளி மலர் 2025 ஐ வாசித்து மகிழவும் 41 சிறுகதைகள், 20 கட்டுரைகள், 35 கவிதைகள், ஏராளமான ஜோக்ஸ், சிறுவர் பகுதி என 360 பக்க மின் மலர்.   வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!   வருகைக்கும் வாசிப்புக்கும் என் அன்பு நன்றிகள்!

தேன்சிட்டு தீபாவளி மலர்- 2025 பக்கம் பக்கமாக புரட்டி வாசிக்கலாம்

 

வரன் ஒரு பக்க கதை

Image
  வரன்..ஒருபக்க கதை. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. என்னங்க வயசுக் கூடிக்கிட்டே போவுது இன்னும் இப்படியே உக்காந்துகிட்டிருந்தா எப்படி சட்டு புட்டுன்னு ஒரு வரனை பேசி முடிச்சாத்தானே.. நான் என்ன சும்மா இருக்கிறேன்னு நினைச்சியா இதுவரைக்கும் தரகர்களுக்கு மட்டுமே முப்பதாயிரம் கொடுத்திருக்கேன். மேட்ரிமோனியல் தனிக் கணக்கு. ஒரு வரனாவது குதிர்ந்தாதானே.. பேசாம நம்ம ஜோஸ்யர்கிட்டே போய் ஏதாவது பரிகாரம் கேட்போமா? ஏண்டி தெரியாமத்தான் கேக்கிறியா இதுவரைக்கும் மாசத்துக்கு ஒர் பரிகாரம்னு நாட்டுல் இருக்க எல்லாக் கோயிலும் சுத்தி வந்தாச்சு அப்ப என்னதாஙக பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. படிக்கிற காலத்திலே ஒழுஙகா படிச்சு நல்ல வேலைக்குப் போயிருந்தா இந்த கஷ்டம் இருந்திருக்காது... அதெல்லாம் சும்மாங்க..ஃபாரின்ல வேலைப்பார்க்கிற பசஙகளுக்கு கூட வரன் அமைய மாட்டேங்குது.. ஒத்தபைசா வரதட்சணை வேணாம்கிறோம். போதுமான சம்பாத்தியம் சொந்த வீடெல்லாம் இருந்தும் நம்ம பையனுக்கு வரன் அமைய மாட்டேங்குதே இது கலிகாலம் தான் அங்கலாய்த்துக் கொண்டனர் அந்த தம்பதிகள்.