Posts

Showing posts from April, 2016

தவளை ராணி! பாப்பா மலர்!

Image
தவளை ராணி! பாப்பா மலர்!   முன்னொரு காலத்துல வேங்கடபுரி என்ற நாட்டை வேங்கட நாதன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மூணு பசங்க. இளவரசருங்க மூணு பேரும் குருகுலம் போய் கல்வியும் வில், வாள் பயிற்சியெல்லாம் எடுத்து வாலிபர்களாக வளர்ந்து நின்னாங்க. அவங்களுக்கு திருமணம் பண்ணி வைக்கணும்னு ராஜா நினைச்சாரு.    அந்த சமயத்துல அந்த நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தாரு. வந்தவர் ராஜ தர்பாருக்கு வந்து.  “வேங்கடநாதா, நான் தருகிற மூன்று அம்புகளை ஒவ்வொரு மகனிடமும் ஒரு அம்பு கொடுத்து வில்லில் பூட்டி எய்தச் சொல். அந்த அம்பு எங்கே சென்று விழுகிறதோ அங்கு உனக்கு மருமகள் கிடைப்பாள்”  அவளையே நீ உன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது! அப்படின்னு சொல்லிட்டு அம்புகளை கொடுத்துட்டு புறப்பட்டு போயிட்டாரு.    அரசனும் தன் மகன்கள் கிட்டே அம்புகளை கொடுத்து எய்தச் சொன்னான். முதல் மகன் எய்த அம்பு பக்கத்து நாட்டு அந்தப்புரத்தில் விழுந்தது.  இரண்டாவது மகன் எய்த அம்பு மந்திரி குமாரியின் மடியில் விழுந்தது. மூன்றாவது மகன் எய்த அம்பு ஒரு குளத்தில் இருந்த தவளை மீது விழுந்தது.   இரண்டு மகன்களுக்க

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64.

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 64. 1, தலைவர் போட்டியிடப் போறது இல்லைன்னு சொன்னதும் தொண்டர்கள் எல்லாம் கைதட்டி பாராட்டினாங்களாமே!   டெபாசிட்டாவது மிஞ்சும்ங்கிற சந்தோஷம்தான்! 2. இப்ப எதுக்கு திடீர்னு உங்க வீட்டுக்காரர் மேல பத்துலட்சத்துக்கு இண்ஷூரன்ஸ் எடுக்கணும் பிடிவாதமா இருக்கிறே!   எலக்‌ஷன் பிரசார கூட்டத்துக்கு எல்லாம் நிறைய போக ஆரம்பிச்சிட்டாரே! 3. மனைவி பேச்சை கேக்காததாலே வீட்டுல சண்டையா ஆயிருச்சா அப்படி எதை கேக்காம விட்டே?   அவ ஒரு “கேக்” வேணும்னு கேட்டதை காதில கேக்காம விட்டுட்டேன்! 4. தலைவர் தோத்ததுக்கு காரணம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யறப்போ சொத்தே இல்லைன்னு சொன்னதுதான் காரணமா எப்படி சொல்றே?  சொத்தே இல்லாதவர் எப்படி ஓட்டுக்கு காசு கொடுப்பாருன்னு  அவருக்கு யாரும் ஓட்டு போடலையாம்! 5. தலைவர் எதுக்கு நமத்து போச்சு நமத்துப் போச்சுன்னு புலம்பிக்கிட்டு இருக்கார்?  நீ வேற நடிகை நமீதா வேறக் கட்சியிலே சேர்ந்ததை தாங்கிக்க முடியாம புலம்பிக்கிட்டு இருக்கார் அவரு…! 6. ஒரு சிக்கலை சொல்ல முடியாம மென்னு முழுங்கிக்கிட்டு இருக்கேன்னு  சொன்னியே அப்படி என்ன

வாக்குறுதி!

Image
வாக்குறுதி! தேர்தல் களை கட்டியிருந்தது. இரண்டு பிரதானக் கட்சிகள் தனித்து நிற்க சில்லறைக் கட்சிகள் என்று நான்கு ஐந்து முனைப்போட்டிகள். இதனால் ஒவ்வொரு வாக்கும் சிதறிப்போகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தன இரண்டு பிரதான கட்சிகளும்.   தொகுதிகளுக்கு பார்த்து பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன இரண்டு கட்சிகளும். ஜாதி, மதம், பணம் என்ற அடிப்படையில்தான் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்து இருந்தன இரண்டு கட்சிகளும்.    இருப்பதிலேயே பெரிய தொகுதி அது. தற்சமயம் ஆளுங்கட்சி வசம் இருந்தது. எதிர்கட்சிக்கும் அங்கு பெரிய செல்வாக்கு உண்டு. அந்த தொகுதியின் முடிவை நிர்மாணிப்பதில் அந்த தொகுதியில் அடங்கியிருந்த ஒரு பெரிய கிராமத்தின் பங்கு அதிகம். அங்கு எந்த கட்சிக்கு வாக்கு விழுகிறதோ அந்த கட்சிதான் ஜெயிக்கும். எனவே எல்லாக் கட்சிகளும் அந்த கிராமத்தையே சுற்றி சுற்றி வரும். எல்லா தேர்தல்களைப் போல அல்லாமல் இரண்டு தேர்தல்களாய் பணம் வேறு ஓட்டுக்கு விலை பேசப்படுகிறது. சென்ற முறை ஆளுங்கட்சி நோட்டுக்களை அள்ளிவீச வெற்றிக்கனியை சாதாரணமாக பறித்துவிட்டிருந்தது.   இந்த முறை நிலைமை

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63. 1.    சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குதுன்னு உன் ப்ரெண்ட் புலம்பிக்கிட்டே இருக்கானே எந்த கம்பெனி சிம் யூஸ் பண்றான்? ஊகும்! நீ வேற அவன் லவ் பண்ற பொண்ணுகிட்டே இருந்து சிக்னல் வரலைன்னு புலம்பிக்கிட்டிருக்கான்! 2.    நீங்க எந்த தொகுதியிலே நின்னாலும் மக்கள் ஒரு முடிவோட இருக்காங்க தலைவரே…!   வெற்றியை அள்ளிக் கொடுப்பாங்களா? நீங்க வேற டெபாசிட்டை காலி பண்ணி அனுப்ப ரெடியா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்! 3.    கூட்டணி வேணாம்னு சொல்றதுக்கு தலைவர் ஏன் இவ்வளோ நேரம் எடுத்துக்கிட்டார்…? அணி சேராமலேயே அவரோட “வெயிட்டை” காட்டறாராம்! 4.    எதிரிகள் ஒன்று கூடி விட்டார்களாமே நம் படைகள் எப்படி இருக்கிறது தளபதியாரே!   ”உதிரிகள்” ஆகி பலகாலம் ஆகிவிட்டது மன்னா! 5.    மன்னர் ஏன் புலவர் மேல் கோபமாய் இருக்கிறார்? எதிரி மீது போர் தொடுக்கும் வேளையில் “ தேறா மன்னா!” என்று பாட ஆரம்பித்தாராம்! 6.    கூட்டணியிலேதான் நிறைய தொகுதிகளை அள்ளி கொடுத்திட்டாங்களே அப்புறமும் ஏன் தலைவர் சோகமா இருக்கார்? தொகுதியிலே போட்டியிட வேட்பாளர் கிடைக்கவே இல்லையாமே!

தளிர் சென்ரியு கவிதைகள்!

Image
தளிர் சென்ரியு கவிதைகள்! அழுக்கு கைகளில் பளபளத்தது புது நோட்டு! தேர்தல்! கட்டிய தோரணங்கள் கலர் மாறின அடுத்த கட்சி விஜயம்! மை பூசிக்கொண்டாலும் வலிமை காட்டும் தினம்! தேர்தல் நாள்! விலை போன வயல்கள்! விலை உயர்ந்தது அரிசி! மரபு மாற்ற பயிர்கள்! உயிர் இழந்தன பாரம்பரிய விதைகள்! விதைகள் அழித்து விவசாயம்! வியாபாரியான விவசாயி! மரபு மாற்ற பயிரினங்கள்! அதிவேகச் சாலைகள்! அழித்து விட்டன கிராமத்தின் அடையாளம்! துரித உணவகங்கள்! பெருக்கிவிட்டன! நோயாளிகள்! உதிரிக் கட்சிகள் சேர்த்தன சில்லறை! தேர்தல்! தேர்தல் குதிரை கடிவாளமாய் ஆணையம்! கட்டவிழ துடிக்கும் கட்சிகள்! கோடிகளில் கோட்டை கோவணாண்டியிடம் வேட்டை! வெட்கம் கெட்ட வங்கிகள்! கலந்து விட்ட இதயங்கள்! பிளந்து போட்ட ஜாதி! உலர்ந்து போனது நீதி! ஒன்று பட்டன கட்சிகள்! ஒரே கொள்கை! கிடைக்கும் வரை சுருட்டு! மின்வெட்டை கண்டித்து போராட்டம்! கொக்கிப் போட்டு எடுக்கப்பட்டது மின்சாரம்! ஓடி ஓடி சேகரித்தார்கள் வாக்கு! நிறையவில்லை வாக்காளார்கள்!