Posts

Showing posts from January, 2016

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61.

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 61. 1.    தலைவர் பத்ம விருது கொடுக்கிற நிகழ்சியிலே உளறி கொட்டிட்டார்! அப்படி என்ன சொன்னார்? பத்ம விருதுகள் வாங்கிய இவர்களெல்லாம் கூடியவிரைவில் பரம்வீர் சக்ராவும் வாங்க வாழ்த்துக்கள்னுட்டார்! 2.    தலைவர் புதுசா கால் செண்டர் துவக்கனதும் யாரோ வேண்டாதவங்க  போன் போட்டு கலாய்ச்சிட்டாங்களாம்!   என்னன்னு?   கால் செண்டர் நடத்தறீங்களே? ஆட்டுக்கால் கிடைக்குமா? இல்லே கோழிக்கால் கிடைக்குமான்னு கேட்டிருக்காங்க! 3.    ஸ்மார்ட் போனும் புதுப் பொண்டாட்டியும் ஒண்ணுன்னு எப்படி சொல்றே? தடவிக்கொடுத்து வேலை வாங்கணும் கீறல் பட்டா செலவு அதிகம் வைக்குமே! 4.    பேய்ப்படத்துக்கு கூட்டிக்கிட்டு போகச் சொன்னா கூட்டிக்கிட்டே போகமாட்டேங்கறீங்களே…! நிஜத்துல பேயை பார்த்தா மக்கள் பயந்து ஓடுவாங்களே! 5.    இராம நாராயணன் விஜயை வைச்சு படம் எடுத்தா என்ன பேர் வைப்பாரு…?    “குறி” 6.    எங்கள் கட்சி தலைவர் உப்புமா கட்சி தலைவராய் இருக்கலாம்! அதற்காக கூட்டணிக்கு அழைத்து வெறும் உப்புமாவை போட்டு அனுப்பியதை வன்மையாக கண்டிக்கின்றோம்! 7.    படத்துல ஹீரோயின

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4

Image
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 4  போகாதே!       சுடுகாட்டு பக்கம் போகாதேடா!  ஏதாவது காத்து கருப்பு அடிச்சிரப்போவுது! எப்ப பாரு வெய்ய நேரத்துல அங்க சுத்தறியாமே? வேணாண்டா சொன்னா கேளு! தினம் தினம் அறிவுரை சொன்ன தாத்தா இப்போது மரணித்து சுடுகாட்டுக்கு போய்க் கொண்டிருந்தார்.  நாற்காலி!         வீட்டிற்கு புதிதாய் ரோஸ்வுட்டில் நாற்காலி செய்ய கார்பெண்டரை வரச்சொல்லியிருந்தேன். அதோ மூலையிலே கால் உடைஞ்சி தூக்கி போட்டிருக்கேனே அந்த மாதிரி நல்ல வேலைப்பாடா பண்ணனும் சரியா என்று உதாரணம் காட்ட கார்ப்பெண்டர் நாற்காலியை பார்த்தவர் ஐயா இதை ஏன் தூக்கி போட்டுட்டீங்க ஒரு கால்தானே உடைஞ்சிருக்கு சரி பண்ணிடலாம் என்றார்  அப்போதுதான் கவனித்தேன். அவரது ஒரு கால் செயற்கை என்பதை.  விக்கெட்!        இன்னும் ஒரே விக்கெட்!  ஆறே பந்துகள் மீதம் இருக்கின்றன! அவுட் ஆகாமல் 12 ரன்கள் எடுக்க வேண்டும். ஜெயித்துவிடலாம்..! கிரிக்கெட் ரசிகரான அவர் சீட் நுனியில் அமர்ந்து  பார்த்து கொண்டிருக்க பவுலர் வீசிய புல்டாஸ் சிக்சராக மாறியது. களத்தில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அடுத்து மூன்று பந்துகள் ரன்னில்

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3

Image
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 3 வலைக்காதல்! வாட்சப் குருப்பில் ஆரம்பித்து முகநூல் சாட்டிங்கில் வளர்ந்து இன்ஸ்டாகிராமில் வதனத்தை பதிவு செய்து இதயத்தை ஷேரிட் செய்ததில் ட்விட்டரில் மோதலாகி கோபத்தில் ஹேங்க் அவுட்  ஆனதும் ஒ.எல்.எக்ஸில்  எக்ஸேஞ்ச் செய்து  மேட்ரிமோனியில் அவசரத்தில் மூழ்கி மெசெஞ்சரில் முடிந்து போனது வலைக்காதல்.   குடிஅரசு!      மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே குடியரசாகும் பள்ளியில் பிள்ளைகளுக்கு குடியரசு தின உரையாற்றிக்கொண்டிருந்தார் ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஜெயித்த எம்.எல். ஏ. முக்கியஸ்தர்!       காலையில் கடை திறந்து இன்னும் சொல்லிக்கொள்ளும்படி வியாபாரம் ஆகவில்லை! இன்னும் அரைமணியில் கூட்டம் அள்ளும். அதற்குள் அந்த முக்கியஸ்தர் வந்துவிட்டால் போதும் சமாளித்துவிடலாம். இல்லையென்றால் இன்று திண்டாட்டம்தான். தினம் தினம் ஏழரைக்கெல்லாம் வந்துவிடுவார். அவர் வந்து போனபின்னரே வியாபாரம் சூடுபிடிக்கும் இன்னும் காணவில்லையே!  கண்கள் அவரையே தேடிக்கொண்டிருக்க அவர் வந்தார். மூட்டை ஒன்றை அவிழ்த்து கொட்ட சில்லறை நாணயங்கள் சிதறின. மடமடவெ

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! ஈரக்காற்று உஷ்ணமாகியது உடல்! பனி! அழைக்காமலேயே உள்ளேபுகுகிறது தூசு! சாலையோர வீடுகள்! கொத்தி தின்றது காகம் வலிக்காமல் சிரித்தது வாசலில் கோலம்! சுற்றி சுற்றி தேய்ந்து போனது நிலவு! சலனப் பட்டது வாழ்க்கை இழந்தது நீர்! பொறுமையின் மரணத்தில் ஜனனமாகிறது கோபம்! மேகப் பொதிகளை இறக்கிவிட்டது காற்று மழை! தொட்டுவிட துடித்தும் எட்ட முடிவதில்லை! வானுயர்ந்த கட்டிடங்கள்! கண்ணை நோண்டியும் தன்னைத் தந்தது! நுங்கு! பல் முளைத்த வானம்! பார்க்கவந்தன மின்மினிகள்! பிறைநிலா!  ஈர்த்ததும்  இழந்தன உயிர்!  பழங்கள்!  புத்தாடை தரித்தன மரங்கள்!  பூத்து குலுங்கியது!  வசந்தம்!  தடங்கள் அழிபட்டது  தடுமாறிப்போனது!  வரலாறு!  பிம்பம் பிரதிபலிக்கும்  கண்ணாடிகள்!  குழந்தைகள்!  கொஞ்சி மகிழ்கையில் அஞ்சி ஓடுகின்றன துன்பங்கள்! குழந்தைகள்! நகர அழுக்குகள்! நகரமுடியால் உயிர்விட்டன நதிகள்! உறங்கிப் போன விவசாயம்! உயிர்த்து எழுப்பியது மழை! தங்கள் வருகைக்கு நன்ற

தவளைகளின் கச்சேரி! பாப்பா மலர்!

Image
      தவளைகளின் கச்சேரி! ரொம்ப காலத்துக்கு முன்னாடி அழகாபுரி நகரத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தாரு. அவர் அழகாபுரியை அழகா மாத்தறேன் அப்படின்னு சபதம் எடுத்துக்கிட்டு நகரை விரிவு பண்ணாரு. அகல அகலமான சாலைகள். நிறைய அலங்கார விளக்குகள் நாடே ஜெகஜ்ஜோதியா மாத்தினாரு. அந்த சாலைகளில் எந்த தடையும் இல்லாம ரதங்கள் அதிவேகத்தில் பயணிக்கலாம்.      சாலை வசதி இருக்கிறதாலே பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அழகாபுரிக்குள்ள வந்துருச்சு. அந்த தொழிற்சாலைகளிலே வேலை செய்ய நிறைய மக்களும் வந்து சேர்ந்தாங்க. தொழிற்சாலைகள் நிறைய நிலத்தடி நீரை உறிஞ்சுகிச்சு. அதே சமயம் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா காணாம போயிருச்சு. தொழிற்சாலை கழிவுகளும் மக்கள் பெருக்கத்தாலே வீட்டு கழிவுகளும் அந்த நகரத்துலே ஓடின ஆத்துலே கலந்துருச்சு.    தெள்ளிய நீரோடையா பாய்ஞ்ச ஆத்துலே ஒரே கழிவுத் தண்ணி கலங்கலா ஓடுச்சு. ஆற்றிலே வசிச்ச மீனுங்க சின்ன சின்ன உயிரினங்கள், தவளைகள், பூச்சிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப் போச்சுங்க. நகரை அழகு படுத்தறேன் வேலைவாய்ப்பை அதிகப் படுத்தறேன்னு சொன்ன ராஜாவுக்கு இப்ப நாம தப்பு செய்துட்டோம்னு தோணிச்சு.    தொ

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 60

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 60 1.    கொத்தனார் கிட்ட நியாயம் கேட்க போனியே என்ன ஆச்சு? பூசி மெழுகி அனுப்பிச்சிட்டார்! 2.    ஏரியைத் திறந்தது பத்தி விவாதம் பண்ண சபாநாயகர் ஒத்துக்கலையாம்!   அப்புறம் என்ன? மொத்த  சட்டசபை கதவையும் திறந்து விட்டுட்டாங்க வெளிநடப்புக்கு! 3.    மருந்து சீட்டை எடுத்துக்கிட்டு போயும் அந்த மெடிக்கல்ல மருந்து தர மாட்டேன்னுட்டாங்களா ஏன்? நான் பணம் கொண்டு போகலையே! 4.    காலையிலே சாப்பிடாம கோச்சுக்கிட்டு ஆபிஸ்வந்துட்டா சாயந்திரம் என் வொய்ஃப் சமாதானப்படுத்த ஊட்டி விடுவா?   பரவாயில்லையே என் வொய்ஃப் உள்ள வரவிடாமா பூட்டி விடுவா! 5.    பல தடைகளை கடந்துதான் முன்னேற வேண்டும்னு மன்னர் சொல்றாரே எதுக்கு? போரில் தப்பித்து ஓடிவருகையில் ஏற்படும் தடைகளைத்தான் சொல்றாரு! 6.    மன்னரின் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிட்டதா என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே! கரகாட்டகாரியோடு அவர் ஆட்டம் போட்டதை ராணியார் பார்த்து தொலைத்துவிட்டாரே! 7.    எக்ஸ்ட்ரா கவர்லே நிக்கிற பீல்டர் எப்பவும் பந்தை நழுவ விட்டுட்டு இருக்காரே,,,! ஒரு வேளை “எக்ஸ்ட்ரா கவர்” வாங்கிட்ட