Posts

Showing posts from August, 2015

குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!

குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்! கடந்த வெள்ளியன்று வரலஷ்மி விரதம். நிறைய பேர் வீடியோ பகிர்கின்றார்களே நாமும் இன்று வீடியோ பகிர்வு ஒன்று இடலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே கொஞ்சம் சிரியுங்க பாஸ் பதிவு போட்டிருந்தேன். வரலஷ்மி மா இண்டிக்கு ராவம்மா…! என்ற பாடலை யூடியுபில் பார்த்தேன். இன்றைய தினத்திற்கு இது பொருத்தமாக இருக்கும் என்று யூ டியுப் டவுன் லோடரில் தரவிறக்கினால் கொஞ்சத்தில் தரவிறங்க வில்லை.    ஏதோ எரர் காட்டிக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்க்க போயிருக்க வேண்டும். அங்கேதான் என் கை சும்மா இருக்கவில்லை. கூகுளில் சர்ச் செய்து வேறு ஒரு யு டியுப் டவுண்லோடரை இன்ஸ்டால் செய்து அந்த பாடலை டவுண்லோடிட்டுவிட்டேன்.       மாலையில் ஏழு மணி அளவில் பதிவிட்டு கொள்ளலாம் அதுவரை சக பதிவர்களின் பதிவுகளை படிக்கலாம் என்று எண்ணி பதிவுகளை வாசித்து கருத்திட ஆரம்பித்தேன். அப்படியே யாதோ ரமணி அவர்கள் தளம் சென்றதும் விளம்பரம் ஒன்று குறுக்கிட்டது. இவர் தளத்தில் இப்படி ஆகாதே என்று அடுத்த தளம் சென்றாலும் படிப்பதற்குள்ளேயே விளம்பரம் ஆக்ரமித்து அதை குளோஸ் செய்தால் அடுத்த

மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!

Image
மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!     அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம் அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம் உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம் முழு முதற்கடவுளாம் தும்பிக்கையான் விநாயகருக்கு உகந்த விரதங்கள் பதினொன்று உள்ளன. அவற்றுள் மிகச்சிறப்பானதும் எல்லோரும் பின்பற்றக்கூடியதும், எளிமையானதுமான ஓர் விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஆகும்.   இந்த விரதம் இருந்து இழந்த நிம்மதியை, பொருளை, ஆரோக்கியத்தை, ஐஸ்வர்யத்தை, லஷ்மிகடாட்சத்தை பலர் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.     ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். தேய்பிறை சதுர்த்தி தினம் செவ்வாய்க் கிழமையில் வந்தால் மிகவும் விஷேசமாகும். ஒவ்வொரு ஆண்டும் உத்தராயணம், மற்றும் தட்சிணாயண காலத்தில் மாசி, மற்றும் ஆவணி மாதங்களில் வரும் தேய்பிறை சதுர்த்தி மஹா சங்கடஹரசதுர்த்தி என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.       விரதத்தில் மிகச் சிறந்ததும் , பழமையானதும் , சங்கடங்கள் அனைத்தையும்

செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!

Image
செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!  ஓர் ஊர்ல ஒரு செட்டியாரு இருந்தாரு. பெரிய வியாபாரி, அதோட பணத்தை வட்டிக்கும் விடுவாரு. அவர் பேரு சக்கரை செட்டியார். நூறு ரூபாய் பணத்துக்கு ஆறு ரூபாதான் வட்டி அதிகமில்லை. மாதா மாதம் பத்துரூபாய் கட்டிவிட வேண்டும். பத்து மாசத்தில் கடனை தீர்த்துவிட வேண்டும்.    பத்துமாச வட்டி அறுபது ரூபாய், பத்திரம் எழுத கூலி முக்கால் ரூபாய், பத்திர மகமைப்பணம் ஒண்ணேகால் ரூபாய் என மொத்தம் அறுபத்திரண்டு ரூபாய் முதலிலேயே பிடித்தம் ஆகிவிடும். மீதி முப்பத்தெட்டு ரூபாய்தான் கொடுப்பார். அதை பத்து மாதங்களில் நூறு ரூபாயாக திருப்பிட வேண்டும். கொடுப்பது முப்பத்தெட்டு ரூபாய். பத்திரம் நூறுரூபாய்க்கு எழுதி வாங்கிவிடுவார்.     வட்டியை இப்படி வறுமையாளர்களிடம் கசக்கி பிழிந்து எடுத்து எடுத்து கொழுத்துப்போன செட்டியார் வெளியூர்களில் கொடுத்த பணத்தை வசூலிக்க ஒரு நாளு அயலூருக்கு போனாரு.     அங்க வசூல் பண்ண பணம் ஒரு ஐம்பதாயிரம் தேறுச்சு! இந்த கதை நடக்கிற காலத்துல நோட்டு எல்லாம் கிடையாது. தங்கக் காசுதான். அதனால இந்த பணத்தை எல்லாம் ஓர் துணிப்பையில் போட்டு இ