அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்! அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந்த மரத்தின் விதைகள், வேர், பட்டைகள் முதலியன பயன்படுகிறது. இதில் ஒருவகை மரம் வேர் அழிஞ்சில் என்பதாகும். ஏறிழிஞ்சி: ஏறு+ இழிஞ்சி என்பதே இவ்வாறு ஏறிழிஞ்சி என சேர்ந்து புணர்ந்தது. இழிஞ்ச மரத்து விதைகள் கீழே விழுந்து மீண்டும் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் வித்தியாசமான மரமே ஏறிழிஞ்சி. இது தெய்வீக மரமாகும். அழிஞ்சி, அழிஞ்சில், வேர் அழிஞ்சில் என்றும் இந்த மரம் வழங்கப்படுகிறது. இந்த வேர் அழிஞ்சில் மரமானது பங்குனி, சித்திரை,மாதங்களில் பூத்து குலுங்குகிறது. பூக்கள் நறுமணம் வீசும். நல்ல அழகுடையது. ஆனி மாதத்தில் இதன் காய்கள் பழமாகின்றன. பழுத்த பழங்கள் கீழே விழுகின்றன. விழுந்த விதைகள் சில தேர்ந்தவிதைகள் நகர்ந்து ஏறி அடிமரத்திலும் கிளைகளிலும் ஒட்டிக் கொள்கின்றன. இவ்வாறு மரத்தில் ஒட்டிய விதைக் கூடுகளை பிரித்து எடுக்கவே முடியாது. நூற்றுக்கணக்கான விதைக் கூடுகளை எக்காலத்திலும் பார்க்க முடியும். ...
இதழைப் படித்தேன். உங்களின் உழைப்பினைக் கண்டேன். மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுகள்.
ReplyDelete