Posts

கர்மா! (குஷ்வந்த் சிங் சிறுகதை)

    கர்மா !    குஷ்வந்த் சிங்          தமிழில் :   நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு     சர் மோகன்லால் முதல்வகுப்பு வெயிட்டிங் ரூமிலிருந்து ஜன்னல்வழியாக ரயில்வே ஸ்டேஷனைப் பார்த்தார் . அந்தக் கண்ணாடி அப்படியே இந்தியாவை காட்சிப்படுத்தியது . சிவப்புச்சூரியன் மெதுவாக மறைந்துகொண்டிருந்தான் . அந்தஒளி தரைகளில் பட்டு மஞ்சளாக சிதறிக்கொண்டிருந்தது . சூரியனின் அந்த சிறு வெளிச்சம் கண்ணாடிவழியாக உள்புகுந்தது . மோகன் சிரித்துக்கொண்டார் இந்தியாவின் ஏழ்மையைப் பார்த்து . கண்ணாடியும் மோகனைப்பார்த்து சிரித்ததுபோலிருந்தது .   அவரே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டார் . “ நீ எல்லாம் சரியாகத்தான் இருக்கிறாய் கிழவா !” என்றுமுணுமுணுத்த உதடுகளோடு அவர் தம்மை ஒருமுறைப்பார்த்துக்கொண்டார் . அவர் இன்னமும் மிடுக்காகத்தான் இருந்தார் . நன்கு டிரிம் செய்யப்பட்ட மீசை . “ சாவில்லிரோ ” சூட் அணிந்து பட்டனில் “ கார்னேஷன் ” பூ அணிந்திருந்தார் . அவர்மீது ஒரு வித நறுமணம் வீசியது . அது “ கலோன் ” பர்ஃப்யூம் மற்றும் டால்கம் பவுடர் அவர் பயன்படுத்திய வாசனைசோப் எல்லாம்