Posts

Showing posts from March, 2015

ஏண்டா பொய் சொன்னே? பாப்பாமலர்!

Image
“ஏண்டா பொய் சொன்னே?” கணேஷ் எட்டாவது படிக்கும் சிறுவன், அவனது குடும்பம் நடுத்தர குடும்பம். அவனது பள்ளி அவன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலலவில் இருந்தது. இத்தனை வருடமாக கணேஷ் பள்ளிக்கு நடந்துதான் செல்வான். பிறகு இலவச பயண சீட்டு வரும் அதன் மூலம் சென்று வருவான்.    இந்த வருடம் பள்ளி தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை! இலவச பயணச்சீட்டும் இன்னும் வழங்கவில்லை!  “என்னால் பள்ளிக்கு நடந்து போக முடியாது” என்று அடம்பிடித்தான் கணேஷ்.    இது அவனது தாய்க்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தினமும் பஸ்ஸில் சென்று வருவதானால் பத்துரூபாய் தேவைப்படும். இது அவர்களை பொறுத்தவரை முடியாத காரியம் இல்லைதான். ஆனாலும் திடீரென கணேஷ் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறானே என்று யோசித்தாள் அவள்.   “ஏண்டா என்ன ஆச்சு! இத்தனை வருசம் பாஸ் கொடுக்கறவரை நடந்துதானே போனே? இப்ப என்ன திடீர்னு!” என்றாள்  “அம்மா என்னால நடக்க முடியலை! கால் ரெண்டும் செமயா வலிக்குது தினம் பஸ்ஸிக்கு காசு கொடுத்தாதான் போக முடியும்” என்றான் பிடிவாதமாய் கணேஷ்!         “ சரி சரி! இதுக்காக எல்லாம் ஸ்கூலுக்கு போகாம இருக்காதே! நாளையிலி

நூறு கோடி இந்தியர்களின் கலைந்த கனவு!

Image
    ஒட்டுமொத்த இந்தியாவும் ஏன் உலகமே கூட இன்று இந்திய அணியின் வெற்றியை எதிர்பார்த்து இருக்க மிகச்சாதாரணமான முறையில் தோற்று நூறு கோடி இந்தியர்களின் கனவை  அசாதாரணமாக கலைத்துவிட்டது இந்திய அணி. விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். இதற்காக எல்லாம் கவலைப்படுவது கோஷம்போடுவது உயிரைமாய்த்துக் கொள்வது எல்லாம் வீண் தான். கிரிக்கெட் ஓர் விளையாட்டு. அதில் சிறப்பாக விளையாடுபவர்கள் ஜெயிக்கிறார்கள். மோசமாக ஆடுபவர்கள் தோற்கிறார்கள். அதை உணர்வுப் பூர்வமாக அணுகக் கூடாது என்பதெல்லாம் சரிதான்.          ஆனால் இதையெல்லாம் உலக கிரிக்கெட் ரசிகர்களோ இந்திய கிரிக்கெட் ரசிகர்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த உலகக் கோப்பை ஆரம்பிக்கும் வரையில் இந்திய அணியின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் போட்டியின் முதலிலேயே பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவை வென்றதும் ஓர்  எதிர்பார்ப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஜிம்பாப்வே , வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசத்துக்கு எதிராக கொஞ்சம் தடுமாறினாலும் சுதாரித்து வெற்றியை தன் வசமாக்கி தொடர்ந்து ஏழு வெற்றிகளை பெற்றிருந்த இந்திய அணி இன்று ஆடிய ஆட்டம் மகா மோசம்.       உலகக் கோப்

பொதுத்தேர்வு மோசடிகள்! கதம்ப சோறு பகுதி 57

Image
கதம்ப சோறு பகுதி 57 இந்த பகுதி எழுதி சில மாதங்கள் ஆகிவிட்டது. புதிய மாற்றம் செய்தபின் ஒரு பதிவுதான் எழுதினேன். அதன் பின் தொடர முடியவில்லை. இன்று எப்படியும் எழுதிவிட வேண்டும் என்று முயற்சித்து எழுதுகிறேன். பொதுத்தேர்வு  மோசடிகள்:           தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடந்துவருகின்றது. எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நிறைய குழப்பங்கள், முறையீடுகள், விதி மீறல்கள் என சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. ஆசிரியர்களே வாட்ஸ் அப்பில் கேள்வித்தாளை அனுப்பி உள்ளார்கள் அது ப்ளஸ் ஒன் பொது தேர்வுக்கு. ஒரு பள்ளியில் சரியாக படிக்காத ஆறு மாணவர்களை தலைமை ஆசிரியர் தேர்வெழுத அனுமதிக்க வில்லையாம். அது ஏதோ தனியார் பள்ளி அல்ல. அரசாங்க பள்ளியே! ஏன் இப்படி? 100 சதவித தேர்ச்சி என்ற அழுத்தம் தான் காரணம். இப்போது ஆசிரியர்களை குறை கூறி எந்த பிரயோசனமும் இல்லை. எட்டாம் வகுப்புவரை ஆல் பாஸ் ஆக்கிவிட்டார்கள். மக்கு மாணவர்களும் பத்தாம் வகுப்பு வந்துவிடுகிறார்கள். அப்புறம் தேர்ச்சி காட்ட வேண்டும். குறைந்த தேர்ச்சி என்றால் அதற்கும் பதில் சொல்ல வேண்டும். மாணவர்களை அடிக்கக்

சுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்!

    கடந்த  ஞாயிறன்று  உள்ளூர் பூஜைகள் முடித்து வெளியூர் கோயில் பூஜைக்கு செல்லும்போதே தாமதம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் உள்ளூர் கோயில் தவிர வெளியூர் கோயில் எனக்கு ஒன்றிரண்டுதான். ஆனால் இப்போது அரைடஜனுக்கு கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டது. டியுசன் எடுப்பதை நிறுத்தியதால் வருமானத்திற்கு இப்படி அதிகப்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் சிரமப்படாமல் துட்டு வருமா என்ன?                  ஒன்றிரண்டு கோயிலாக இருந்த போது உள்ளூர் பூஜை முடித்து வெளியூர் சென்று அதிகபட்சம் பத்து மணிக்கெல்லாம் வீடுதிரும்பிவிடுவேன். அப்புறம் வெட்டி ஆபிசர்தான். மாலையில் டியுசன் அதற்கு கொஞ்சம் பிரிப்பேர் செய்வேன். டீவி. அரட்டை என ஜாலியாக பொழுது போகும். இப்போது குடும்பஸ்தன் ஆகிவிட்டதால் கூடுதல் பளு பகல் பொழுதில் டீவி பார்ப்பது குறைந்துவிட்டது. வெளியூரில் இருந்து வருவதற்கே பன்னிரண்டு மணி ஆகிவிடுகிறது.                 ஞாயிறன்று   தச்சூர் சிவன் கோயில் பூஜை செய்துகொண்டிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் பதட்டம் வேறு. அதுவும் இல்லாமல் இரண்டு நாட்களாக படுத்திய ஜலதோஷம் அதிகமாகி தும்மல் மூக்கில் ஒழுகிக்கொண்டு வேலையை தாமதப்ப

சிந்தனைப் பஞ்சம்!

கிட்டத்தட்ட ஓரிரு மாதங்களாகவே ஓர் தடுமாற்றம், தடைபட்டது போன்ற உணர்வு எனக்கு, பதிவுலகில் வழக்கம் போல இயங்கமுடிவதில்லை! என்ன ஆயிற்று என்று தெரியவில்லை! அப்படி ஓர் சிந்தனைப் பஞ்சம் வந்துவிட்டது. முன்பெல்லாம் இப்படி வந்தால் எதையாவது வெட்டி ஒட்டிப் போட்டு பதிவு தேத்திவிடுவேன். ஆனால் இப்போது நல்ல பையன் ஆயிட்டேன் இல்லையா? அதனால் அப்படி எதுவும் செய்ய தோன்றுவது இல்லை.          பொதுவாக  பதிவு எழுத நான் ரொம்ப மெனக்கெடுவது எல்லாம் இல்லை! பிறரைப்போல பல நூல்களை ஆராய்ந்தோ நெட்டில் தேடியோ ஆதாரங்களை எல்லாம் பிரிப்பேர் செய்தோ நான் பதிவு எழுதுவது கிடையாது. அப்படியே இணையத்தில் அமர்ந்து பிறரின் பதிவுகளை படித்து கொண்டிருப்பேன். திடீர் என எதாவது ஸ்ட்ரைக் ஆகும். அதை பில்டப் செய்து அப்படியே பதிவு தேத்திவிடுவேன்.          ஒரு டைம் டேபிள் வைத்திருந்தேன், திங்கள் கவிதை, செவ்வாய் கதை, புதன், கதம்பசோறு, வியாழன், ஜோக், வெள்ளி ஆன்மீகம், சனி, பாப்பாமலர், ஞாயிறு, தமிழ் அறிவு என்று.      அதன்படி அன்றைய தினம்  கணிணியை ஓப்பன் செய்து  உட்கார்ந்து அதற்கேற்ப யோசிப்பேன். அப்படியே தோன்றுவதை வேர்டில் டைப்பி ப்ளாக்கரில் ஒ

இந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்!

Image
இந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்!           உலகக் கோப்பை  காலிறுதி போட்டியில் நான்கு ஆசிய அணிகள் தகுதி பெற்றன. அதில் மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.  பாகிஸ்தான்  அணி மீது அதிக  நம்பிக்கை கொடுத்து அது அரை இறுதியில் இந்தியாவுடன் மோதும் என்று காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்னரே  ஊகங்கள் கிளம்பின. அவைகள் வெறும் கனவுகளாகிவிட்டது.      உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் எழுச்சிமிகு ஆட்டம் வியக்க வைக்கிறது. தொடர்ந்து  ஏழு போட்டிகளில் வெற்றி என்பது மட்டும் அல்ல இதுவரை மோதிய ஏழு அணிகளின் எழுபது விக்கெட்டுக்களையும் சாய்த்து உள்ளது இந்திய பந்துவீச்சு. இதே பந்து வீச்சுதான் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரிலும் முத்தரப்புத் தொடரிலும் எடுபடாமல் போனது. ஆனால் இன்று  அதே பந்து வீச்சு பட்டையைக் கிளப்புகிறது.     நேற்று வங்க தேசத்துடன் ஆன போட்டியில் இந்தியாவின் திட்டமிடல் நன்கு தெரிந்தது. துவக்கத்தில் நிதானமாக ஆடி விக்கெட்டை இழந்துவிடாமல் இருந்தால் கடைசியில் ரன்களை குவித்துவிடலாம். அதே போல் எதிரணி விளையாடும் போது  முதல் பத்து ஓவர்களுக்குள் சிக்கனமாக பந்து

இலங்கை அணி தோற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

Image
    உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி படு தோல்வியை சந்தித்ததும் சில பேருக்கு பயங்கர சந்தோஷம்! உணர்ச்சி வசப்பட்டு பட்டாசு எல்லாம் வெடித்து கொண்டாடுகிறார்கள். ஏதோ எதிரியை வீழ்த்திவிட்ட சந்தோசம் சிலருக்கு. இதனால் ஆகப்போவது என்ன?     96 உலகக் கோப்பை தொடரில் இலங்கையுடன் அடி வாங்கிய பின்னர் இந்திய அணி கொஞ்சம் சுதாரித்துக் கொண்டது என்று சொல்லலாம். அதுவரை இந்திய அணி இலங்கையை ஒரு கத்துக் குட்டி அணியாகவே கருதியது. அப்புறம்தான் இந்திய அணியின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் உண்டானது. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும்  தமிழ் உணர்வாளர்களும் இன்னும் இலங்கை அணியினரை மன்னிக்கத் தயாராக இல்லை! அவர்களை பொறுத்தவரை இலங்கை தோற்றால் கொண்டாட வேண்டும். அது  ராஜபக்சேவாக  இருக்கட்டும் அல்லது மாத்யூஸ் தலைமையிலான கிரிக்கெட் அணியாகட்டும் தோற்றால் மகிழ்ச்சி.                        வெடி எல்லாம் வெடித்து கொண்டாடுகிறார்கள். எனக்கு வருத்தம்தான். இலங்கை அணியின் இப்படிப்பட்ட சரணாகதி நிலையை நான் கூட எதிர்பார்க்கவில்லை! டுமினியின் ஹாட்ரிக்கும் தாஹிர் மற்றும் மோர்கலின் பந்துவீச்சும் சுத்தமாக இலங்கை அணிய

எனது என்றால் எதுவும் இல்லை!

Image
எனது என்றால் எதுவும் இல்லை!                           படித்து ரசித்த குட்டிக்கதை! ஒரு கிழவி கொடும் பாவங்களையே செய்து கொண்டிருந்தாள். அக்கிழவி இறந்தபின், யம தூதர்கள் எரியும் நரகக் குழியில் இட்டார்கள். பெரும்துன்பங்களை அனுபவித்த கிழவி ‘ஓ’ என்று அலறி அழுதாள்.    அப்போது கருணை நிறைந்த கந்தர்வன் ஆகாய மார்கமாகச் சென்றான். கிழவியின் குரலைக்கேட்டு இரக்கத்தோடு சிறிது கீழிறங்கி விசாரித்தான்.    கந்தர்வன், ‘பாட்டி! உன்னை தூக்கி கரை சேர்ப்பேன். ஆனால் நீ ஏதாவது புண்ணியம் செய்திருந்தால்தான் அது முடியும் என்றான்.   கிழவி, ‘ஐயா! ஒருமுறை நான் வாழைப்பழங்களை உண்டு கொண்டிருந்தபோது பசியோடு வந்த சிவயோகி ஒருவருக்கு என்னிடமிருந்தவற்றில் அழுகிய பழத்தைக் கொடுத்தேன். அந்த மகான், அதில் அழுகாத பாதி வாழைப்பழத்தை ‘சிவார்ப்பணம்’ என்று கூறி உண்டு விட்டுச் சென்றார். இதுதான் என் வாழ்நாளில் செய்த ஒரே தர்மம்” என்றாள்.     கந்தர்வன் சிரித்தான். அப்போது அந்த அடியார்க்குத் தந்த பாதிவாழைப்பழம் அங்கே வந்தது. “பாட்டி! இந்த பழத்தின் ஒரு பாதியை நான் பற்றிக் கொள்வேன்! மற்றபாதியை நீ பற்றிக்கொள். இதனைக்கொண்

புகைப்பட ஹைக்கூ 81

Image
புகைப்பட ஹைக்கூ 81 1.       மேகம் கறுக்காமல் பெய்தது மழை! பனி! 2.       வெள்ளை பூசிய வீதிகள்! பனிமழை! 3.       உறைந்து போனது ஊர்! பனிமழை! 4.       உருகி வழிவிட்டதும் உதயமானது சூரியன்! பனிமழை! 5.       நனைந்த மரங்கள்! உறைந்தன! பனிமழை! 6.       விதவையாகாமலே வெள்ளுடை தரித்தன மரங்கள்! பனிமழை! 7.       எதிரியே இல்லை! நடுங்கிக் கொண்டிருந்தனர்! பனிமழை! 8.       உதிர்ந்த பூக்கள்! உருகிக் கரைந்தன! பனிமழை! 9.       வெண்குடையானது வெறும் குடை! பனிமழை! 10.   படையெடுத்து வந்தது தடைபட்டது இயல்பு வாழ்க்கை! பனிமழை! 11.   மழை பொழிந்தும் நீரோடவில்லை! பனிமழை! 12.   வெள்ளை உடுத்திய பூமி! வெட்கத்துடன் வெளிப்பட்டான் சூரியன்! 13.   தடுப்பரண்கள் கட்டியும் தடையைமீறி புகுந்தது குளிர்! 14.   வெண்பஞ்சு பொதிகள்! வீதியில் சிதறின! பனிமழை! 15.   கண்கள் குளிர்கையில் காட்சி மறைந்தது! பனிமழை! 16.   மூடுபனியில் சிக்கி முடி இழந்தன மரங்கள்! பனிமழை! 17.   கொட்டித் தீர்த்ததும் வாரி இறைத்