தினமணி கவிதை மணியில் என் கவிதைகள்!

தினமணி கவிதை மணி இணைய பக்கத்தில் சென்ற திங்களன்றும் இன்றும்  வெளியான எனது கவிதைகளை தங்களின் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன்!
  தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமத்திற்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்!


ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 31st July 2017 04:24 PM  |   அ+அ அ-   |  
ஒரு புள்ளியில் தொடங்கிய வரிவடிவம்
”அ”கரம் என்ற எழுத்தானது!
ஒரு புள்ளியில் தொடங்கும் ஓவியனின் தூரிகை
அழகிய சித்திரம் தந்தது!
ஒரு புள்ளியில்  தொடங்கி சந்திக்கும் கோடுகள்
இணைகையில் வட்டம் வந்தது.
எத்தனை பெரிய சரித்திரங்களும் தொடங்கியது
ஒரு புள்ளியில் தான்!
ஒற்றாய் ஒற்றி வரும் புள்ளிகளால்
நற்றாய் தமிழ் சிறக்கிறாள்!
அஹிம்சை வழியில் சாதித்த காந்திக்கும்
தென்னாப்பிரிக்க சம்பவம் ஒரு புள்ளியாய்
தொடங்கிய பயணம் தான்!
மதிய உணவு தந்த கருப்பு காந்திக்கும்
ஏழைச்சிறுவன் பதில் ஒரு புள்ளியாய் தொடங்கியது!
அடிமைத்தளைகளை அகற்ற தேசத்தலைவர்களுக்கு
ஆகஸ்ட் புரட்சி ஓர் புள்ளியாய் தொடங்கியது!
அக்னி ஏவுகணை கண்ட கலாமின் கனவும்
ராமேஸ்வரத்தில் ஓர் ஆசிரியரால் புள்ளியாய் தொடங்கியது!
எல்லோர் வாழ்வும் புள்ளியில்தான் தொடங்கும்
அதை பூஜ்யமாக அல்லது ராஜ்யமாக மாற்ற
அவர் தம் திறமை முயல்கிறது!
பிறப்பு என்னும் புள்ளியில் தொடங்கும் பயணம்
இறப்பு என்னும் புள்ளியில் முடிகிறது!
இனிப்பும் கசப்பும் இடை வழியே அதை
இதமாய் கைக்கொண்டால்
ரசிக்கும் புள்ளியாய் நிலைக்கும் நம் பயணம்!

கடல் பயணம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 07th August 2017 04:28 PM  |   அ+அ அ-   |  
அலை வீசும்  ஆழ்கடலில் அழகாய்
எதிர் நீச்சல் போட்டு எத்தனையோ  
உயிரினங்கள் பலகாலம்  பயணிக்கும்!

உலகம் உருண்டை என உண்மை
சொல்லும் கடல் பயணம்
எல்லொருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை!
தோணியிலே பயணிப்போர் சிலர்!
கப்பலிலே மிதப்பர் சிலர்!
கட்டுமரத்தில் எதிர் நீச்சலிடுவோர் சிலர்!

கை கால் அசைத்து கடலலைகளை
அரவணைத்து மிதப்பர் சிலர்!
எல்லோருக்கும் அது இன்பமில்லை!
கடலோரம் வசிக்கும் பரதவர்க்கு
கடல் பயணம் ஒரு தொழில்!
கடல் போல வீடு கொண்டோருக்கு
கடல் பயணம் ஓர் உல்லாசம்!
அலுவல் பணி நிமித்தம் செல்லும்
அலுவலர்களுக்கு அது ஓர் அலுப்பு!
உலகம் முழுதும் சுற்றும் கப்பல் தலைவனுக்கும்
ஊழியனுக்கும் அது தாய் வீடு!
தூர இருந்து பார்க்கையில் அழகாய் இருக்கும் கடல்
கிட்டே நெருங்குகையில் ஆபத்தாய் மாறிவிடும்!
வலை வீசூம் மீனவனின் பயணத்தில்
உயிரே கூட விலையாய் போவதுண்டு!
உலை வைக்க வலை வீசீ
எல்லைகளை கடக்கையில்
குலை நடுங்கும் கடல் பயணமாகும்!
அலைகடலில் பயணம்!- அது
அடுத்த நொடி அறியா நம் வாழ்க்கைப்பயணம்!
இன்பங்கள் துன்பமாகலாம்!
துன்பங்கள் இன்பமாகலாம்!
துணிச்சலோடு எதிர் நீச்சலிட்டால்
தூரங்கள் நெருங்கி வரலாம்!
அலைகடலில் பயணம் – அது
அடுத்த நொடியறியா நம் வாழ்க்கை பயணம்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள் அச்சில்....

    ReplyDelete
  2. வாழ்த்துகள்! சுரேஷ்! ஊடகத்தில் தொடர்ந்து உங்கள் எழுத்துகள் வந்திடவும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!