தினமணி கவிதைமணி! யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 15th January 2018 03:36 PM  |   அ+அ அ-   |  
கண்களும் ஒரு கணைதான்!
வில்லாயுதம் வளைக்காத வீரனையும்
கண்ணாயுதம் வளைத்துவிடும்!
காதல் யுத்தத்தில்
கண்களால் வீசப்படும் கணைகள்
இதயத்தை கொள்ளை கொள்ளும்!

மவுன யுத்தத்தில்
கண்கள் பேசும் வார்த்தைகள்தான்
வெற்றியை நிறைவு செய்யும்!
ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியா சேதியை
அரைநொடியில் கண்ணசைவில் உணர்த்தும்!
கண்களின் மொழி அன்பாயிருந்தால்
பாசம் வெற்றிகொள்ளும்!
கண்களின் மொழி வேசமாயிருந்தால்
மோசம் வெற்றிக்கொள்ளும்!
கண்களின் மொழி வீரமாயிருந்தால்
”வெற்றி” வெற்றிக்கொள்ளும்!
கண்களின் மொழி துயரமாயிருந்தால்
சோகம் வெற்றிக்கொள்ளும்!
கண்களின் மொழி குறும்பாயிருந்தால்
அங்கு கலகலப்பு” தொற்றிக்கொள்ளும்!
கண்களின் மொழி கசப்பாயிருந்தால்
அங்கே  ”வெறுப்பு” வெற்றிக்கொள்ளும்!
கண் வீசும் கணைகள்
சாம்ராஜ்யத்தையும் சாய்க்கும்!

யுத்தம் செய்யும் கண்கள்
பித்தம் பிடிக்க வைக்கும்!
நித்தம் நினைவில் நிலைக்கும்!

தினமணி கவிதை மணியில்  ஜனவரி 15ம் தேதி வெளியான என் கவிதை.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!