வேலை! ஒருபக்க கதை

 வேலை!

                          . நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

களை பிடுங்க கூப்பிட்டா ஒருத்தரும் வரமாட்டேங்கறீங்களேஅப்படி எங்கதான் போறீங்கநாளை பின்னைக்கி ஒரு கஷ்டம்னா நம்ம கிட்டேதான் வந்து நீப்பீங்கபண்ணையார் தனுஷ்கோடி கத்த..

அதெல்லாம் அந்த காலங்க ஐயாஅரை நாளு சேத்துலே இறங்கி களை பிடுங்கினா கூலி அம்பது ரூபாயை தாண் மாட்டேங்குது..! சேத்து புண்ணு வேற வந்துசேருது!  வெயில் வே கொளுத்தும்ஒரு நிமிஷம் ஓய்வெடுக்க முடியாதுஇப்ப இதுக்கெல்லாம் யாரும் வரமாட்டாங்கஎல்லோரும் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு போயிட்டாங்க! ”என்றான் படியாள் விநாயகம்.

 ”அங்க அப்படி எவ்வளவுதான் கொடுக்கிறாங்க!”

 ”ஒரு நாளைக்கு 200 ரூபாவுலே இருந்து 2 50 ரூபா வரைக்கும் கிடைக்குதாம்!”

சரி நானும் 200 ரூபாவே கொடுக்கிறேன்நாளைக்கு பத்து பேரை கூட்டிட்டு வந்து களை பிடுங்கு!”

சரிங்க ஐயாகூப்பிட்டு பார்க்கறேன்என்று போனவன் மறுநாள் அவன் மட்டும் வந்து நின்றான்.”

 ”என்ன விநாயகம்ஆளுங்க எங்கே?

அவங்க யாரும் வர மாட்டேங்கிறாங்க ஐயா!”

என்னவாம்! ”

அங்கே இரு நூறு ரூபா கூலி வாங்கிட்டு நிழல்லே உக்காந்துட்டு ந்துருவாங்களாம்அரைமணிநேரம்தான் வேலை செய்வாங்களாம்இங்கே நாலுமணி நேரம் சேத்துலே கால் வைக்கணுமாம்எங்களாலே முடியாதுஇதுவே பழகிப் போயிருச்சுஅங்க வந்து கஷ்டப்பட முடியாதுங்கிறாங்கய்யா!”

தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார் பண்ணையார் தனுஷ்கோடி!

Comments

  1. இதுவும் நடக்கிறது தான். என்ன சொல்ல!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2