எனது என்றால் எதுவும் இல்லை!

எனது என்றால் எதுவும் இல்லை!

                          படித்து ரசித்த குட்டிக்கதை!

ஒரு கிழவி கொடும் பாவங்களையே செய்து கொண்டிருந்தாள். அக்கிழவி இறந்தபின், யம தூதர்கள் எரியும் நரகக் குழியில் இட்டார்கள். பெரும்துன்பங்களை அனுபவித்த கிழவி ‘ஓ’ என்று அலறி அழுதாள்.
   அப்போது கருணை நிறைந்த கந்தர்வன் ஆகாய மார்கமாகச் சென்றான். கிழவியின் குரலைக்கேட்டு இரக்கத்தோடு சிறிது கீழிறங்கி விசாரித்தான்.
   கந்தர்வன், ‘பாட்டி! உன்னை தூக்கி கரை சேர்ப்பேன். ஆனால் நீ ஏதாவது புண்ணியம் செய்திருந்தால்தான் அது முடியும் என்றான்.
  கிழவி, ‘ஐயா! ஒருமுறை நான் வாழைப்பழங்களை உண்டு கொண்டிருந்தபோது பசியோடு வந்த சிவயோகி ஒருவருக்கு என்னிடமிருந்தவற்றில் அழுகிய பழத்தைக் கொடுத்தேன். அந்த மகான், அதில் அழுகாத பாதி வாழைப்பழத்தை ‘சிவார்ப்பணம்’ என்று கூறி உண்டு விட்டுச் சென்றார். இதுதான் என் வாழ்நாளில் செய்த ஒரே தர்மம்” என்றாள்.
    கந்தர்வன் சிரித்தான். அப்போது அந்த அடியார்க்குத் தந்த பாதிவாழைப்பழம் அங்கே வந்தது.
“பாட்டி! இந்த பழத்தின் ஒரு பாதியை நான் பற்றிக் கொள்வேன்! மற்றபாதியை நீ பற்றிக்கொள். இதனைக்கொண்டு உன்னை நரகிலிருந்து மீட்டு சுவர்கத்திற்கு சேர்க்கிறேன்” என்றான்.
   அப்படியே கிழவி பாதி வாழைப்பழத்தின் அடிப்பகுதியைப்பற்றிக் கொண்டாள்.மற்ற பாதியை தேவதூதன் பற்றிக் கிழவியைத் தூக்கினான். நரகில் கிடந்த பாவ ஆத்மாக்கள் கிழவியின் காலைப்பற்றிக் கொண்டார்கள். மெல்ல மெல்ல தேவதூதன் கிழவியை தூக்கிக்கொண்டு போனான்.
   நரகம் கடந்து சுவர்கம் நெருங்கியது. இப்போது கிழவி பெருமூச்சு விட்டாள். தன் காலை நான்கு ஐந்து பேர் பற்றிக்கொண்டிருப்பதை நோக்கினாள்.அவளுக்கு வந்ததே கோபம்! ‘அடேய்! என் வாழைப்பழத்தைப் பற்றிக்கொண்டு நான் சுவர்கம் வந்தேன். நீங்கள் யார் என் காலைப் பிடிப்பவர்கள்? என்று கூறிச் சீறினாள்.
 கந்தர்வன் கிழவியின்கொடுங்குரலைக் கேட்டான். “ஏ கிழவியே மகானுக்குத் தந்துவிட்ட பழம் உன் வாழைப்பழமா?உன் வாழைப்பழத்தை நீயே பிடித்துக் கொள்! என்று கூறி விட்டுவிட்டான். கிழவி பழையபடி நரகத்திடையே வீழ்ந்தாள்.
   “எனது என்று எண்ணுபவர்களுக்கு புண்ணிய உலகிலே இடம் கிடையாது.”
 
  அன்னை சாரதா தேவியின் கதையமுதிலிருந்து.

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

  1. அருமையான நீதிக்கதை. பெரியவர்கள் குழந்தைகள் என யாவரும் ரசிக்கும்படி உள்ளது.

    ReplyDelete
  2. நல்ல கருத்துள்ள கதை....
    சகோ

    ReplyDelete
  3. நான் எனது எனும் எண்ணங்கள் மாற மனிதன் தெய்வம் ஆகலம் என்பது இது தானோ? கிழவி மாறது, என்ன செய்ய கர்ம வினை என்பதும் உண்டே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!