Posts

Showing posts from February, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 62

Image
       கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 62 1.    ஒளிரும் நிகழ்காலம்…! மிளிரும் எதிர்காலம்…! வார்டு கவுன்சிலரா இருந்தப்ப பல்பு திருடினதை எல்லாம் இப்படி விளம்பரப் படுத்திக்க வேணாம் தலைவரே…! 2.    உன்னோட ப்ரெண்ட் ஒரு மார்வாடி பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருந்தானே எப்படி இருக்கான்? ஏர்வாடியிலே இருக்கான்! 3.     எதிரி இதுவரை என் முகத்தை பார்த்து ஒரு வார்த்தை பேசியது இல்லை தெரியுமா தளபதியாரே! அவர் படையெடுத்து வரும்போதெல்லாம் நீங்கள் முதுகுகாட்டி ஓடினால் பாவம் அவர் என்ன செய்வார் மன்னா! 4.    என்ன சொல்றே? நம்ம தலைவரை நிறைய பேரு லைக் பண்றாங்களா? ஆமா அவரை கலாய்ச்சு போடற மீம்ஸ் எல்லாம் லைக் அள்ளுதே…! 5.    அந்த டாக்டர் ஒரு குடிகாரர்னு எப்படி சொல்றே? சிரப் எழுதி கொடுத்து காலையிலே ஒரு லார்ஜ் ஏத்திக்கங்கன்னு சொல்றாரே! 6.    குலதெய்வத்தை பார்க்காம வரமாட்டேன்னு உன் வொய்ஃப் சொல்றதுல என்ன தப்பு இருக்குன்னு கோச்சுக்கிறே? அவ பார்க்கறேன்னு சொல்றது குலதெய்வம் சீரியலை! 7.    தலைவரோட நமக்கு நாமே திட்டம் பெரிய வெற்றி அடைஞ்சிடுத்தாமே…?   நீ வேற பொதுக்கூட்டத்துக்கு

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! கடத்தல் தொழில்! கட்டிப் போட முடியவில்லை! காற்று! பறிக்காமல் விட்ட பூக்கள்! தற்கொலை செய்து கொண்டன மாலைநேர மரத்தடி! விரிசல் விட்ட சுவர்கள்! விரைவாய் முளைத்தன குற்றுச்செடிகள்! இருண்ட இரவின் தனிமை பயப்படுத்தி பார்த்தன சில்வண்டுகள்! இருண்ட பாதை! எங்கோ ஒளிரும் விளக்கு வெளிப்படுத்துகிறது கிராமத்தை! பலநாள் சேமிப்பு! ஒரேநாளில் அழிப்பு! இளநீர்! வெம்மை அழைத்து வருகின்றது அம்மை! ஓசையிட்டு உயரே பறக்கிறது உயிரில்லா பறவை! விமானம்! எனக்குமட்டும் திரையிடப்படுகிறது தினம் தோறும்புதுப்படம்! கனவு! மிதித்தாலும்   அழாமல் ஓடுகின்றது மிதிவண்டி! உயிர் இல்லாவிடினும் உடன் வருகின்றது நிழல்! ஈரம் வற்றிப் போனதும் அறுந்து போகின்றது பற்று! உலர்ந்த புற்கள் ஒளியிழந்தது நிலம்! பெரிதாய் தெரிந்தது வெள்ளைத் துணியில் பொட்டாய் கறை! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

Image
அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்! அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது? சோம்பல்! ஆர்வமின்மைதான் முதல் காரணம்.      அலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம்! ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம்! ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம்! அதாவது அலட்சியமாக விட்டு விடுகிறோம். மறுபடியும் அதே ஊழல் வாதிகளை கொண்டாடி நாட்டை அவர்களிடம் கொடுக்கிறோம். இதில் ஒரு நொண்டி சாக்கு வேறு! தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா? என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்து மாலை உறங்கும் வர

பூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்! பாப்பாமலர்!

Image
பூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்! பாப்பாமலர்!   ஓர் வீட்டுல ஓர் அழகான அம்மாவும் குழந்தையும் வசிச்சு வந்தாங்க! அந்த குழந்தை ரொம்ப சின்னது! ரெண்டுவயசுதான் இருக்கும் ஒரே பிடிவாதம் பண்ணும். குளிக்க அழும். தலைசீவிக்க அழும். சாப்பிட அழும். ஒரே அடம்பிடித்து அட்டகாசம் பண்ணும்.        மத்த சமயங்கள்ள சமத்தா அழகா விளையாடிட்டு இருக்கும். கொஞ்சி கொஞ்சிப் பேசும். இவங்க வசிச்ச வீடு ஒர் வயலோரமா அழகா இருந்துச்சு. வயல்ல நிறைய பறவைகள் வந்து போவும். பார்க்க ரொம்ப ரம்மியமா இருக்கும் அந்த வீடு.     அந்த அம்மாவும் பொறுமையா குழந்தையை வளர்த்தாங்க! அந்த வீட்டுக்கு பக்கத்துல ஒரு காடு இருந்துச்சு! காட்டோட எல்லையிலதான் இந்த வீடே இருந்துதுன்னு வைச்சிக்கோங்களேன்! இராத்திரியான ஒரே பயமா இருக்கும். அந்த அம்மாவும் குழந்தையும் மட்டும்தான் அந்த வீட்டுல இருப்பாங்க! அப்பா வெளியூர்ல வேலை செய்யறதாலே மாசம் ஒருதடவைதான் வருவாரு. அப்பா வர நாளை குழந்தை எதிர்பார்த்து ஏங்கி காத்துக்கிட்டு இருக்கும்.    அன்னிக்கு ராத்திரி விளக்கு வெச்சிருச்சு! குழந்தைக்கு அம்மா சோறு ஊட்டிக்கிட்டு இருந்தாங்க! குழந்தை வழக்கம் போல சாப்ப

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5

Image
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5 பூகம்பம்!   ஒரே பக்கமாய் படுத்துக் கிடந்ததில் முதுகு வலித்தது. சற்றே திரும்பிப் படித்தேன்! ஒரே களேபரம்! டீ.வி. செய்தித்தாள்கள் அலறின. என்னவென்று கேட்டேன். ஏதோ பூகம்பமாம்! இன்ஷுரன்ஸ்!     இன்ஷூரண்ஸ் இருக்கா? லைசென்ஸ் இருக்கா? ஆர்.சி எல்லாம் கரெக்டா இருக்கா? இப்படி ஓரம் கட்டு! எல்லாத்தையும் எடு…! எப்போதும் சாலையில் போகும் வாகனங்களை மறித்து கொஞ்சமாய் வழிபறித்து கொண்டிருந்த காவலர் ஒரு நாள் இறந்து போனார் விபத்தில்… பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார்கள் இன்ஷூரன்ஸ் இல்லையாம்! ஓட்டு!    ஓட்டுக் கேட்க வந்தார் ஆளுங்கட்சி எம். எல். ஏ. தொகுதிப் பக்கம் இதுவரை தலைவைத்து படுக்காத அவரை பார்த்ததும் மக்கள் கூடி கேரோ செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. பொறுத்து பொறுத்த பார்த்த எம். எல்.ஏ பொங்கி எழுந்தார். இப்ப என்னய்யா? ஓட்டுக்கு மூவாயிரம் போதாதா?  போன தேர்தல்ல ஆயிரம் தானே கொடுத்தேன்!  சரி சரி! வாங்கிக்கங்க! மறக்காம ஓட்டு போட்டுருங்க! என்றதும் கூட்டம்  அப்படி வழிக்கு வாங்க! என்று சொல்லி கலைந்து போனது. போட்டி!     போட்டியே இல்லாம நீ பாட்டு

சகல நன்மையும் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!

Image
சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்படுவது பிரதோஷ வழிபாடு ஆகும். பிரதோஷத்தில் சனிப்பிரதோஷத்திற்கு மிகவும் சிறப்பு உண்டு. பாற்கடலை கடைகையில் ஆலகால விஷம் வெளிப்பட்டதை சிவனார் உண்ட தினம் சனிக்கிழமை என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் சனிப்பிரதோஷம் சிறப்பு அடைகின்றது. பொதுவாக பிரதோஷம் நித்ய பிரதோஷம் மாதப்பிரதோஷம், மஹா பிரதோஷம் என மூன்று வகைப்படும். நித்ய பிரதோஷக்காலம் : தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை . மாத பிரதோஷகாலம் : பிரதிமாதம் வளர்பிறை , மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை , பின் 3 3/4 நாழிகை . மஹா பிரதோஷம் : இவை மூன்று வகைப்படும் உத்தமம் , மத்யமம் , அதமம் . உத்தம மஹாபிரதோஷம் : சித்திரை , வைகாசி , ஐப்பசி , கார்த்திகை , ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை , பின் 3 3/4 நாழிகை காலம் . மத்யம மஹாபிரதோஷக்காலம் : சித்திரை , வைகாசி , ஐப்பசி , கார்த்திகை , ஆகிய மாதங்களில்த