Posts

சாளக்கிரம கற்களின் தாய்- கண்டகி நதி

Image
 கண்டகி நதி புராணம் "   சாளக்கிராம கற்களின் தாய்*  தாசி குலப் பெண்ணான #கண்டகி என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. அது என்னவென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது. அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால்...

தேன்சிட்டு மலர்ந்த கதை!

Image
    தேன்சிட்டு மலர்ந்த கதை !   வருடம் 1993. அப்போது ப்ளஸ் டூ முடித்து இருந்தேன் . சிறுவனிலிருந்து இளைஞனாக மாறும் காலம் . அதுவரை சிறுவர்களுக்கான இளந்தளிர் என்ற கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை நடத்திவந்தேன் . இளைஞனாக மாறும் காலம் வந்ததால் இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது .    தோழன் ஜெயேந்திர குமாருடன் ஆலோசித்தேன் . ஆரம்பிக்கலாம் . ஆனா தொடர்ந்து நடத்த முடியுமா ? ன்னு கேட்டான் . ஏனெனில் நான் மாதமிருமுறை இதழாக நடத்த வேண்டுமென்றேன் . அது முடியுமா ? என்றான் . முடியும் என்று சொன்னேன் . அப்போது நான் பி . காம் கரஸ்பாண்டெட் கோர்ஸ் சேர்ந்திருந்தேன் . அதனால் வீட்டில் வெட்டியாக நிறைய பொழுதை செலவழித்தேன் . அதனால் கொஞ்சம் உபயோகமாக பொழுதை கழிக்க உத்தேசித்து இதழ் தயாரிக்க முடிவெடுத்தேன் .   16 பக்கங்கள் . முன்று மூன்று பக்கங்களில் இரண்டு சிறுகதை . ஒரு இரண்டு பக்கத்திற்கு கவிதை . இரண்டு பக்கத்திற்கு ஜோக்ஸ் ,   கடைசிப்பக்கம் என்று ஒரு பக்கம் சிறு கட்டுரை . ஒரு மூன்று பக்கத்திற்குத் தொடர்கதை என்று முடிவு செய்தோம் . மீதமுள்ள பக்க...

தேன்சிட்டு தீபாவளி மலர் 2025

  தேன்சிட்டு தீபாவளிமலர் 2025    இந்த லிங்கை சொடுக்கி தேன்சிட்டு தீபாவளி மலர் 2025 ஐ வாசித்து மகிழவும் 41 சிறுகதைகள், 20 கட்டுரைகள், 35 கவிதைகள், ஏராளமான ஜோக்ஸ், சிறுவர் பகுதி என 360 பக்க மின் மலர்.   வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!   வருகைக்கும் வாசிப்புக்கும் என் அன்பு நன்றிகள்!

தேன்சிட்டு தீபாவளி மலர்- 2025 பக்கம் பக்கமாக புரட்டி வாசிக்கலாம்

 

வரன் ஒரு பக்க கதை

Image
  வரன்..ஒருபக்க கதை. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. என்னங்க வயசுக் கூடிக்கிட்டே போவுது இன்னும் இப்படியே உக்காந்துகிட்டிருந்தா எப்படி சட்டு புட்டுன்னு ஒரு வரனை பேசி முடிச்சாத்தானே.. நான் என்ன சும்மா இருக்கிறேன்னு நினைச்சியா இதுவரைக்கும் தரகர்களுக்கு மட்டுமே முப்பதாயிரம் கொடுத்திருக்கேன். மேட்ரிமோனியல் தனிக் கணக்கு. ஒரு வரனாவது குதிர்ந்தாதானே.. பேசாம நம்ம ஜோஸ்யர்கிட்டே போய் ஏதாவது பரிகாரம் கேட்போமா? ஏண்டி தெரியாமத்தான் கேக்கிறியா இதுவரைக்கும் மாசத்துக்கு ஒர் பரிகாரம்னு நாட்டுல் இருக்க எல்லாக் கோயிலும் சுத்தி வந்தாச்சு அப்ப என்னதாஙக பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. படிக்கிற காலத்திலே ஒழுஙகா படிச்சு நல்ல வேலைக்குப் போயிருந்தா இந்த கஷ்டம் இருந்திருக்காது... அதெல்லாம் சும்மாங்க..ஃபாரின்ல வேலைப்பார்க்கிற பசஙகளுக்கு கூட வரன் அமைய மாட்டேங்குது.. ஒத்தபைசா வரதட்சணை வேணாம்கிறோம். போதுமான சம்பாத்தியம் சொந்த வீடெல்லாம் இருந்தும் நம்ம பையனுக்கு வரன் அமைய மாட்டேங்குதே இது கலிகாலம் தான் அங்கலாய்த்துக் கொண்டனர் அந்த தம்பதிகள்.

அந்தாதி ஹைக்கூ!

  அந்தாதி ஹைக்கூ! தூண்டி விட்டதும் சுடர் விட்டது அகல்விளக்கு! விளக்கு ஏற்றியதும் அடியில் ஒளிந்துகொண்டது இருட்டு! இருட்டுக் கடையில் வாங்கினாலும் எடையில் குறையவில்லை! இனிப்பு! இனிப்புக் கடை! கூட்டம் மொய்த்தும் மகிழவில்லை! ஈக்கள். ஈக்கள் சூழ்ந்தன இறந்து கிடந்தான் அனாதை! அனாதை இல்லம் கை கோர்த்தன புதிய உறவுகள் உறவுகள் கைவிட்டதும் பற்றிச் சென்றது காற்று சருகு! சருகுக் குவியல் கலைத்துப் பார்த்தது காற்று! காற்றுக்கு வேலி போட்டதும் உடைத்துக்கொண்டு புறப்பட்டது புயல்! புயலாய் பறக்கும் வாகனங்கள் மெதுவாக சாலையைக் கடக்கிறது சிற்றெரும்பு. சிற்றெரும்பு மிதந்த தேநீர் ஆறிப்போனது துக்கவீடு! துக்கவீட்டில் நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்த்துகிறது ஊதுபத்தியின் சாம்பல்

நிதர்சனாவின் நிழல் நிமிஷங்கள்-

  குமுதம் வார இதழ் சில வருடங்கள் முன்பு 2020 என்று நினைக்கிறேன். எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் எழுதிய ஒரு சிறுகதையின் பாதியை தந்து மீதியை முடிக்கச்சொல்லி ஒரு போட்டி நடத்தியது. அந்த போட்டிக்கு நானும் ஒரு கதை எழுதினேன். அந்த சமயம் நிறைய வேலைப்பளுவால் போட்டி முடிய மூன்று நாட்கள் இருந்த போது அவசர அவசரமாக எழுதி ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பினேன். கதை தேர்வாகும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தேர்வு பெறவில்லை. அந்த கதையை கீழே தந்திருக்கிறேன். வாசிக்கும் நண்பர்கள் இக்கதையில் உள்ள குறைகளை சுட்டினால் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். இனி ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய கதைச்சுருக்கம் மற்றும் என் கதை கீழே.. என்னோடு கதை எழுதுங்கள். ஒட்டு மொத்த குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சினிமா ஆசையில் சென்னை வருகிறாள் நிதர்சனா. பிரபல நடிகையாகி விடும் அவளை பல வருடங்கள் கழித்து பார்க்க வரும் அண்ணன் அவளை தன் வீட்டுக்கு அப்பா அம்மாவை பார்க்க அழைத்து செல்ல அவளும் ஆவலோடு செல்கிறாள். அங்கே அப்பா அம்மா இருவரும் வாடிய மாலையோடு போட்டோக்களாக இருப்பதை பார்க்கும் நிதர்சனா, அதற்கு அடுத்ததாக தன் படம் புது மாலைய...