கடவுளைக் கண்டேன்!

கடவுளைக் கண்டேன்!


மழை இரவு! விட்டு விட்டு வலுத்த மழையின் சிதறல்கள் நாட்டு ஓடுகளின் மீது விழுந்து தெறித்து ஓடிக்கொண்டிருந்தது. மழையின் காரணமாக எந்த நேரமும் மின்சாரம் தடைபடும் என்பதால் சீக்கிரமே சாப்பிட்டு படுத்த நான் ஒரு தூக்கம் தூங்கி முழித்து அடுத்த தூக்கத்திற்கான ஆயத்தத்தில் இருந்தேன்.

    வெளியே மழையின் சத்தத்தோடு வயல்களில் தவளைகளின் குறட்டை ஒலியும் சேர்ந்து ஓர் மாதிரி இசையை ரீ-ரிகார்டிங்காக தர தூக்கம் கண்ணைச் சொக்கியது.

     அதிகாலை! எழுந்து குளித்து கோயிலுக்குள் பூஜை செய்யச் செல்கிறேன். பிள்ளையார் அப்படியே தும்பிக்கை நீட்டி வரவேற்க ஒரு நிமிடம் அதிர்ந்து, பிள்ளையாரப்பா! நீங்க சிலையா இருப்பீங்க! இப்ப உயிரோட நிஜமா வந்து காட்சி தர்றீங்களே! இது என்னோட பாக்கியம்! கணபதியே சரணம்!  சரணம்!

   “ என்னப்பா சுரேஷா! ஒருவாரமா தொடர்ந்து மழை கொட்டிக்கிட்டு இருக்கு! என்னோட கோயிலும் ஒழுகுது! நீ என்னடான்னா! அதிகாலையிலே நல்ல பச்சைத் தண்ணியிலே என்னை குளிப்பாட்டிடறே! கூட ஒழக்கு பாலையும் வேற என் தலையிலே கவிழ்க்கிறே! எனக்கு ஜலதோஷம் பிடிக்காதா? ஜுரம் வராதா? ஏம்ப்பா இப்படி என்னை சாவடிக்கிறே?

   “ அபச்சாரம்! அபச்சாரம்! நீங்க இப்படி சொல்லலாமா பிள்ளையாரே! நாள் தவறினாலும் உங்களுக்கு பூஜை தவறலாமா?”

   அதுக்காக இப்படி பச்சைத் தண்ணியை என் தலையிலே கொட்டுவியா? இப்படியே போச்சுன்னா நான் கோவிலை விட்டே கிளம்பிருவேன்! நீ காலையிலே அடுப்பை பத்தவைச்சு வெந்நீர் போட்டு குளிக்கிறே இல்லை! எனக்கும் வெந்நீராலா அபிஷேகம் பண்ணு. துவட்டி விட்டு புது வஸ்த்திரம் சாத்து…!

      ஆவட்டும் சாமி! அப்படியே செய்துடலாம்! அப்புறம் ஒரு விண்ணப்பம்!

        என்ன..?

  நம்ம கில்லர்ஜி நண்பர் ஒரு தொடர்பதிவு போட்டு நம்ம சகோதரி கீதா என்னை தொடர சொல்லி இருக்காங்க! கடவுள் கிட்ட எங்களோட ஆசைகளை நிறைவேத்த சொல்லனும்னு.. எல்லோரும் அவங்கவங்க ஆசைகளை நியாயமா கடவுள் கிட்டே கேக்கறதா பதிவுல சொல்லி இருக்காங்க! நானும் எழுதனும்னு இருந்தேன்.. நீங்களே நேரிலே வந்துட்டீங்க… என்னோட ஆசைகளை சொல்றேன்… நிறைவேத்தி வைப்பீங்களா…?

      ஓ உன் பதிவுலக ஆசையை என் கிட்டேயும் காட்டறியா?

    மன்னிக்கணும் பிள்ளையாரப்பா? என்னோட ஆசை மட்டும் இல்லே எங்க பதிவுலக நண்பர்கள் எல்லோரோட ஆசையும் கூட!

   “ ஆசையே துன்பத்திற்கு காரணம்னு சொல்லிட்டு போயிருக்காரு ஒரு மகான்! ஆனாலும் நீங்க திருந்தவே இல்லையே!

   இன்னொருத்தர் ‘ அத்தனைக்கும் ஆசைப்படு!ன்னு சொல்றாரே! நாங்க யாரை பின்பற்றரது பிள்ளையாரப்பா!

      இப்படி தர்க்கம் பண்ணித்தான் நாட்டையே குட்டிச்சுவராக்கிட்டு இருக்கீங்க!

   சரி உன்னோட பத்து ஆசைங்களை சட்டுன்னு  சொல்லு! நான் நிறைவேத்த முடியுமான்னு பார்க்கறேன்!
   எனக்குன்னு தனிப்பட்ட ஆசைங்க எதுவும் இல்லே! எல்லாம் பொதுவுடைமை ஆசைதான்! அதுவும் பதிவர்களோட ஆசைகள்தான்!
  சரிசரி! அதுதான் என்ன?


1.   நாட்டிலே நேர்மையான மக்களுக்கு சேவை செய்யற தலைவர்கள் பதவிக்கு வரணும். ஊழல், சொத்துக்குவிப்பு, லஞ்சம், திருட்டு, வன்முறை, தீவிரவாதம் இதெல்லாம் இல்லாத இந்தியா உருவாகணும்!

2.   ஆறுகள்ல எப்பவும் தண்ணி ஓடணும்  தண்ணிக் கஷ்டமே இருக்க கூடாது! மணல் அள்ள கட்டுப்பாடு விதிக்கணும்! நதிகளை இணைக்கணும்.

3.   கல்வி இலவசமா இருக்கணும்! அவங்கவங்க விருப்பபட்ட கல்வியை கத்துக்கணும்! கல்வி அரசுடைமையா இருக்கணும்!

4.   ஜாதிமுறை.மதம் இதெல்லாம் ஒழியனும்! எல்லோரும் சமம்னு எல்லோரும் உணரணும்!

5.   போதுமான மழை பெய்யணும்! மழைத் தண்ணி ஊருக்குள்ளே புகக் கூடாது!

6.   மருத்துவம் விலை போகக் கூடாது! ஏழை எளியவங்களுக்கும் நல்ல தரமான மருத்துவமும் மருந்தும் கிடைக்கணும்!

7.   பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மறையனும்! பெண்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்தனும்!

8.   பொருளாதார ஏற்ற தாழ்வு இருக்க கூடாது! எல்லோருக்கும் எல்லா பொருளும் கிடைக்கணும்!  

9.   கிருமித் தாக்குதல்,தொற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் பரவாத சுத்தமான சுகாதாரமான தமிழகம் உருவாகணும்!

10. தாய்மொழியை எல்லோரும் நேசிக்கணும்! அது எங்கும் உயர்வா உயர்ந்து நிற்கணும்!

  அவ்வளவுதானாப்பா! உன்னோட ஆசை?

இன்னும் எவ்வளவோ இருக்கு! ஆனா பத்து ஆசைகளை மட்டும்தான் கேக்கணும்னு நண்பர் கில்லர்ஜி சொல்லி இருக்காரே!

உங்க எல்லா ஆசையும் நிறைவேற நான் வேண்டாம் நீங்களே முயற்சி பண்ணா போதும்! நான் உலகை படைச்சேன்! உயிர்களை படைச்சேன்!

   ஜாதியும், மதமும், ஏழை, பணக்காரன், மொழிகள், வன்முறை, கல்வி, ஊழல், இயற்கை அழிப்பு… இதெல்லாம் நானா படைச்சேன்? எல்லாம் நீங்களே உருவாக்கிட்டது! நான் படைச்சது ஆண்- பெண் இரு ஜாதிகளைத்தான்! அது ஓரறிவு  உயிரா இருந்தாலும் சரி ஆறறிவு உயிரா இருந்தாலும் சரி! இனப்பெருக்கத்துக்கு மட்டும் இந்த ரெண்டு ஜாதிகளை படைச்சேன்! அதுக்குள்ளே ஆயிரம் ஜாதிகளை படைச்சு, ஏன் கடவுளைக்கூட ஜாதிக்குள்ளே படைச்சுது நீங்கதானே?

   நான் செய்த ஒரே தப்பு? உங்களுக்கு ஆறறிவு கொடுத்ததுதான்! ஆறாவது அறிவு உங்கள் சிந்தனையை தூண்டத்தான்! ஆனா உங்க சிந்தனை எல்லாம் நன்மைக்கு பயன்படுத்தாம இப்படி தீமைக்கு பயன்படுத்தி உலகத்தையே சீரழிச்சு வைச்சிருக்கீங்க

     இதெல்லாம் சரியாகணும்னா… நான் உங்களோட ஆறாவது அறிவை பறிச்சிக்கிட்டா சரியாயிரும்னு தோணுது… ஆறாவது அறிவுதான் இத்தனை சீர்கேட்டுக்கும் காரணம் …அதை பறிச்சிடறேன்!

   அப்புறம் சுத்தமான ஊர்! சுத்தமான தமிழகம்! சுத்தமான இந்தியா உருவாகிடும்! என்ன ஒண்ணு உங்களாலே சுத்தமா சிந்திக்க முடியாது! செயல்பட முடியாது அவ்வளோதான்…! பண்ணிடுவோமா?....!
   
     மரம் போல மனிதர்களை கற்பனை செய்து பார்க்கவே முடியலையே! வேண்டாம் பிள்ளையாரப்பா! நாங்களே திருந்திடறோம்! முதல்ல பதிவர்கள் நாங்களெல்லோரும் அதுக்கு பிள்ளையார் சுழி போடறோம்… ஆறாவது அறிவை பறிச்சிடாதே…!


   “ அது…!” 

பிள்ளையார் மறைய…

  மணி ஆறு ஆகுது….! கோயிலுக்கு போக வேணாமா? எவ்வளோ நேரம் தூங்குவீங்க?  மனைவி எழுப்ப திடுக்கிட்டு எழுந்தேன்.

  அட எல்லாம் கனவா? ஆனாலும் பிள்ளையார் சொன்னதுதான் தீர்வா?
   யோசியுங்களேன்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வணக்கம் நண்பரே அருமையான சிந்தனை பொதுவுடமை ஆசைகள் அனைத்தும் பிள்ளையார் நிறைவேற்றுவார் என்று எதிர் பார்த்தேன் ஆனால் அவரு எல்லாம் உங்கள் கையில் என்று கையை விரித்து விட்டாரே... அவர் சொல்வதும் உண்மைதானே...

    நாமதானே இத்தனையும் பிரித்து மேய்ந்தோம் அவர் சொல்வது போல ஆறாவது அறிவை இழந்த்தால் மீண்டும் பழைய உலகம் தோன்றும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது...

    பிள்ளையாரிடம் என்னையும் அறிமுக்கப் படுத்தியமைக்கு எனது நன்றி நண்பரே... எடுத்த முறை வந்தாரெனில் எனது செல் நம்பர் அவரிடம் கொடுக்கவும் கையேட்டில் இருக்கிறது நன்றி

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையார் முடிவில் சொன்னார் பாருங்கள் ''அது'' உண்மையிலேயே அது ஸூப்பர்.

      Delete
    2. உடனடி வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா! கண்டிப்பாக இன்னொருமுறை பிள்ளையார் வந்தாரெனில் உங்கள் நம்பரை கொடுக்கிறேன்! நீங்களாவது அவரிடம் வரம் வாங்க முடியுமா என்று பாருங்கள்!

      Delete
  2. சூப்பர் சுரேஷ்! // நான் செய்த ஒரே தப்பு? உங்களுக்கு ஆறறிவு கொடுத்ததுதான்! ஆறாவது அறிவு உங்கள் சிந்தனையை தூண்டத்தான்! ஆனா உங்க சிந்தனை எல்லாம் நன்மைக்கு பயன்படுத்தாம இப்படி தீமைக்கு பயன்படுத்தி உலகத்தையே சீரழிச்சு வைச்சிருக்கீங்க// செம பாயின்ட்....உண்மையும் இதுதான்...

    சரி சரி கவலைப்படாதீங்க சுரேஷ் எல்லா ஆசைகளையும் கலெக்ட் பண்ணி கில்லர்ஜிகிட்டக் கொடுத்துட்டா போதும் அவருதான் இப்ப ப்ரதமர் ஆயிட்டாரே அதனால் அவர் பார்த்துக் கொள்வார். நம்ம பிள்ளையார்கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள்..அந்தத் தும்பிக்கையை நீட்டி கில்லர்ஜி தலையில ஒரு தட்டு...அது ஆசிர்வாதமா? இல்லை குட்டானு அவர்கிட்டயேகேட்டுக்கங்க..ஹஹஹ்ஹ

    ReplyDelete
    Replies
    1. ம்ம் உங்களோட கோபத்தை பிள்ளையார் மூலம் கணக்கு தீர்ப்பது போல இருக்கிறதே...

      Delete
    2. வணக்கம்
      ஐயா
      வித்தியாசமாக அசத்தியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  3. நல்ல ஆசைகள்...

    // தீமைக்கு பயன்படுத்தி // இதுவும் சரி தான்...

    ReplyDelete
  4. பாவம் பிள்ளையாருக்கு கெய்ஸர் வாங்கிக் கொடுங்கள்...

    ReplyDelete
  5. நியாயமான ஆசைகள். ஆறறிவு மணிதருக்குள் அத்தனையையும் விதைத்தது எனும் போது எந்தக்கடவுளை என்ன வேண்டுதல் செய்து தான் என்னாகும் .. கடைசி பந்தி தான் நச்.. சூப்பர்!

    ReplyDelete
  6. ஆஹா சகோ ஆசைகள் அனைத்தும் அருமை..பிள்ளையாருடனான உரையாடலும்....நிறைவேறட்டும்..ஓ நாமளே நிறைவேற்றிடுவோம்...

    ReplyDelete
  7. அருமையான நியாயமாக ஆசைகள்நண்பரே
    நன்றி

    ReplyDelete
  8. கலக்கிட்டீங்க!உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு பிள்ளையார் மாட்டி விடப்பாக்கிறாரே!

    ReplyDelete
  9. ஆசைகள் அருமை...
    கலக்கிட்டீங்க...
    அது...

    ReplyDelete
  10. பிள்ளையார் சொன்னது தான் சூப்பர்.

    கலக்கிட்டிங்க சுரேஷ்.

    ReplyDelete
  11. நீங்களும் கடவுளைக் கண்டுவிட்டீர்கள். கில்லர்ஜி சொன்னடி கடவுளைக் காண்பதற்காக முயற்சித்துவருகிறேன். நேரம் கிடைக்கவில்லை. தங்களது பதிவினை ரசித்தேன். அருமை.

    ReplyDelete
  12. பிள்ளையாரின் கேள்வி சரிதான் நாம் தான் எல்லாத்தையும் சீரழித்தோம்.ஆனாலும் சுடுதண்ணியில் அபிசேஷம் வித்தியாசமான சிந்தனை !

    ReplyDelete
  13. அது!..... அதே தான். சரியான யோசனையைத் தான் சொல்லி இருக்கிறார் பிள்ளையார்.

    அனைவருடைய ஆசைகளும் நிறைவேறட்டும்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!