Posts

Showing posts from March, 2016

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! இரவு நேரம் இசை இனிக்கவில்லை! கொசு! பற்றிக் கொண்டதும் பற்று அறுத்தது நெருப்பு! விளக்கேற்றி வைத்த போதும் சூழ்ந்து கொண்டது இருள்! நிழல்! ஓசையோடு வாகனங்கள்! அமைதி தொலைத்த சாலைகள்! நள்ளிரவு தழுவ மறுத்ததும் கலைந்து போனது நித்திரை! காற்று! வண்ணமில்லா சித்திரங்கள்! கருவில்லாமல் உருவாகின! நீர்ச் சிதறல்! புரட்டிப் பார்த்தது புத்தகங்களை படிக்கவில்லை! காற்று! துரத்தி வந்தன பிடிக்க முடியவில்லை! வாகன முகப்பில் பூச்சிகள்! முகவரி இழக்கும் முன் முகம் ரசித்தது தேன் சிட்டு! கூந்தலில் பூச்சூடின மரங்கள்! மின்மினி! குறும்புகள் பூக்கையில் குதுகலமாகிறது வீடு! குழந்தை! சுண்ணாம்பு கட்டியில்லை கரும்பலகையில் வளைகோடு! பிறை நிலவு! சுட்டெரிக்கும் சூரியன்! தள்ளிப்போனது காற்று! பெரியவர்களான குழந்தைகள்! புரியாமல் பூரிக்கும் பெற்றோர் குட்டி சுட்டீஸ்! பிஞ்சுகள் நஞ்சாக பெற்றோர்கள் கொடுக்கிறார்கள் விலை! தொலைக்காட்சி! தாங்கி பிடித்தும் தவிக்கவிட்டு சென்றனர் துணி கி

சிறுதுளி!

Image
சிறுதுளி! அந்த பெரிய உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர் மணிவாசகமும் அவரது மகன் கோகுலும். மணிவாசகம் இன்றைக்கு ஊரில் பெரிய செல்வந்தர். ஒரு சாதாரண பணியாளாய் வாழ்க்கையைத் துவக்கியவர் தன் அயராத உழைப்பினால் இன்று ஒரு பெரிய சோப்பு கம்பெனியை நடத்தி வருகிறார்.     உணவருந்தியதும் சர்வர் கொண்டுவந்த பில்லை செட்டில் செய்ய எடுத்தார் மணிவாசகம். “ஐயா! என்று தலையை சொறிந்தபடி நின்றான் சர்வர்.மணிவாசகம் அவனை ஏறிட்டும் பார்க்காமல் நேரே கவுண்டரில் சென்று பணத்தை கட்டிவிட்டு மீதிச்சில்லறையை வாங்கி பையில் போட்டுக்கொண்டார். கார் பார்க்கிங்கிலும் காரை கிளப்பியதும் வந்து நின்ற சேவகனை கவனிக்காதது போல கிளம்பிவிட்டார்.    “சரியான சாவுகிராக்கி” என்று பின்னால் அவன் முணுமுணுப்பது தெரிந்து கோகுலுக்கு அவமானமாகப் போய்விட்டது. அங்கிருந்து ஒருபழக்கடைக்குச் சென்றவர் பழங்களை பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார். இறுதியில் ஒரு பத்து ரூபாய் குறைத்து வாங்கியதும் அவருக்கு மகிழ்ச்சி. இவர் காரில் ஏறும் பொழுது, கடைக்காரன் பெருசா வந்திருதுங்க காரை எடுத்துகிட்டு! பத்து ரூபாய்க்கு பேரம் பேசிக்கிட்டு! என்று சொல்ல மீண்டும்

ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் அன்னப்பாவாடை மகோற்சவம்!

Image
ஸ்ரீ லலிதாம்பிகை கோயிலில் அன்னப்பாவாடை மகோற்சவம்! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது திருமீயச்சூர் என்னும் அழகிய தலம். உலகை எல்லாம் கட்டி ஆளும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை ராஜ தர்பாரில் அமர்ந்து ஆட்சி செலுத்தும் அற்புதமான திருக்கோயில்.   பேரளம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.  திருவாரூர் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் பேரளம் என்னும் இடத்தில் இருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் சிறிய சாலையில் சென்றால் திருமீயச்சூரை அடையலாம்.   ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயிலும் மற்றும் அதனுள்ளேயே ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ சகல புவனேஸ்வரர் என்னும் இளங்கோயிலும் சேர்ந்து அமையப்பெற்றுள்ளது. சோழர் கால கற்கோயிலான இது கலையழகும் சிற்ப நயமும் கொண்டது. இராசேந்திர சோழன், செம்பியன் மாதேவி போன்றோர் திருப்பணி செய்துள்ளனர். கஜப்பிரஷ்ட விமான அமைப்பு உடையது. சூரியன் பார்வதி பரமேஸ்வரரை கஜவாகன ரூபராய் வைத்து  பூஜித்தமையால் விமானம் இவ்வாறு அமைந்து உள்ளது. ஸ்ரீ பரமேஸ்வரரால