தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 9

தூக்கில் தொங்கவிட்டு
வேடிக்கை!

குளிர்பான பாட்டில்கள்!


எழுதிவிட்டு 
அழிக்க முடியாது!
வாழ்க்கை!

வண்ணப் பூக்கள்
வண்டுகள்மொய்க்கவில்லை!

வாசலில் கோலம்!

மிதிக்க மிதிக்க
உருண்டு ஓடியது!

மிதிவண்டி!

விரட்ட விரட்ட
 துரத்துகிறது
தூக்கம்!

ஆட்டம் நின்றது
விடைபெற்றது
காற்று!

காத்து நிற்கையில்
பொறுமை இழக்கிறது
மனசு!

கன்று ஈன்றது
பாலூட்டவில்லை!

வாழை!

விரியாத இதழ்களில்
குடிகொண்டது
மவுனம்!

கீறல் விழுந்ததும்
 கீச்சிட்ட வானம்!
இடி மின்னல்!

ஆடை விலக்கியதும்
ருசிக்கவில்லை!

பால்!

சிறகு விரித்தன
வெண் தாமரைகள்
வயலில் கொக்குகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

(மீள்பதிவு)


Comments

  1. அனைத்தும் ஸூப்பர் வரிகள் நண்பரே... வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அனைத்தையும் ரசித்தேன்.....

    ReplyDelete


  3. ஹைக்கூ கவிதைகள்!
    வைராமாக ஜொலிக்குது
    வையகத்தில்
    நண்பரே!

    "கன்று ஈன்றது
    பாலூட்டவில்லை!
    வாழை!

    விரியாத இதழ்களில்
    குடிகொண்டது
    மவுனம்!"

    விலை மதிப்பில்லாத வைர வரிகள்
    வாழ்த்துகள்!
    அருமை!


    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. பொறுமை இழக்கிறது மனம்-பொறுமையாக ரசித்தேன். அனைத்துக்கவிதைகளும் நன்று.

    ReplyDelete
  5. வாழ்க்கை - காற்று உட்பட அனைத்தும் அருமை... அருமை...

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை நண்பரே! அதிலும் அந்த இரண்டாவது.....

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை. ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!