தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் உண்டு. வாரா வாரம் திங்கள் கிழமைகளில் ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்கிறார்கள். இந்த திங்கள் கொடுக்கும் தலைப்புக்கான கவிதைகள் அடுத்த திங்களில் வெளிவரும். சனிக்கிழமைக்குள் படைப்புக்களை அனுப்பி விட வேண்டும். தமிழகத்தின் பிரபல கவிஞர்களும் இதில் எழுதி வருகிறார்கள். புதியவர்களும் எழுதுகின்றார்கள்.
  நானும் எழுதி வருகிறேன். சென்றவாரமும் இந்த வாரமும் இதில் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு.

குழந்தையின் குரல்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.

By கவிதைமணி  |   Published on : 21st May 2017 10:56 AM  |   அ+அ அ-   |  
குயிலோசையின் இனிமையை கசக்கச் செய்திடும்
குழலோசையின் இசையை மறக்கச் செய்திடும்
தேனின்  தித்திப்பை  மறக்கடிக்கும்!
தீம்பழத்தின் சுவைதனை கசக்கச் செய்திடும்!

தெவிட்டாத தமிழ் மொழியை பின் தள்ளிடும்!
குடும்பத்தில் குதூகலத்தை குறைவில்லாது அளித்திடும்!
பொங்கி வரும் கோபத்தை பொசுக்கிவிடும்!
தங்கி நிற்கும் அழுக்காறை அகற்றிவிடும்!

கொஞ்சி கொஞ்சி பேசிடும் குழந்தையின்
பிஞ்சு குரல் அழுத்தத்தை அகற்றிவிடும்!
தெள்ளூ தமிழ் பேச்சாளரின்
துள்ளு தமிழ் பேச்சினையும்
பிள்ளைத் தமிழ் முறியடிக்கும்!

தவழ்ந்து வரும் தென்றலாய் வருடி
கமழ்ந்து வரும் கற்பூரமாய் மணமூட்டி
சுமக்கும் சுமையெல்லாம் விரட்டி
சூழ்நிலையை கலகலப்பாக்கும்  குழந்தையின் குரல்!

தத்தி தத்தி தவழ்ந்து
திக்கி திக்கிப் பிறழ்ந்து
கொச்சைத் தமிழ் பேசினாலும்
இச்சை ஊட்டும் அல்லவோ குழந்தையின் குரல்!

இவ்வுலகம் இருக்கும் வரை இதைத் தாண்டி
இனிமையில்லை!
 அமுதமான குரல்! ஆசை வைக்கும் குரல்!
இறைவனே சிலிர்க்கும் குரல்
ஈரம் சொட்டும் குரல்!

உவகை அளிக்கும் குரல்
ஊரே மகிழும் குரல்! எல்லோரும் ரசிக்கும் குரல்
ஏங்க வைக்கும் ஒரே குரல்
வையமே மயங்கும் குரல்
ஒருபோதும் மாறாக்குரல் ஒங்கு புகழ் குரல்
ஒளஷதமான குரல்
குழந்தையின் குரல்தானே!
     

    கல்வீச்சு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

    By கவிதைமணி  |   Published on : 29th May 2017 03:42 PM  |   அ+அ அ-   |  
    வன்முறையின் பிறப்பு!
    வழி தவறியனின் ஆயுதம்!
    வீசி எறியும் கல் தன்னையும் தாக்கும் என்று
    யோசித்தறியாதவர்கள் செய்யும் செயல்!
    கல்வீச்சால் இவர்கள் காயப்படுத்துவது 
    எதிரிகளை அல்ல!
    ஒரு பாவமும் அறியா பொதுமக்களை!
    கல்வீச்சில் உடைத்தெறியப்படுவது
    வெறும் கண்ணாடிகள் அல்ல!
    இந்தியாவின் இறையாண்மை!
    பொதுக்கூட்டங்களில் வீசப்படும் கல்வீச்சு!
    சொல்வீச்சை ஏற்க பயப்படும் கோழையின் ஆயுதம்!
    ஒரே ஒரு கல்வீச்சு
    தகப்பனை எதிர்ப்பார்த்திருக்கும் குழந்தையை!
    கணவனை வரவேற்க காத்திருக்கும் மனைவியை!
    குடும்பத்தூணாய் இருக்கும் மகனை நம்பியிருக்கும் தாயை
    எதிர்கால கனவுகளோடு பயணிக்கும் இளைஞனை
    மனைவியோடு திருமணநாள் கொண்டாட இருக்கும் கணவனை
    தாத்தாவின் வருகையை ஆவலோடு 
    எதிர்பார்த்திருந்த பேரப்பிள்ளைகளை!
    இன்னும் எத்தனை எத்தனை அத்தனையையும்
    தகர்த்து எறிந்துவிடுகிறது!
    வீசியவனுக்கு வேண்டுமானால் வெற்று மகிழ்ச்சியைத்
    தந்திருக்கலாம் ஒற்றைக் கல்!
    வீச்சை வாங்கியவன் வலி வெறும் உடல் வலி அல்ல!
    உள்ளம் சார்ந்த மனம் சார்ந்த குடும்பம் சார்ந்த
    கொடும் வலி! கல்வீச்சால் ஏற்பட்ட உடல் ரணம் ஆறும்!
    உள்ளத்தின் ரணம் மேலும் புண்ணாகும்!
    கல்வீச்சு உடைப்பது வெறும் உடமைகளை அல்ல!
    ஒட்டி வரும் உறவுகளை!
    யாரோ ஒருவருக்காக
    யாரோ வீசிய கல்லில் யாரோ அடிபட
    யாரோ பாதிப்பது எவருக்காக?
    கல்வீச்சில் உடைபட்ட பேருந்து கண்ணாடிகளை
    பார்க்கையில் யாரோ ஒரு முகம் தெரியாதவரின்
    அழுகுரல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

    தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

      Comments

      1. அற்புதமான கவிதை
        படித்து மிகவும் இரசித்தேன்
        பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

        ReplyDelete

      2. சிறந்த கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன.

        ReplyDelete
      3. வாழ்த்துகள்....கவிதைகள் அருமை..ரசித்தோம்....

        ReplyDelete
      4. அருமை, அருமை. தங்களது எழுத்தின்வீச்சானது எங்கும் வியாபிக்கத் தொடங்கிவிட்டது. வாழ்த்துகள்.

        ReplyDelete
      5. சிந்திக்க வைக்கும் கவிதைகள்

        ReplyDelete

      Post a Comment

      Popular posts from this blog

      தேவதை குழந்தைகள்!

      வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

      அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!