ஒரு வரிக் கதைகள்!

 

பூமி!

அதோ தெரியுது பார் பூமி! அங்கேதான் நம்ம முன்னோர்கள் வசித்துவந்தார்கள் என்று குழந்தைக்கு கதை சொல்லி நிலாவில் சோறுட்டிக் கொண்டிருந்தாள் கி.பி.2200ல் தாய்.

 

லீவ் எப்ப?

கொரானா முதல் அலை, ரெண்டாவது அலைக்கு லீவ் விட்டாங்களே! இப்போ ஓமிக்ரான் வந்திருக்கே எப்பப்பா லீவ் விடுவாங்க?” என்று அப்பாவிடம் ஏக்கமாய் கேட்டான் மூன்றாவது படிக்கும் முகில்.

 

தண்டணை!

இன்னொருமுறை இந்த தப்பு பண்ணிணேன்னா மழைக்காலத்திலே சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுவேன் ஜாக்கிரதை!” என்றார் ஆபீஸ் மேனேஜர்.

 

இழப்பு!

 வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்  வீடிழந்தன குளத்து மீன்கள்.

 

மறந்திடாதீங்க!

மாஸ்க்கை எங்காவது மறந்து விட்டுடப் போறீங்க! மறக்காம போட்டுட்டு வாங்க!” என்று வெளியே செல்கையில் அறிவுறுத்தி அனுப்பினாள் மனைவி.

      

2121

சாப்பிட்டு முடித்ததும் ஒரு மாத்திரையை விழுங்கியவன் .தொண்டைக்குள் இறங்கியது விலைமதிப்பில்லா குடிநீர்.


எப்ப வருவீங்க?

அப்பா எப்போப்பா வருவீங்க? என்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த நண்பனின் குழந்தை கேட்கும் போது நண்பனின் மொபைலை வைத்திருந்த சகவீரனால் அழுகையை தவிர்க்க முடியவில்லை.


மாசு!

தெருவெல்லாம் ஒரே குப்பையை கொளுத்தி பொல்யூசன் பண்றானுங்க! திருந்தவே மாட்டானுங்க என்றவர் பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி அங்கேயே பற்ற வைத்தார்.


சுத்தம்!

 வெள்ளை வேட்டி அணிந்து பளிச்சென்று கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டவர் ஐயர் கொடுத்த திருநீற்றை நெற்றியில் பூசிவிட்டு மிச்சத்தை தூணில் கொட்டினார்.


விட்ட பயம்!

    ஊசி என்றாலே ஒரு காத தூரம் ஓடும் மாதவன் கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் “சரக்கு” வாங்க முடியும் என்றதும் முதல் ஆளாய் ஊசிப் போட்டுக்கொள்ள கிளம்பினான்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்டில் தெரிவித்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!

 

Comments

  1. எல்லாமே நன்றாக இருக்கிறது சுரேஷ். மாசு டாப் பூமி, சுத்தம்

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!