கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 42

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 42


1.    உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பந்தல் நிறையக் கூட்டம் வரும்னு சொன்னே காலியா இருக்கேப்பா!
எல்லாரும் வயிறு நிறைக்க போயிருக்காங்க!  வந்ததும் பந்தல் நிறைஞ்சிரும் தலைவரே!

2.    கட்சியோட கொள்கைகளை ஏன் தலைவர் கல்வெட்டா அடிச்சு ஒட்டச் சொல்றாரு?
பின்னால யாரும் கட்சி கொள்கைகளை காத்துல பறக்க விட்டதா சொல்லக் கூடாதாம்ல!

3.   என்னடி இத்தனை நாளா உனக்கு டாப் அப் பண்ண பையனை காணோம்! புது ஆளா இருக்கு!
நெட் ஒர்க்கை மாத்திட்டேண்டி!

4.   கல்யாணம் பண்ணிக்கொடுத்த உங்க பொண்ணோட வாழ்க்கை இருண்டிருச்சுன்னு சொல்றீங்களே மாப்ள என்ன பண்றார்?
ஈ.பி யிலே வேலை செய்யறார்!

5.   சிக்கலை அவிழ்க்கிறேன்னு முன் வந்த மந்திரியார் மீது ராஜா கோவிச்சுக்கிட்டாராமே! ஏன்?
அது மகாராணியின் கூந்தலில் விழுந்த சிக்கலாம்!

6.   நீ எதுக்கு உன்மாமியாருக்கு வொய்ட் பெனாயிலை ஊத்திக் கொடுத்த?
வெளுத்ததெல்லாம் பால்னு நம்பிருவாங்கன்னு சொன்னாங்க! அதை டெஸ்ட் பண்ணத்தான்!


7.    டாக்டர் அந்த பேஷண்டுக்கு அடிக்கடி நினைவு திரும்பி திரும்பவும் மயக்கம் ஆயிடறார்!
நினைவு திரும்பறப்ப நம்ம ஆஸ்பிடல் பில்லை காட்டாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது!


8.   மன்னர் எதற்கு ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைக்க வேண்டும் என்கிறார்?
நிறைய கமல் படங்களை டி.விடியில் பார்த்ததன் விளைவு! நகர்வலம் செல்வதற்கு அரண்மணை ஒப்பனை போதவில்லையாம்!

9.    ஏம்பா கொஸ்டின் பேப்பரை வாங்கிட்டு வேகமா வெளியே நடந்து போறே?
விடைகள் நும் சொந்த நடையில் இருக்க வேண்டும்னு போட்டிருக்கே!

10.  மன்னர் ஏன் வாயில் காப்போனை முறைக்கின்றார்?
அரசகுல திலகமே என்று அழைப்பதற்கு பதில் வாய் தவறி அரசகுல கலகமே என்று அழைத்துவிட்டானாம்!

11. தலைவருக்கு வாய்மை மீது நிறைய பற்று இருக்கு!
   எப்படிச் சொல்றே?
தினமும் வாய் நிறைய லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு வரதை வைச்சுத்தான்!

12. பொண்ணோட ஜாதகத்துல செவ்வாய் ஏழில இருக்கான் அதனால இந்த வரனை தள்ளிப் போடுங்க!
பொண்ணோட வயித்துல புள்ளை மூணுல இருக்கானே ஜோஸ்யரே!

13. புலவரே! நீரே மெட்டமைத்து பாடினீரே! மன்னர் என்ன சொன்னார்?
  கட்டவிழ்ந்த குதிரையாக அல்லவா ஓடிவிட்டார்!

14. உன் பொண்டாட்டிக்கு இரக்க குணம் அதிகம்னு எதைவச்சு சொல்றே?
சண்டையில அடிபட்டுறப்போவுதுன்னு ப்ளாஸ்டிக் சாமானா பாத்து அடிக்கிறாளே அதைவைச்சுதான்!


15. இந்த வீட்டை நிறைய கடன் வாங்கி கட்டியிருக்கென்னு எப்படிசொல்றே?
இந்த வீட்டை கட்டறதுல நிறைய ‘இண்ட்ரெஸ்ட்” எடுத்துக்கிட்டு செய்தேன்னு சொல்றதை வச்சுதான்!

16.  என் மனைவி அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டா!
  அவ்வளோ சாந்தமா?
பார்வை பார்த்தாள்னா போதும்  சப்தநாடியும் அடங்கிரும்!


17. தலைவர் ட்ரெயின்ல போறப்ப ஒருத்தனை அடிச்சுட்டாராமே!
பின்னே! இங்கேயும் சீட் கிடைக்கலையா தலைவரேன்னு நக்கலா கேட்டானாம்!

18. எந்த ஒரு ஆவணமும் இல்லாம போலிஸ் கிட்ட சிக்காம எப்படி பைக் ஓட்டிட்டு வந்தே!
ஹெல்மெட் போட்டுட்டு வந்தேன் விட்டுட்டாங்க!

19. நிறைய கனவுகளோடு அவர் சினிமாத் துறைக்கு வந்தார்!
இப்போ?
நிறைய கடன்களோட தூக்கம் இல்லாம தவிக்கிறார்!

20. அந்த டாக்டர் கிட்டே போய் வந்தவுங்களுக்கு வீட்டுல  ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும்.
   எப்படி?
போட்டோவுல படத்தை மாட்டி தெய்வமா ஆக்கிருவான்னு சொல்ல வந்தேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. நன்றாக சிரித்தேன்
    தொடரட்டும் நகைப்பணி

    ReplyDelete
  2. இண்ட்ரெஸ்ட் உட்பட அனைத்து கலகல...

    தளம் "waiting for makkal.in" என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது... தளம் முழுவதும் திறக்க வெகு நேரம் ஆகிறது... அதுவும் இல்லாமல் :

    (1) Tamil10.com -- ஏழெட்டு மாதமாக இல்லை...
    (2) பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி - இல்லவே இல்லை...
    (3) Tamil Blog News (தின பதிவு) - இல்லவே இல்லை...
    (4) href="http://kelvi.net/topblogs/">Tamil Top Blogs - இல்லவே இல்லை...
    (5) More than a Blog Aggregator (தமிழ் வெளி) இதுவும் ஏழெட்டு மாதமாக இல்லை...

    dindiguldhanabalan@yahoo.com
    9944345233

    ReplyDelete
    Replies
    1. மேற்கூறிய 5 gadget-ம் உங்கள் தளத்தில் இடது பக்கம் உள்ளவை... நன்றி...

      Delete
  3. வாய் விட்டுச் சிரித்தேன்

    ReplyDelete
  4. அனைத்துமே வழக்கம்போல அருமை. வெளுத்ததெல்லாம் பால் அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  5. அனைத்துமே அருமை ...வாய்விட்டுச் சிரித்தோம்...

    ReplyDelete
  6. ஹா... ஹா... ஹா... ரசித்தேன். எல்லாமே அருமை.

    ReplyDelete
  7. ஆஹா அனைத்தும் அருமையாக இருக்கிறது தளீர்,,,,,,,,,,
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  8. நகைச்'சுவை' அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. எல்லாமே நன்றாக இருக்கின்றன. அருமை! எனக்குச் சீக்கிரமாத் திறந்துடுச்சே! :)

    ReplyDelete
  10. ஏம்பா கொஸ்டின் பேப்பரை வாங்கிட்டு வேகமா வெளியே நடந்து போறே?
    விடைகள் நும் சொந்த நடையில் இருக்க வேண்டும்னு போட்டிருக்கே!

    :) :) :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!