கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 35

  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 35


1.   தலைவர் எதுக்கு ரூபாய் நோட்டுல மாலை போட வேண்டாம்னு சொல்றார்?
  கள்ள நோட்டா அடிச்சு கோர்த்து போட்டுடறாங்களாம்!

2.   தலைவர் முன்னெ வச்ச காலை பின்னே வைக்க மாட்டார்!
  அதுக்காக மூணு மாடி ஏறி வந்தப்புறம் இறங்க மாட்டேன்! தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே!

3.   அந்த டாக்டர் பேஷண்ட் கிட்ட அதிர்ச்சி தர மாதிரி எதுவும் சொல்ல மாட்டாராமே!
ஆமா! பீஸைக் கூட இவ்ளோன்னு சொல்லமாட்டாரு எழுதித்தான் வாங்குவாரு!

4.   மாப்பிள்ளைக்கு சர்க்கரை நோய் இருக்குன்னு சொல்லவே இல்லையே தரகரே!
நான் அப்பவே சொன்னேனே மாப்பிள்ளை கட்டிக் கரும்புன்னு!


5.    இவ்ளோ மருந்து எழுதிக் கொடுக்கறீங்களே டாக்டர் உங்களுக்கு கை வலிக்காதா?
  அதுக்குத்தான் கீழே ஆயிண்ட்மெண்ட் எழுதியிருக்கேன்! அதை வாங்கி என்கிட்டே கொடுத்திட்டு போங்க!

6.    மன்னா! எதிரியிடம் இருந்து ஓலை வந்திருக்கிறது!
அப்படியானால் ஓடி ஒளியவேண்டிய வேளை வந்துவிட்டது என்று சொல்லுங்கள்!

7.   அந்த ஸ்டேஷன்ல மாமூலே  கேட்க மாட்டாங்க!
பரவாயில்லையே! அவ்வளவு சுத்தமா?
நீங்க வேற! பையிலிருந்து அவங்களாவே எடுத்துக்குவாங்கன்னு சொல்ல வந்தேன்!

8.   எலெக்‌ஷன் தேதி அறிவிச்சதும் தலைவர் சுறுசுறுப்பாயிட்டாரு!
பிரசாரத்துக்கு போக ப்ளான் பண்ண ஆரம்பிச்சிட்டாரா?
கள்ள ஓட்டு எத்தனை போட முடியும்னு ப்ளான் பண்ண ஆரம்பிச்சிட்டாரு!

9.   துணி துவைக்கிற வேலையெல்லாம் என் மனைவி என்கிட்ட கொடுக்க மாட்டா?
பரவாயில்லையே!
காயப்போடற வேலையும் மடிச்சு அயர்ன் பண்றதும்தான் என் வேலை!

10.  பையன் எங்கேன்னு கேட்டா மாமியார் வீட்டுக்கு போயிருக்கான்னு சொல்றீங்க! எப்ப கல்யாணம் பண்ணீங்க?
  நீங்க வேற! போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்னு சொன்னேன்!


11.  மாப்பிள்ளை ரொம்பவும் சுய மரியாதைக் காரர் தாலி எல்லாம் கட்ட மாட்டேன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டார்!
அடடே! அப்புறம்!
தாலிக்கு பதிலா ரெண்டு பவுன்ல மோதிரம் போட்டுடச் சொல்லிட்டார்!

12.  அவர்கிட்ட சில்லறைத் தனமா பேசவே முடியாது!
  அப்படியா? என்ன வேலை செய்யறார்?
பஸ் கண்டக்டரா இருக்கார்!


13.  தலைவர் அந்த பள்ளிக் கூடத்திலே ஏடா கூடமா பேசி மாட்டிக்கிட்டாரு!
எப்படி?
என்னைப் போல படிக்காத மேதைகள் பலரை உருவாக்கிய பள்ளி இதுன்னு பேசிட்டாரு!

14.  பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியிலே சேர்த்து மூணு மாசமாச்சு! இன்னும் ஒரு முடிவும் தெரியலை!
  என்னப்பா சொல்றே? பிரசவத்துக்கு மூணுமாசமா?
நான் சொல்றது டீவி சீரியல்லே!

15.  எதிரியின் வருகை அறிந்ததும் முறுக்கேறிய மன்னர்…
  அறைக்கூவல் விடுத்தாரா?
முருங்கை மரம் போல முறிந்து விழுந்துவிட்டார்!

16.  என் மனைவி அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாங்க!
பரவாயில்லையே!
அட நீ வேற பேசறது எல்லாமே அதிர்ச்சியாத்தான் இருக்கும்னு சொல்ல வந்தேன்!

17. மன்னர் எட்டடி பாய்ந்தால் இளவரசர் பதினாறடி பாய்கிறார்?
அவ்வளவு வீரமா?
போரில் தப்பி ஓடி வருவதைச் சொன்னேன்!

18.  அந்த கிரிக்கெட் ப்ளேயரை நம்பி கோடிகளை வாரி இறைச்சாங்க!
இப்போ!
புழுதியை வாரி இறைக்கிறாங்க!

19.  ஒரு வாரம் தொடர்ந்து என் கிட்டே ட்ரிட்மெண்ட் எடுத்துக்கிட்டா சமாளிச்சிடலாம்னு சொல்றீங்களே டாக்டர் சரியாயிருமா?
  என் கடன் பிரச்சனையை சமாளிச்சிருவேன்னு சொன்னேன்!

20.  எல்லா நாட்டையும் பைசா செலவில்லாம சுத்தி பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசைடா!
  ஏன் இப்படி சுத்தி வளைச்சி பேசறே? நம்ம நாட்டோட பிரதமர் ஆகணுன்னு டைரக்டாவே சொல்லேன்!

21. எதிரியின் மண்ணை நம் மன்னர் கவர்ந்துவந்துவிட்டாராமே?
  அட நீ வேறு? அவர் போரில் மண்ணைக் கவ்வி வந்ததைத்தான் அப்படி கவுரவமா சொல்லிக்கிறார்!

22. எண்டரண்ஸ் வரைக்கும் வந்தவன் கடைசியிலே கோட்டை விட்டுட்டான்னு சொல்றியே எந்த காலேஜ்ல சேர்க்க போறே?
அட சும்மாயிருப்பா? நான் சொல்றது என் பையனோட எல்.கே.ஜி அட்மிசனுக்கு!

23. மாமியாருக்கு தொண்டையில புண் வந்திருக்குன்னு தெரிஞ்சதும் தவிச்சு போயிட்டியாமே அவங்க மேல அத்தனை பாசமா?
அவங்களாலே இனிமே கத்தி பேசி சண்டை போட முடியாதே! எனக்கு போர் அடிக்குமே!

24.  பொண்ணு உங்களுக்குத் தூரத்து உறவுன்னு சொல்றீங்களே எந்த முறையிலே!
பொண்ணு மும்பையிலே தூரமா இருக்குதுன்றதைத்தான் அப்படிச் சொன்னேன்!

25. இலவசமா எதைக் கொடுத்தாலும் நம்ம தலைவர் வாங்க மாட்டார்!
  நல்ல கொள்கையாச்சே!
கூடவே தட்சணை வச்சி கொடுக்கணும்னு சொல்ல வந்தேன்!

 26. அந்த கிரிக்கெட் ப்ளேயர் முன்னெல்லாம் பந்தை சிக்சருக்கு பறக்க விடுவாரு!
 இப்ப ?
பெயில்ஸை பறக்க விடறாரு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ரசித்தேன்
    சிரித்தேன்
    நண்பரே நன்றி

    ReplyDelete
  2. சரவெடிகள் நண்பரே அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. இரு பத்து ஐந்து
    பந்துகளை உதைத்திருக்கிறீங்க...

    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  4. வழமை போலவே அசத்தல் தான் வாழ்த்துக்கள் தொடர ...!

    ReplyDelete
  5. # கள்ள நோட்டா அடிச்சு கோர்த்து போட்டுடறாங்களாம்!#
    அதனால் என்ன ,தேர்தல் நேரத்தில் மக்களுக்கு தலைவர் கொடுத்து விடுவாரே :)

    ReplyDelete
  6. # கள்ள நோட்டா அடிச்சு கோர்த்து போட்டுடறாங்களாம்!#
    அதனால் என்ன ,தேர்தல் நேரத்தில் மக்களுக்கு தலைவர் கொடுத்து விடுவாரே :)

    ReplyDelete
  7. கொஞ்சம் அல்ல. அதிகமே ரசித்தோம், சிரித்தோம்.

    ReplyDelete
  8. அசத்தல் சகோ...ரசித்தேன்

    ReplyDelete
  9. அனைத்தையும் ரசித்தேன்... நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!