Posts

Showing posts from May, 2015

வேத ஜனனிக்கு பிறந்தநாள்!

Image
இன்று என் மகள் வேத ஜனனிக்கு பிறந்தநாள் ஆறு வயதை நிறைவு செய்கின்றாள். வாழ்த்துங்கள் வலையக நண்பர்களே உறவுகளே! நன்றி! நன்றி!  செவ்வாயன்று மீண்டும் சந்திக்கிறேன்!

மறதி!

Image
வயது அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் நினைவுத்திறன் குறைந்து போகிறது எங்கோ படித்ததாக ஞாபகம். எதில் படித்தேன் யார் சொன்னார்கள் என்பது நினைவில் இல்லை. இதாவது பராவாயில்லை! பக்கத்து வீட்டுக்காரர், பால்காரர் கூட என் நினைவில் இருந்து மறந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் என்னுடைய பிரச்சனை.            என்னங்க! சாப்பிடக் கூப்பிட்டு அரைமணி நேரம் ஆகுது! அங்க என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க! என்று மனைவி விளிக்கையில்தான் இன்னும் சாப்பிடவே இல்லை என்று உணர்ந்தேன். என்னுடைய பெரிய பிரச்சனையே இந்த ஞாபக மறதிதான். வீட்டில் மட்டும் அல்ல அலுவலகத்தில் கூட இந்த மறதியால் ஏகப்பட்டப் பிரச்சனைகள். அனுப்ப வேண்டிய மெயிலை அனுப்பாமல் வேண்டாம் என்று சொன்னதை அனுப்பி ஏகப்பட்ட அர்ச்சனைகள் மேனேஜரிடம். போனவாரம் அப்படித்தான்! காய்கறி வாங்க கடைக்குப் போனவன் காய்கறியெல்லாம் வாங்கிய பின்  பணத்தை கொடுத்துவிட்டு காய்கறிக்கூடையை எடுக்க மறந்து  கைவீசி வந்துவிட்டேன்.   முந்தாநாள் மழை பேய்கிறதே என்று குடை எடுத்துப் போனேன் அலுவலகத்திற்கு மழைவிட்டு போனது. குடையையும் அலுவலகத்திலேயே விட்டுவிட்டேன்.   இன்று எதையும் மறக்க

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! வெள்ளை அடித்தார்கள்! மறைந்து போனது! அழுக்கு! குழந்தையின் சிரிப்பில் கரைந்து போயின துக்கங்கள்! விளக்கேற்றி விரட்டினார்கள்! விடாமல் தொடர்கிறது இருட்டு! ஈரம் கசிகையில் அணைந்து போகிறது நெருப்பு!  பற்று அறுத்ததும்  பக்குவப்பட்டது  உதிரும் சருகு!  தாய்க்கு பூச்சூட்டின  மரங்கள்!  உதிரும் பூக்கள்!  குடிபுகுந்த புழுக்கம்!  விரட்டி அடித்தது  காற்று!  உப்பை அள்ளிப் பருகினார்கள்!  இனித்தது!  கடல்!  நகை சூடிய மரங்கள்!  ஜொலித்தன!  மின்மினி! நீரில் மூழ்கியும் நனையவில்லை மரங்கள்! நீர்நிலையில் நிழல்! திருட்டுப் பொருள்! இனித்தது! தேன்கூடு! தேங்கி நிற்கையில் ஓங்கி வளர்கின்றன!  பாசிகள்! மரங்களின் பின்னே மறைந்தன கிராமங்கள்! பதுக்கல் பொருள் பகிரங்கமாய் விற்பனை! இளநீர்! இணைந்தன இமைகள்! பிறந்தது  உறக்கம்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!

நினைவில் அழிந்து போனவர்கள்!

நினைவில் அழிந்து போனவர்கள்! சென்ற வாரம் ஓர் உபநயன முகூர்த்தத்திற்கு செல்லவேண்டியதாய் போய்விட்டது. இந்த மாதிரி பங்க்‌ஷன்களுக்குச் செல்வதை எல்லாம் அம்மா- அப்பா பார்த்துக் கொள்வார்கள். அனைவரும் செல்லவேண்டியதற்கு மட்டும் நானும் மனைவி குழந்தைகளுடன் செல்வேன். சொல்லப் போனால் உறவு வட்டத்தில் என்னை பலபேருக்குத் தெரியாது. கூச்ச சுபாவம் கூட பிறந்தது என்பதால் தனியாக இதே மாதிரி விழாக்களுக்கு போவதை தவிர்த்து விடுவேன்.  இருபது வயதிருக்கும் சமயம் ஒர் சமயம், அப்பா இனிமே நீதான் சொந்த பந்தங்களோட விஷேசங்களுக்குப் போய்வரனும்! அப்பத்தான் உன்னை எல்லோருக்கும் தெரியும். இப்படி வீட்டிலேயே இருந்தா எப்படி? என்று உசுப்பேற்ற ஒன்றிரண்டு விஷேசங்களுக்கு போனேன். வலிய சிலரிடம் அறிமுகம் செய்து கொண்டு பழகினேன். அப்புறம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை! மீண்டும் அம்மா- அப்பாவே விஷேசங்களுக்கு செல்ல ஆரம்பிக்க நான் போவதில்லை.   திருமணம் ஆனபின்பும் கூட அவர்களே சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் போகும் விழாக்களுக்கு நானும் போக முயற்சிப்பது இல்லை! ஒரு பங்க்‌ஷனுக்கு எத்தனை பேர் போவது? நாம் கொடுக்கும் நூறு இருநூறுக்கு அவர்கள

தித்திக்கும் தமிழ்! பகுதி 9 பணியாரம் தோசை தெரியுமா?

Image
தித்திக்கும் தமிழ்! பகுதி 9 தொழில்நுட்பம் வளர்கையில் அது வளர்ச்சிக்கு பயன்படுவதைவிட அழிவுக்கு அதிகம் பயன்படுவது வேதனை. ஒரு காலத்தில் தகவல்தொடர்பு என்பது மிகவும் கஷ்டம் ஆகும். ஓரிடத்தில் இருந்து மற்றொர் இடத்திற்கு செய்தி போக ஆட்கள் மூலம்தான் செய்தி சொல்லமுடியும். பின்னர் புறாத் தூது வந்தது. பின்னர் அஞ்சல், தொலைபேசி என்று வளர்ந்து இன்று இமெயில், வாட்சப் என்று அதன் வளர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தாலும் அதன் மற்றொரு பக்கம் மிகவும் மோசமானதாக அமைகிறது. பெண்களை இழிவாக சித்தரிக்கும் ஆபாசபடங்கள் வாட்சப்பில் அதிகமாக பகிரப்படுவதாக தற்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இன்றைய குழந்தைகள் கூட வாட்சப் பயன்படுத்தும் நிலையில் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படவேண்டும்.  இன்று இதுபோன்ற காரணிகள் ஒழுக்கத்தை கெடுக்கின்றன என்றால் அன்று எது கெடுத்தது என்று தெரியவில்லை! அன்றும் தேவதாசி முறை போன்றவை இருந்துள்ளது. பெண்கள் மேல் மோகம் கொண்டு பலர் இருந்துள்ளனர். பல அடியார்களும் குறிப்பாக அருணகிரி நாதர் முதலியவர்கள் கூட முதலில் பெண் மோகம் கொண்டு பின்னர் கடவுள் பக்திக்கு திரும்பியு

மோகினி வளர்த்த முடியரசி! பாப்பாமலர்!

Image
மோகினி வளர்த்த முடியரசி! பாப்பாமலர்! உதயகிரி என்னும் நாட்டில் அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்த காட்டில்  மோகினி என்ற சூன்யக்காரி வசித்துவந்தது. அது அந்த காட்டின் வழியாக யார் சென்றாலும் பிடித்து வைத்து துன்புறுத்தும். அந்த காட்டிற்குள் யாரும் துணிச்சலாக செல்லமாட்டார்கள். ஒரு சமயம் அந்த காட்டில் வழி தவறிய வேடன் ஒருவன் தன் மனைவி கைக்குழந்தையுடன் நுழைந்துவிட்டான். இராப்பொழுதில் வழி தெரியாமல் தவித்த அந்த தம்பதியரை மோகினிப் பேய் வழி மறித்தது. அந்த குழந்தையின் அழகு மோகினியைக் கவர்ந்தது. தானே ஓர் அழகி! தன்னைவிட இந்த குழந்தை மிக அழகாக இருக்கிறதே என்று வியந்த மோகினி அந்த குழந்தையை அபகரிக்க திட்டம் போட்டாள். மோகினியின் பயங்கர உருவத்தைக் கண்டு வேடனும் அவன் மனைவியும் பயந்தபோது குழந்தையும் பயங்கரமாக அழுதது. அச்சமயத்தில் மோகினி பேசினாள். “ நீங்கள் இருவரும் இந்த காட்டில் இருந்து உயிரோடு வெளியேற வேண்டுமானால் உங்கள் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடுங்கள்! இல்லை என்றால் கொன்றுவிடுவேன்!” என்று மிரட்டினாள். இந்த குழந்தையை ஒன்றும் செய்துவிடாதே! நாங்கள் இறந்தாலும் குழந்தையை கொல்லமாட்டோம்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 36

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! 1.    தலைவர் ஊழல் பண்றவங்களோட எப்பவும் கூட்டு வச்சிக்க மாட்டார்! அவ்ளோ நல்லவரா? நீ வேற எதையும் தானே தனியா பண்ணனும்னு நினைப்பார்! 2.    தலைவர் எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தற இடத்தை மூன்று சுற்று சுற்றி வர்றாரு! மூன்று சுற்று பேச்சுவார்த்தைன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாரு போல! 3.    புலவரே! பொய்யுரைத்த வாய்க்கு போஜனம் கிட்டாது என்பது உண்மையா?   நிஜம்தான் மன்னா! தங்களை புகழும் எனக்கு ஒருவாய் சோறு கிட்டவே இல்லையே! 4.    இப்ப எதுக்கு ஊரில் இருந்து உங்க அம்மாவை வரச்சொல்றே?   நீங்கதானே சொன்னீங்க! மாமியாரை தாயா பார்த்துக்கணும்னு! வரசொல்றேன் பார்த்துக்கங்க! 5.    பார்டர்ல பிரச்சனையானதுல ஆபிஸுக்கு லேட்டா வர்றியா? அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்? நான் சொன்னது என்பொண்டாட்டி பட்டுப்புடவை பார்டரை! 6.    லோன் வாங்கி கட்டியும் திரும்ப லோன் தரமாட்டேங்கறாங்களா? ஏன்?   லோன்வாங்கி வீட்டை கட்டினேன் லோனை கட்டலையே! 7.    ஒரு டஜன் சீப்பு வாங்கச் சொல்லி மானேஜர் உத்தரவு போட்டிருக்காரா ஏன்? யாரோ அவர்கிட்ட ஆபிஸ்ல லஞ்சம் தலைவிரிச

சுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்!

Image
பிரதோஷம் என்றால் என்ன?        ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திரயோதசி திதி, தேய் பிறை திரயோதசி திதிகளில் மாலை 4.30 மணி முதல் 6..00 மணி வரை சிவவழிபாடு மேற்கொள்ள உகந்த நாளாகும். இந்த நேரத்தில் சிவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடுகின்றார். எனவே நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதுவே பிரதோஷகாலம் என்றும் சொல்லப்படுகிறது.    பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும். வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது. தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை. நித்தியப் பிரதோஷம்:  ஒவ்வொரு நாளும் சூர

“ஜெய” லலிதா” கதம்ப சோறு பகுதி 60

Image
கதம்ப சோறு பகுதி 60  “ஜெய” லலிதா!      சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லா ஊகங்களையும் மீறி விடுதலை ஆகிவிட்டார் ஜெயலலிதா. அம்மா இந்தவழக்கில் விடுதலை ஆக யாகங்களும் பூஜைகளும் பரிகாரங்களும் செய்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இனியாவது பணிக்குத் திரும்புவார்களா என்று தெரியவில்லை! நீதிபதி குமாரசாமி அவர்கள் ஜெ வருமானத்திற்கு அதிகமாக பத்து சதவிதத்திற்கும் குறைவாகவே சேர்த்திருக்கிறார். அதுவும் 8.13 சதவீதம் மட்டுமே எனவே குற்றவாளி இல்லை என்று ஒரு கணக்கை கொடுத்து இருக்கிறார். அந்த கணக்கே தவறு என்று திமுகவும், ஆச்சார்யாவும் இன்ன பிற எதிர்கட்சிகளும் முழக்கமிட்டு மேல் முறையீடு செய்யவேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளன. அப்பீல் செய்தாலும் கூட இப்போது ஜெ விடுதலை ஆகிவிட்டார். இதுவே மற்றைய கட்சிகளுக்கு கொஞ்சம் கிலிதான். இன்னும் ஒருவருடங்களே சட்டமன்ற தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஜெ முதல்வரானால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டும். அதற்கு 23ம் தேதிக்குள் ஒருவர் ராஜினாமா செய்ய வேண்டுமாம். ஜெ ஊழல் செய்தார் என்பதை மறந்து அவர் எப்போது பதவி ஏற்பார்? யாரை பதவியிழக்கவைப்