Posts

Showing posts from May, 2017

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்! தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் உண்டு. வாரா வாரம் திங்கள் கிழமைகளில் ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்கிறார்கள். இந்த திங்கள் கொடுக்கும் தலைப்புக்கான கவிதைகள் அடுத்த திங்களில் வெளிவரும். சனிக்கிழமைக்குள் படைப்புக்களை அனுப்பி விட வேண்டும். தமிழகத்தின் பிரபல கவிஞர்களும் இதில் எழுதி வருகிறார்கள். புதியவர்களும் எழுதுகின்றார்கள்.   நானும் எழுதி வருகிறேன். சென்றவாரமும் இந்த வாரமும் இதில் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு. குழந்தையின் குரல்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு. By  கவிதைமணி   |   Published on :  21st May 2017 10:56 AM   |    அ+ அ  அ-     |   குயிலோசையின் இனிமையை கசக்கச் செய்திடும் குழலோசையின் இசையை மறக்கச் செய்திடும் தேனின் தித்திப்பை மறக்கடிக்கும்! தீம்பழத்தின் சுவைதனை கசக்கச் செய்திடும்! தெவிட்டாத தமிழ் மொழியை பின் தள்ளிடும்! குடும்பத்தில் குதூகலத்தை குறைவில்லாது அளித்திடும்! பொங்கி வரும் கோபத்தை பொசுக்கிவிடும்! தங்கி நிற்கும் அழுக்காறை அகற்றிவிடும்! கொஞ்சி கொஞ்சி பேசிடும் குழந்தையின் பிஞ்சு குரல் அழுத்தத்தை

இந்த வார பாக்யா (ஜூன் 2-8) வில் என் ஜோக்ஸ்கள்!

Image
இந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ்கள்! பாக்யா இதழில் தொடர்ந்து எனது படைப்புக்கள் வெளிவந்தது நண்பர்கள் அறிந்ததே! இருப்பினும் மார்ச் மாதம் முதல் ஒரு சிறு தொய்வு ஏற்பட்டு நான் படைப்பு அனுப்ப வில்லை.    இரண்டு மாதங்களாக எனது படைப்பு வராமல் இருந்தது. சென்ற வாரத்தில் சில ஜோக்ஸ்களை அனுப்பி வைத்தேன். அது இந்த வார பாக்யாவில் பிரசுரம் ஆகி மகிழ்ச்சியை தந்தது. தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு வரும் பாக்யா இதழ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி!    கீழே உங்களின் பார்வைக்கு ஜோக்ஸ்கள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்!

Image
நேற்றைய இந்துவில் எனது பஞ்ச்! இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்ற பகுதி வெளியாகிறது. அதில் செய்திகளுக்கு சிறந்த பஞ்ச் நாம் எழுதினால் பிரசுரமாகும். பலமுறை முயன்றும் அதில் இடம்பிடிக்க முடியாமல் இருந்தேன். அதனால் முயற்சியை  கைவிட்டு இருந்தேன். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவும். நண்பர் திருமாளம் எஸ். பழனிவேல் அவர்களும் ஊக்கப் படுத்தியமையால் மீண்டும் சில நாட்களாக முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.  19ம் தேதி எக்ஸ்ட்ரா பஞ்சிலும் 20 ம் தேதி முகப்பு பஞ்சிலும் எனது பஞ்ச் இடம்பெற்றது. நேற்றைய பஞ்ச் பலராலும் பாராட்டப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. கீழே உங்களின் பார்வைக்கு அந்த பஞ்ச்கள் தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்! தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் ஒதுக்கி கவிதைகள் வெளியிட்டு வருகின்றார்கள். வாரா வாரம் திங்களன்று கவிதைகள் வெளியாகும். ஒரு தலைப்பினை அவர்கள் தருவார்கள். அதற்கு நாம் கவிதை எழுத வேண்டும். வளர்ந்த வளரும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலர் இந்த பக்கத்தில் பயனடைந்து வருகின்றார்கள்.   கவிதை ஆர்வலர்களுக்கு இந்த பக்கம் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த பக்கம் குறித்து நண்பர் உலகநாதன் ஐயா தெரிவித்தார். முதலில் ஆர்வமின்றி இருந்த நான். பின்னர் இப்பக்கத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். போன மாதம் ஒரு கவிதையை அந்த பக்கத்தில் வந்தது என்று வெளியிட்டிருந்தேன் நினைவிருக்கலாம். தொடர்ந்து எனது கவிதைகள் அந்த பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. போனவாரம் அதற்கு முந்தைய வாரம் வந்த கவிதைகள் உங்களின் பார்வைக்கு. சுமைகளும் சுகங்களும்: நத்தம். எஸ். சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  15th May 2017 04:19 PM   |    அ+ அ  அ-     |   கருவொன்றை சுமப்பது தாய்க்கு சுமையல்ல சுகம்! கருவான பிள்ளை தடம் மாறிப்போனால் தாய்க்கு சுகமல்ல சுமை! பலர் பசி தீர