மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!


மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!


    அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அநேகதம்
தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம்
சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

முழு முதற்கடவுளாம் தும்பிக்கையான் விநாயகருக்கு உகந்த விரதங்கள் பதினொன்று உள்ளன. அவற்றுள் மிகச்சிறப்பானதும் எல்லோரும் பின்பற்றக்கூடியதும், எளிமையானதுமான ஓர் விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஆகும்.  இந்த விரதம் இருந்து இழந்த நிம்மதியை, பொருளை, ஆரோக்கியத்தை, ஐஸ்வர்யத்தை, லஷ்மிகடாட்சத்தை பலர் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். தேய்பிறை சதுர்த்தி தினம் செவ்வாய்க் கிழமையில் வந்தால் மிகவும் விஷேசமாகும். ஒவ்வொரு ஆண்டும் உத்தராயணம், மற்றும் தட்சிணாயண காலத்தில் மாசி, மற்றும் ஆவணி மாதங்களில் வரும் தேய்பிறை சதுர்த்தி மஹா சங்கடஹரசதுர்த்தி என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

      விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
ஒவ்வொரு
மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

"
ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். சங்கடங்களை அழிக்கும் சதுர்த்தி தினம் சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.


   இத்தனை எளிமையானவரான பிள்ளையாரை சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று எளிமையாக அருகம் புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட அனைத்துப் பாவங்களும் அகலும். சங்கடஹர சதுர்த்தி உபவாசம் என்பது அன்று முழுவதும் உணவருந்தாமல் வெறும் பால், மற்றும் பழம் மட்டும் அருந்தி விரதம் இருந்து, இடைவிடாத கணேச தியானம் மனதினில் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று  அருகம்புல், வெள்ளெருக்கம் பூ, வாசனை புஷ்பங்கள் சார்த்தி தேங்காய், பழம், முதலியவை நிவேதனம் செய்து அர்சித்து வழிபடலாம்.

    அன்று இரவு 9.00 மணி வாக்கில் உதயமாகும் சந்திரனை தரிசித்து தீபம் காட்டி வழிபாடு செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இரவில் எளிய உணவாக சிற்றுண்டி மட்டும் உண்ண வேண்டும். இவ்வாறு ஆவணி சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆடி மாதம் வரை 12 சதுர்த்திகள் விரதம் இருந்தால் நினைத்தது கை கூடும் என்பது நம்பிக்கை.

சதுர்த்தியன்று விநாயகர்  அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது  காரிய சித்திமாலை கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த  காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி  உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.


விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்

இவ்விரதங்களில்
ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்

விநாயகர் துதிகள்:
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின்
இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி
மகன்றனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில்
வைத்து அடிபோற்று கின்றேனே.
                                                                                        திருமூலர்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
                                            11ஆம் திருமுறை
பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே. 
                           சம்பந்தர்
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.  
                          கச்சியப்பர் 


குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக்
கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக்
கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி
யோடும் தொடரும் வினைகளே
கருணை
வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப்
பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம்
வெல்லம் மோதகம் தின்னும்
 தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ
முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
                                                                                நாட்டுப்புறப்பாடல்

இது போன்ற தமிழ் துதிகளை பாடியும் விநாயகரை வழிபாடு செய்யலாம்.

விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்து


மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று  பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், <லகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.
  விநாயகர் அகவல் படிக்க இங்கே சொடுக்குங்கள்!  விநாயகர் அகவல்

சங்கட ஹர சதுர்த்தி தினம் நாளை 1-9-2015 செவ்வாய்க் கிழமை வருகின்றது. விநாயகருக்கு உகந்த செவ்வாய் கிழமையில் வரும் இந்த நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோமாக!

(படித்தது தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. விநாயகருக்குறிய நிறைய விடயங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. இலக்கியச் சான்றுகள் தொடங்கி அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து விநாயகப் பெருமானின் புகழைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் தளீர்,
    எனக்கு தெரியாத தகவல்கள், தெரிந்துக்கொண்டோம். பகிர்வுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. விநாயகர் பற்றி நல்ல தொகுப்பு! ஸ்பெஷல் பூசை என்று நாங்கள் செய்வதில்லை என்றாலும் தினமும் பிரார்த்தனை என்பதிலும். ஒரு அடி எடுத்து வைத்தாலும் எல்லாம் நம்மை மீறிய சக்தி...என்று பிரார்த்திப்போம் விக்ன விநாயகரைப் போற்றி!!!

    ReplyDelete
  6. மனம் நிறந்தது உங்கள் பதிவு கண்டு சகோதரரே!
    அனைவருக்கும் விநாயகர் அருள் பாலிக்கட்டும்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!