Posts

Showing posts from October, 2016

இந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்!

Image
இந்த வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள்! இந்த வார பாக்யா இதழில் எனது ஜோக்ஸ்கள் ஒரு பக்கம் அளவிற்கு ஐந்து ஜோக்ஸ்கள் இடம் பெற்று உள்ளது.  தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் தகவல் தந்து ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! கீழே ஜோக்ஸ்! தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்தலாமே! நன்றி!

கல்கி தந்த தீபாவளிப் பரிசு!

Image
  வார இதழ்களில் நான் படைப்புக்கள் எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள். பாக்யாவில் வரும் அளவிற்கு மற்ற இதழ்களில் படைப்புக்கள் வரவில்லை. எனினும் விடாமல் குமுதம், விகடன், கல்கி, கண்மணி என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.     நகைச்சுவை எழுத்தாளர் திரு சீர்காழி ஆர். சீதாராமன் சார் போன் செய்து பேசுகையில் சில ஆலோசனைகள் சொன்னார். அதில் ஒன்று  கல்கிக்கு தராசு பதில்களுக்கு கேள்விகள் அனுப்புவது. அவர் சொன்னபடி கேள்விகள் மெயில் அனுப்ப மறு வாரமே ஒரு கேள்வி பிரசுரம் ஆனது.  இந்தவாரமும் கேள்வி அனுப்பி இருந்தேன். அதில் என் கேள்வி பரிசுக்குரிய கேள்வியாக தேர்ந்தெடுக்கப்பட்டு  ரூபாய் 150 பரிசினை பெற்றுள்ளது.     கல்கிக்கு ஜோக்ஸும் அனுப்பி இருந்தேன். அதில் இரண்டு ஜோக்ஸ்கள் பிரசுரம் ஆகி இருக்கிறது.     தீபாவளி பிஸியில் இருந்தமையால் இதை உடனே அறிந்து கொள்ள முடியவில்லை! தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் பகிர்ந்து இருந்தார்கள் அதை தீபாவளி அன்று இரவுதான் பார்த்தேன். நேற்று கேதார கௌரி நோன்பு. கோயில் பணி. பிஸியாக இருந்தமையால்  புத்தகம் வாங்கவும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை!    இன்று புத்தகம் வாங

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 84

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 84 1.    எங்க தலைவர் தவுசன் வாலா பட்டாசு மாதிரி! பத்த வைச்சா பட படன்னு வெடிச்சிருவார்! அப்ப அவரை பீஸ் பீஸா கிழிக்கிறது ரொம்ப சுலபம்னு சொல்லு! 2.    தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு மோதிரம் போட்டது தப்பா போயிருச்சு! ஏன்? மோதிரத்தை அடகுவெச்சு “ரம்” அடிச்சுட்டுவந்து நிக்கறார்! 3.    பொண்ணுக்கு கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே போகாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா? ஏன் இப்ப என்ன ஆச்சு? நாள் தள்ளி போயிருக்குங்கறா! 4.    மாப்பிள்ளை ராக்கெட் விடறேன்னு சொல்லி பெரிய பிரச்சனையை உண்டாக்கிட்டார்! ஏன்? என்ன ஆச்சு பக்கத்து வீட்டு பொண்ணு கொண்டையில ராக்கெட் விட்டுட்டார்! 5.    அந்த பட்டாசு கடை ரொம்ப ஸ்டிரிக்டா வியாபாரம் பண்றாங்களா எப்படி? பாம்பு மாத்திரை வேணும்னா கூட டாக்டர் ப்ரிப்ஸ்கிரிஷன் இருந்தாத்தான் தருவாங்களாம்! 6.    இந்தாங்க வீட் அல்வா? என்ன ரவை அல்வாவை கொடுத்து வீட் அல்வான்னு சொல்றே! வீட்டு அல்வான்னு சொல்ல வந்தேன்! 7.    சனிக்கிழமைன்னா எங்கம்மா எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டிவிடாம விடமாட்டாங்க! ஆயில் தண்டணைன்னு சொ

செல்லாக்காசு!

Image
செல்லாக்காசு!     அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள்.  “என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்? நீங்க பாட்டுக்கு கிளம்பிப் போனா எப்படி? நேத்தே சொன்னேன் இல்லை?”      செல்வம் அமைதியாக லதாவை பார்த்தான்!” எவ்வளவு?” என்றான்.   “ரெண்டுத்துக்கும் சேர்த்து இருபத்தி இரண்டாயிரம் ஆவுது?”     “ என்னது?”   “ஏன் இப்படி மலைச்சி போய் நிக்கறீங்க? நாம என்ன உங்க ப்ரெண்ட் மாதிரி இண்டர்நேசனல் ஸ்கூல்லயா நம்ம பசங்களை சேர்த்து இருக்கோம்? சாதாரண மெட்ரிகுலேசன் ஸ்கூல்தான்! இதுக்கே இப்படி திகைச்சு போய் நின்னா எப்படி? அப்புறம் சொல்ல மறந்துட்டேனே? மளிகை தீர்ந்து போச்சு! பால்காரன் நேத்தே பணம் கேட்டான்.”         செல்வம் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்!” அம்மா தாயே! இன்னும் எதாவது பாக்கி இருக்கா?”      “ இருக்கு! ஆனா இதுக்கே இங்கே வழியைக் காணோம்! அவனவன் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறான்! நீங்க என்னடான்னா? சம்பளத்துக்கும் வழி இல்லை! கிம்பளமும் வாங்க மாட்டேங்கிறீங்க! நல்லா பாத்து வச்சார் எங்க அப்பா மாப்பிள்

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 23

Image
நொடிக்கதைகள்! பகுதி 23 1.செல்ஃபி! கோயிலில் தரிசனத்திற்கு காத்து நிற்கையில்  ”எப்பப்பா வீட்டுக்கு போவோம்?” என்று கேட்டு அழுத பையனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன் சொன்னான் “இன்னும் ரெண்டே நிமிஷம்தான்! கோயில் கோபுர வாசலில் ஒரு செல்ஃபி எடுத்துட்டு உடனே கிளம்பிடலாம்! 2.தண்ணீ!     ”சுப்ரீம் கோர்ட் ஆர்டரை கூட மதிக்கமாட்டேங்கிறான் கர்நாடகா கவர்மெண்ட்! சுத்த மோசம்! என்று பேப்பரை வீசி எறிந்தவர் வாசலில் காத்து நின்றவனிடம் உன் வயலுக்கு தண்ணி விட முடியாது என் போர்லேயே தண்ணி கொஞ்சம்தான் பாயுது!” என்றார். 3. புதுப் போட்டி!    இந்த வருசம் ஆன்வல் டேவுக்கு புதுப்போட்டி வச்சிருக்கோம்!     என்ன அது? ஸ்டூடண்ட்ஸ் செல்பி எடுத்து காட்டணும் யாரோட செல்பி நல்லா இருக்கோ அவங்களுக்கு ப்ரைஸ்! 4. சுகாதாரம்!       தெருமுழுக்க கூட்டிப் பெருக்கி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தியவன் வீடு சாக்கடைகளின் நடுவே அமைந்து இருந்தது. 5. தீபாவளி ஃபண்ட்!     மாசா மாசம் ஃபண்ட் போட்டு தீபாவளிக்கு மளிகை சாமான் வாங்கிட்டோம் என மக்கள் நினைக்க வட்டியில்லாம ரொட்டேஷனுக்கு ஒரு வருசமா ப

கோணலானும் கழுதையும்! பாப்பா மலர்!

Image
கோணலானும் கழுதையும்!  பாப்பா மலர்! கோணங்கிபுரம் என்ற நாட்டை ‘ கோணலான் ’ என்ற மன்னன் ஆண்டுவந்தான் . அவனுக்கு அசட்டு நம்பிக்கைகள் அதிகம் ! காலையில் கோவேறு கழுதையைப்பார்த்தால் நல்லது என்பதற்காக படுக்கையறையில் ஒரு கோவேறுகழுதையை கட்டி வைத்திருந்தான் என்றால் பாருங்கள் . இவனது அசட்டு நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போனது . நிறைய போலிச்சாமியார்கள் அறிமுகம் ஆகி நாட்டை கெடுத்து வந்தனர் . அவர்களின் பேச்சை தட்ட மாட்டான் கோணலான் .      அந்த நாட்டின் மந்திரி மன்னனின் கோணல் புத்திக்கேற்ப ஜால்ரா தட்டி பிழைத்துவந்தான் . இல்லாவிட்டால் அவனுக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடுமே ! சாமியார்கள் கூறினார்கள் என்று பெரிய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த மன்னன் யாகத்திற்கான பொருட்களை மக்களிடம் பிடுங்கி இருந்தான் . இந்த சமயத்தில்தான் அவனுக்கு பல்வலி வந்தது .       வாயெல்லாம் வீங்கி பேசமுடியாமல் இருந்த மன்னனை கண்ட மந்திரி , ” மன்னா ! என்ன ஆயிற்று ஏன் இப்படி முகத்தை உம்மென்று வைத்திருக்கிறீர்கள்?” என்றான் . பல்வலியின் உச்சத்தில்