சிகரெட்டுக்குத் தடையும்! முதல் எச்சரிக்கையும்! கதம்ப சோறு பகுதி 52

கதம்ப சோறு பகுதி 52

நல்லா போட்றாங்கய்யா சட்டம்!

       நம்ம ஆட்சியாளர்கள் போடும் சட்டங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை! பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவல் என்பது போல உள்ளது இவர்கள் போடும் சட்டங்கள். சிகரெட்டை பாக்கெட்டாய் தான் விற்க வேண்டும் என்று புதிய சட்டம் போடப்போகிறார்கள். புகையிலைப் பொருட்களை தடை செய்ய வேண்டும் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இந்த சட்டமாம். இதனால் பலனடையப்போவது உண்மையில் வியாபாரிகளும் சிகரெட் கம்பெனிகளுமே! ஏதோ ஐந்து பத்து கொடுத்து ஒன்று இரண்டு சிகரெட் பிடித்தவன் வாய் சும்மா இருக்குமா? அப்பா பாக்கெட்டில் கைவிட்டு ஐம்பது நூறு எடுத்து ஒரு பாக்கெட்டாக வாங்கிவிடுவான். ஒன்று ஊதியவன் அட பாக்கெட்டே இருக்கிறதே என்று ஒருநாளைக்கு ஒரு பாக்கெட் ஊதுவான். அதற்குத்தான் வழிவகுக்கும் இந்த சட்டம். பான்பராக் உள்ளிட்ட பான் பொருட்களை தடை செய்தார்கள். ஆனால் இன்று கடைகளில் பப்ளிக்காக கிடைக்கிறது. முறையான கடுமையான நடவடிக்கை கிடையாது. எல்லாம் லஞ்சம் ஊழல் நிறைந்த இந்த நாட்டில் ஒவ்வொரு சிகரெட்டாய் கூட விற்பார்கள் ஐந்து ரூபாய் சிகரெட்டை பத்து ரூபாய் என்று விற்பார்கள். அடிமைகள் அதையும் வாங்கிக் குடிப்பார்கள். இதனால் எல்லாம் சமூகம் திருந்திவிடாது. உண்மையிலேயே இந்த புகைப்பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்றால் சிகரெட் கம்பெனிகளையே இந்தியாவில் தடை செய்ய வேண்டும். உற்பத்தியை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் இது நடக்கும். அதுவரை இது மாதிரி சட்டங்கள் எல்லாம் கண் துடைப்புக்களே!


பாவம் மீனவர்கள்!

   இலங்கை சிறையில் இருந்து மரண தண்டணையில் இருந்து தப்பிய மீனவர்கள் டெல்லிக்கு அழைத்து சென்று பின்னர் தமிழகத்திற்கு அனுப்பி உள்ளார்கள். மீனவர்கள் உயிரிலும் அரசியல் விளையாட்டு! நான் தான் இதைச்செய்தேன்! என்னால்தான் இவர்கள் மீண்டார்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள். இந்த ஐவரை விடுவித்த ராஜபக்சே இப்போது நல்லவர் ஆகிவிட்டார். லட்சக்கணக்கில் அப்பாவிகளை அவர் கொன்றதை இப்போதைய ஆட்சியாளர்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம்! வரலாறு மறக்காது! மன்னிக்கவும் செய்யாது!

சகாயம்!

   கிரானைட் மோசடி குறித்து விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ் ஐ கோர்ட் நியமித்தும் தமிழக அரசு ஒத்துழைப்பு ஏதும் தரவில்லை! மேல்முறையீடு அது இது என்று அலைகழித்தது. இப்போது கோர்ட்டே மதுரையில் நடந்த முறைகேடுகளை மட்டும் விசாரித்தால் போதுமானது என்று சொல்லிவிட்டது. மதுரையில் சில தலைகள் இதில் உருளும். ஆனால் தமிழகம் முழுவதும் சுரண்டிய ஒரு கனிம முதலை தப்பிவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சகாயத்திற்கு இந்த விஷயத்தில் சகாயம் செய்ய வேண்டிய அரசே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையான ஒன்று.

ப்லிப் ஹ்யூஸ்!

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ப்லிப் ஹ்யூஸ் மண்டையில் பந்து தாக்கி கோமா நிலைக்குச் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் இருக்கிறார். விளையாட்டு வினையாகிவிடக்கூடாது என்பார்கள். இவர் விஷயத்தில் இது உண்மையாகி விட்டது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட பவுன்சர் பந்து இவரது தலையை பதம் பார்த்து உயிரை காவு கேட்கிறது. கிரிக்கெட் அனைவராலும் ரசிக்கப்பட்டாலும் சில சமயங்களில் ஆபத்தான விளையாட்டாக மாறி விடுகிறது. உயிரைக் கொடுத்து விளையாடினான் என்ற சொல் சில சமயங்களில் உண்மையாகவும் ஆகிவிடுவது வேதனையான ஒன்று. நமது இந்திய வீரர் ராமன் லம்பாவும் இப்படி பந்தில் அடிபட்டு மரணத்தை தழுவினார். சபா கரீம் என்ற விக்கெட் கீப்பர் பார்வை இழந்தார். இந்த விளையாட்டை இன்னும் நவீனப் படுத்தி ஆபத்தின்றி விளையாடுவது அவசியம் என்பதை தொடரும் விபத்துக்கள் தெரிவிக்கின்றன.

காகிதப் படகில் சாகசப் பயணம்!


      முகநூலில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பத்திரிக்கையாளர் பெ. கருணாகரன் அதை நூலாக வெளியிட்டு உள்ளார். இளம் தலைமுறை பத்திரிக்கையாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூல் இது. விகடன் மாணவப் பத்திரிக்கையாளராக துவங்கி இன்று புதிய தலைமுறையில் பணியாற்றுவது வரை தனது அனுபவங்களை சுவையாக  சொன்னதோடு ஒவ்வொரு அனுபவத்திலும் ஒரு பாடத்தை புகட்டி இருப்பது நன்று. படிக்க ஆரம்பித்து விட்டால் வைக்க முடியாது. அவ்வளவு சுவாரஸ்யம். பத்திரிக்கையுலக ஜாம்பாவான்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களின் குணாதிசயங்களையும் அதனால் அவர்கள் பத்திரிக்கையை எந்த அளவு நேசித்து வளர்த்து இன்று முன்னேறியுள்ளார்கள் என்பதையும் கூறும் அதே நேரத்தில் ஒரு பத்திரிக்கையாளர் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் பெ. கருணாகரன். ஒவ்வொரு புத்தக ஆர்வலரும் படிக்க தவறவிடக்கூடாத ஓர் நூல் இது.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


பெருங்காயத்தை சிறிது நீர் விட்டு அறைத்து தேமல் படைகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

சுவாமி படங்களுக்கு பூ வைக்கும் போது கீழே விழுந்துவிடும். சிறிய ஒட்டும் ஹூக்குக்கள் இப்போது கிடைக்கின்றன. அவற்றை வாங்கி படத்தின் இரு முனையிலும் ஒட்டி வைத்தால் பூ வைக்க மாலை சாற்ற இலகுவாக இருக்கும்.

தோசைக்கு ஊற வைக்கும் போது கைப்பிடி உளுந்தை ஒரு நிமிடம் லேசாக வறுத்து சேர்த்து ஊறவைத்து அரைத்து தோசை வார்த்து பாருங்கள் கமகம வாசனையுடன் தோசை ஈர்க்கும்.

 கால் நகங்களில் அழுக்கு மண் புகுந்து அவதிப்படுபவர்களுக்கு வாய் துர்நாற்றத்தை தடுக்கும் லிஸ்டரினில் கால் நகத்தை ஊற வைத்தால் கால் நகம் சுத்தம் ஆகிவிடும். ( ஆனால் இதை வாய் துர்நாற்றம் தவிர்க்க பயன் படுத்த யோசிக்க வேண்டியதாகிறதே)

தினமும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

சில சமயம் கைக்குழந்தைகள் வயிற்று வலி காரணமாக அழும். கறுப்பு வெற்றிலையினை லேசாக சூடுபடுத்தி அதன் மேல் விளக்கெண்ணை தடவி குழந்தையின் தொப்புள் மீது போடவும். வலி குறைந்து குழந்தை சிரிக்க ஆரம்பிக்கும்.

கிச்சன் கார்னர்!
பரங்கிக் காய் பால் கூட்டு!


தேவையான பொருட்கள்: இளம் பரங்கிக் காய் துண்டங்கள் 2 கப். வெல்லத் தூள் 1 கப், தேங்காய்த்துருவல் ¼ கப், கெட்டிப்பால் 1 கப், தாளிக்க :  உளுந்து, கடுகு சிறிது. நெய் 1 டீஸ்பூன்.

செய்முறை: பாலில் பரங்கித் துண்டுகளை சேர்த்து நன்றாக வேக விடவும்.அத்துடன் தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும். நெய்யில் உளுத்தம்பருப்பு கடுகு தாளித்து கொட்டவும். பரங்கிக் காய் பால் கூட்டு கமகமவென்று ரெடி!
    (மாலதி நாராயணன், மங்கையர் மலர் ஜனவரி 2013 இதழில் பகிர்ந்த குறிப்பு இது)


படிச்சதில் பிடிச்சது!
முதல் எச்சரிக்கை!


 திருமண வெள்ளிவிழா கொண்டாடிய தம்பதிகளிடம் திருமண வாழ்வின் வெற்றியின் ரகசியம் பற்றி கேட்கப்பட்டது.
  ஒரு கணவன் சொன்னான்….
“தேனிலவுக்கு சென்ற இடத்தில் நாங்கள் குதிரையில் பயணம் செய்தோம். நான் சென்ற குதிரை அமைதியாக சென்றது. ஆனால் எனது மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமாக ஒரு துள்ளலில் அவளை கீழே தள்ளிவிட்டது. கீழே இருந்து சுதாரித்து மீண்டும் அந்த குதிரை மீது அமர்ந்து என்  மனைவி குதிரையிடம், ‘இது உனக்கு முதல் எச்சரிக்கை’ என்றாள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவளை தள்ளிவிட்டது. மீண்டும் சுதாரித்து குதிரையில் ஏறிய அவள்  குதிரையிடம் ‘இரண்டாம் எச்சரிக்கை’ என்றாள். மூன்றாம் முறையாக அவளை குதிரை கீழே தள்ளிவிட்டது. அவள் உடனே குதிரையை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாள்.
    அதிர்ச்சி அடைந்த நான் மனைவியை, “ஏன் இப்படிச் செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கை கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?” எனத் திட்டினேன்.
   அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, ‘இதுதான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை என்றாள்
 அவ்வளவுதான் அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.

(தமிழ் இந்து நாளிதழ் சுட்டது நெட்டளவு பகுதியில் எஸ்.எஸ். பூங்கதிர் அவர்கள் பகிர்ந்த துணுக்கு இது.)

பின் குறிப்பு} கதம்ப சோறு ஹெவியாக இருக்கிறது என்று பலரும் சொன்னமையால் இவர்களை தெரிந்து கொள்ளுங்கள் பகுதியை இந்தவாரம் நிறுத்திவிட்டேன். அடுத்த வாரம் முதல் சமையல் குறிப்புகளை தனிப்பதிவாக வெளியிடலாம் என்று ஆலோசனையில் உள்ளேன்! உங்கள் ஆலோசனைகளை கூறவும். நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. முதல்முறை வருகிறேன் ... கதம்பச்சோறு மிக அருமை
    புகைபிடித்தல் என்ன தடை விதித்தாலும் கையூட்டுக்கு பூட்டு போடும் வரை எதுவும் நிரந்தரம் அல்ல...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! முதல் வருகை தொடரட்டும்!

      Delete
  2. ஹ்யூஸ் :

    நம்ம ஊரில் முன்னர் ராமன் லாம்பா என்ற ஒரு டெல்லி பிளேயர் ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் செய்யும்போது இதேபோல மண்டையில் அடிபட்டு தன் இன்னுயிரையே தந்தார்.

    காகிதப்படகில் சாகசப் பயணம் படிக்க ஆவலாக உள்ளது. பேஸ்புக்கில் நானும் பார்த்தேன். என்ன விலை?

    ReplyDelete
    Replies
    1. ராமன் லம்பா பற்றியும் சொல்லியுள்ளேன் சார்! காகிதப்படகின் விலை 150 ரூபாய் 200 பக்கங்கள்! குன்றம் பதிப்பகம் வெளியீடு! இத்துடன் அவர் எழுதிய குழந்தைகள் நூல் அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படி தோன்றின சேர்த்து வாங்கினால் ரூபாய் 200 மட்டும் செலுத்தினால் போதும் கொரியர் கட்டணம் இல்லை!

      Delete
  3. நண்பரே சிகரெட் பற்றிய தங்களது கருத்து அருமை.

    ReplyDelete
  4. கதம்ப சோறு அருமை !
    சிகரெட் ..:( உண்மைதான் இனி ஒன்று வாங்குபவர்கள் பாக்கெட்டா வான்கி உடல்நலத்தை இன்னும் அதிதீவிரமாக கெடுதுக்கபோறாங்க ..
    பாவம் ஹியூஸ் ..பிரார்த்திப்போம் நலம் பெறனுனு .
    சமையல் குறிப்புகளுக்கு தனி பதிவா ! வரவேற்கிறேன்

    ReplyDelete
  5. எச்சரிக்கை ... விழுந்து விழுந்து சிரித்தேன் சுவாமிகள்.
    ஹுயுஸ் குணமாக ஒரு பூஜை செய்யுங்க.. (சீரியஸ்ஸாகவே சொல்கிறேன்)
    நன்றி
    தொடர்கிறேன்

    ReplyDelete
  6. நல்லது செய்வதாக சொல்லி அரசாங்கம் யாருக்கு நல்லது செய்கிறது என்று நீங்கள் சொல்வது நூறுக்கு நூறு உண்மை !
    கதம்பச் சோறில் சில அயிட்டங்களைக் குறைத்தாலும் சுவை குறையாது என்றுதான் படுகிறது !
    அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது !

    ReplyDelete
  7. 4 செய்திகளிலும் தங்களின் ஆதங்கம் தெரிகிறது.
    அப்புறம் படிச்சதில் பிடித்தது - சூப்பர்.

    சமையல் குறிப்புகளையும், டிப்ஸ் பகுதியையும் தனித்தனியாக எழுதுங்கள் சுரேஷ்.

    ReplyDelete
  8. கதம்ப சோறு அருமை...

    சமையல் பகுதி மட்டுமல்ல... படித்ததில் பிடித்ததும் தனி பதிவாக எழுதவும்...

    ReplyDelete
  9. சட்டம்? நம்ம ஊரில்? ஹஹஹ காமெடிதான் சுரேஷ்! உங்களுக்குத் தெரிந்ததுதான்...நம்ம ஊர்ல பப்ளிக்ல புகை பிடிக்கக் கூடாது என்று சட்டம் போட்டார்கள்...நடந்ததா? சட்டம் ஒருபுறம் விற்பனை மறுபுறம்....நீங்கள் சொல்வது போல்தான்...

    ம்ம்ம் உங்கள் ஆதங்கம் புரிகின்றது....

    பால் கூட்டு செய்வதுண்டு....இதே போல்தான் என்ன என்றால் வெல்லம் கொஞ்சம் குறைவாகப் போட்டு...பச்சைமிளகாய் போட்டு...

    டிப்ஸ் அருமை...

    சுரேஷ், சமையல் குறிப்புகளையும், டிப்ஸ் களையும் தனியே கொடுங்கள். ஒரு பதிவாக...நண்பர் சொக்கன் சொல்லியிருப்பது போல்....

    படித்ததில் பிடித்தது பிடித்தது. அதையும் நீங்கள் தனிப் பதிவாக இடலாம் என்று சொல்லிவரும் போது டிடி யும் அதைத்தான் சொல்லியிருப்பது தெரிய வந்தது...அதே...

    ReplyDelete
  10. மனைவி தந்த முதல் எச்சரிக்கை நகைச்சுவை சூப்பர்

    ReplyDelete
  11. ஒரு பாக்கெட் சிகரட்டை மொத்தமா குடித்து சாவத்தான் இந்த சட்டம் உதவும்

    ReplyDelete
  12. கதம்ப சோறு ருசியாக இருந்துச்சி..

    ReplyDelete
  13. சுரேஷ்! பரிவை சே.குமார் அவர்களின் தளம் சென்று பாருக்னள். பல போட்டிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தாங்கள் கலந்து கொள்ளலாமே என்பதற்காகத்தான்....

    http://vayalaan.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!