கார்டூன் ஆன்லைன் இதழில் பரிசு பெற்ற என் ஜோக்!

தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் இணைந்ததும் கார்டூன் ஆன்லைன் இதழ் பற்றி அறிந்தேன். அதில் தொடர் ஜோக் போட்டி நடந்து கொண்டிருந்தது. செப்டம்பர் மாத போட்டியில் கலந்து கொண்டேன். முதல் ஜோக் பிரசுரமானது அடுத்த மாதம் மீண்டும் நமது ஜோக் பிரசுரமானால் பரிசு இரட்டிப்பு ஆகும். இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும்.

 நமக்கு பரிசு கிடைக்கிறது என்பதை விட இப்படியொரு இதழில் பெயர் பிரசுரம் ஆகிறது என்பதே பெரிய விஷயம்தானே! செப்டம்பர் மாதம் ஜோக் எழுத்தாள ஜாம்பாவான்கள் சகிதா முருகன்சார், இராமன் சார்,சீர்காழி சீதாராமன் சார் இவர்களுடன் கத்துக்குட்டியான எனது ஜோக்கும் தேர்வாகி ஆனந்த அதிர்ச்சியை தந்தது. 

வலைப்பூவில் ஜீவி சார் வாழ்த்திய படி சரஸ்வதி கடாட்சம் கிடைத்துள்ளதை உளப்பூர்வமாக உணர்ந்தேன். இந்த வாரம் குங்குமம், பாக்யாவைத் தொடர்ந்து கார்டூன் ஆன்லைனிலும் எனது படைப்பு. இதை தக்க வைக்க தொடர்ந்து எழுதவும் தரமாக எழுதவும் முயற்சித்து கொண்டே இருக்க போகிறேன். 

நண்பர்கள் தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளித்து வருவது தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறது. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு, முகநூல் நண்பர்கள், வலைப்பூ நண்பர்கள் மற்றும் என் குடும்பத்தினர், கார்டூன் ஆன்லைன் ஆசிரியர் திரு நல்லமுத்து சார், தேர்ந்தெடுத்த நடுவர் திருமயம் பாண்டியன் சார் அனைவருக்கும் எனது நன்றி! நன்றி! நன்றி

ஜோக் இமேஜ் தெரியவில்லை என்பவர்களுக்காக அந்த ஜோக்

 எதிரி துணிவோடு நம் கோட்டை வாசல் வரை வந்துவிட்டான் மன்னா! 
நம்மிடம் உள்ள பணிவோடு சென்று சரணாகதி அடைந்துவிடுவோம் தளபதியாரே!

Comments

  1. வாழ்த்துக்கள் சகோதரா...

    தொடரட்டும் எழுத்துப்பணி...

    ReplyDelete
  2. வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும் சிகரம் தொட...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் பிரசுர வெற்றி!

    ReplyDelete
  4. வெற்றிகள்தொடரட்டும்
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. முகநூலிலும் கண்டேன். வாழ்த்துகள். தொடருங்கள்.

    ReplyDelete
  6. கார்ட்டூன் ஆன்லைனில் பரிசு பெற்ற நண்பருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. தங்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி !

    ReplyDelete
  8. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!