தினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை!

என்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- |
என்றும் என் இதயத்தில் அன்பை பொழிகிறது
அன்னையின் அன்பு மொழி!
என்றும் என் இதயத்தில் இடம்பிடிக்கிறது
தந்தையின் நட்பு மொழி!
என்றும் என் இதயத்தில் இதமளிக்கிறது
என்னவளின் சைகை மொழி!
என்றும் என் இதயத்தில் முள்ளாய் குத்துகிறது
துரோகத்தின் மவுன வலி!
என்றும் என் இதயத்தில் புதைந்து கிடக்கிறது
அடங்கிப்போன ஆசைகளின் மவுனமொழி!
என்றும் என் இதயத்தில் ரணமாய் ஆறாதிருக்கிறது
நாவினால் பிறிதொருவன் சுட்ட வலி!
என்றும் என் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறது
குழந்தைகளின் குறும்பு மொழி!
என்றும் என் இதயத்தில் ஒளிந்திருக்கிறது
தேசத்தின் பக்தி வழி!
என்றும் என் இதயத்தில் வழிந்தோடுகிறது
இரக்கமென்னும் ஈர ஆறு!
என்றும் என் இதயத்தில் நினைவாக பூத்திருக்கிறது
பால்யத்தின் பருவ மொழி!
என்றும் என் இதயத்தில் லயித்திருக்கிறது
என் தாய் தமிழ் மொழி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

Comments

  1. கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!